அரசையும் மக்களையும் ஏமாற்றும் வியாபாரிகள்
அரசையும் மக்களையும் ஏமாற்றும் வியாபாரிகள் தற்போது தொழில் நுட்ப புரட்சி காரணமாக நமது இந்தியாவில் டிஜிட்டல் எக்கனாமி வழியாக பணப்பரிவினைகள் நடைபெற நமது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக யுபிஐ மூலமாக பண பரிவர்த்தனைகள் நடைபெற்று வருகிறது. இதனால் பணம் கையில் வைத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழல் இல்லை. திருட்டு பயமும் இல்லை. சில்லறை தொல்லைகள் இல்லை. எங்கிருந்தும் யாருக்கும் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் எளிதாக பொருட்களை வாங்கிக் கொண்டு அனுப்ப வசதியாக உள்ளது. இதனால் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக உள்ளது. இதன்மூலம் நடைபெறும் அனைத்து பரிவர்த்தனைகளும் வாங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால் எல்லா வரவு செலவுகளும் வருமான வரித்துறை கண்காணிக்க ஏதுவாக உள்ளது. தற்போது சரியாக வியாபார கணக்கு வழக்குகளை சமர்ப்பித்து வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத வியாபாரிகளுக்கு வருமானவரித்துறை மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளில் உள்ள குளறுபடிகள் வெளியில் வந்துவிடும் என்பதால் தற்போது யுபிஐ வழியாக நடைபெறும் பண பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொ...