Posts

Showing posts with the label #இந்தியா

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Image
  அகமதாபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் சுமார் 11 மாதங்களாக விற்பனையாளராகப் பணியாற்றி வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்பவர், தன் முதலாளியின் நம்பிக்கையைச் சிதைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில், உரிமையாளர் தனக்கு அவசர வேலை நிமித்தமாக விடுப்பு அளித்துள்ளதாக சக ஊழியர்களிடம் பொய் கூறிவிட்டு அவர் கடையிலிருந்து வெளியேறியுள்ளார். அன்று மாலை வழக்கமான கணக்கெடுப்பின் போது ஒரு தங்க பிரேஸ்லெட் காணாமல் போனதைக் கவனித்த ஊழியர்கள், உரிமையாளர் தர்ஷன்பாயிடம் இதுகுறித்து விசாரித்தபோதுதான் ஹர்ஷிதா யாரிடமும் சொல்லாமல் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் இருந்த நகைகளை முழுமையாகச் சோதனை செய்தபோது, சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், தாலிகள், பதக்கங்கள், காதணிகள் மற்றும் கைக்கடிகாரங்கள் எனப் பெருமளவிலான ஆபரணங்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உடனடியாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹர்ஷிதா நைசாக நகைகளைத் தனது சீருடைக்குள் மற...

இன்றைய11/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

இன்றைய10/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

போலி அடையாளத்துடன் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்

Image
  அதாவது மக்களே…! குஜராத்தின் அகமதாபாத்தில், வந்தே பாரத் ரயிலில் ஒரு மடிக்கணினி (laptop) திருடப்பட்டது…! ரயில்வே போலீசார் விசாரணையைத் தொடங்கியபோது, ​​மடிக்கணினி பையை எடுத்துக்கொண்டு ஒருவன் நடந்து செல்வது சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியிருந்தது…! சீட் முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட கைபேசி எண்ணை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். விரைவில், அந்தச் சந்தேக பேர்வழி இருப்பிடம் டெல்லியில் இருப்பது கண்டறியப்பட்டது…! ஒரு போலீஸ் குழு உடனடியாக டெல்லிக்கு விரைந்தது; அங்குள்ள உள்ளூர் போலீசாரின் உதவியுடன், 'ஹர்ஷித் சௌத்ரி' என்ற பெயரில் ஒருவன் மது அருந்திக்கொண்டிருந்த ஒரு விடுதியை (hotel) அவர்கள் அடைந்தனர்…! போலீசார் அவனைக் கைது செய்ய முயன்றபோது, ​​தான் ராணுவத்தில் 'மேஜர்' (Major) அந்தஸ்தில் இருப்பதாகவும், அந்தப் பை தவறுதலாகத் தன்னிடம் வந்துவிட்டதாகவும் அவன் கூறினான்…! இதைக் கேட்டதும் போலீசார் ஒரு கணம் தயங்கினர்; ஆனால், சிசிடிவி காட்சிகளில் அவர் திருட்டில் ஈடுபட்டது தெளிவாகத் தெரிந்தது. விசாரணையின்போது, ​​அவன் ஒரு போலி ராணுவ அடையாள அட்டையைச் சமர்ப்பித்ததுடன், ...

ஓட்டு போட வந்தவர் மாயம்

Image
  தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுபலட்சுமி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 22ம் தேதி ஓட்டுப்போடுவதற்காக சொந்த ஊரான கண்டமனூருக்கு வந்தார. அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.. தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே நடந்த இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. மாயமான இளம்பெண் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்ட செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பணியாற்றி வந்த சுபலட்சுமி, தேர்தல் வாக்களிப்பதற்காக ஊருக்கு வந்த நிலையில், ஏப்ரல் 22-ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேடுதல் வேட்டையின் முடிவில், கண்டமனூர் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதி, போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் ந...

இன்றைய03/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

போதை பொருள் விற்பனை வட மாநில இளம்பெண் கைது

Image
  போதை பொருள் விற்பனை  வட மாநில இளம்பெண் கைது ♦️ #கேரளம் மாநிலம் கொச்சிக்கு வந்த தாஷ்மி, இளைஞர்களையும் கல்லூரி மாணவர்களையும் குறிவைத்தார். செட்டிகண்டம் பகுதியில் பிரவம் கலால் வரிச் சரகக் குழுவினர் நடத்திய சோதனையின் போது, விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட 9.11 கிராம் எம்.டி.எம்.ஏ என்ற கொடிய போதைப்பொருளுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்டின் பானே தாலுக்காவைச் சேர்ந்த மஹ்தோ முண்டா தாஷ்மி நாகினேயா (23/26) என்பவர், பிரவம் சரக ஆய்வாளர் விஜயராஷ்மி வி. தலைமையில் கைது செய்யப்பட்டார். ♦️கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், கல்லூரி வளாகத்தில் இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக போதைப் பொருளைக் கொண்டு வந்ததாக விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டதாக கலால் வரி அதிகாரிகள் தெரிவித்தனர். 5 கிராம் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்

Image
  தங்கப்பதக்கம் வாங்கிய பெண்ணுடன் நிச்சயதார்த்தம்..   கடைசியில் "அதை" சொன்ன மாப்பிள்ளை!  ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம், சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது படிப்பு, அந்தஸ்து என அனைத்தும் இருந்தும், ஒரு நபரின் பொறுப்பற்ற வார்த்தைகளால் ஒரு உயர்கல்வி மாணவி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது? இங்கே சுருக்கமாக பார்ப்போம். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ரெஹானா.. நன்றாக படிக்கக்கூடியவர்.. முதுகலைப் படிப்பில் தங்கப் பதக்கம் வென்று, ஆளுநரின் கைகளாலேயே கௌரவிக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவருக்கும், பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் ஷாஜகான் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கைநிறையச் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை, தங்கப் பதக்கம் வென்ற மணமகள் என 12 வீட்டாருமே இந்தத் திருமணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருந்தனர். நிச்சயதார்த்தமும் முடிந்தது.. இதனால் ஆரம்ப நாட்க...

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Image
 🚨 கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஸ்பாவில் வேலை பார்த்து வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ருமா சர்ணாபா (21), ரிமா ஷேக் (21) ஆகிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டபூர்வமான பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் போல போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தி வேலை பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல… ⚠️ இது நம் நாட்டின் பாதுகாப்புக்கும், சட்ட அமைப்புக்கும் நேரடியான சவால்! 👉 சட்டவிரோத குடியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தால்: - வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் - உள்ளூர் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் - நாட்டின் பொருளாதாரத்திற்கே கேடு விளையும் அரசாங்கம் இதை மிகக் கடுமையாக எடுத்துக்கொண்டு, சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 🇮🇳 நம் நாட்டின் பாதுகாப்பு முதன்மை! சட்டம் எல்லோருக்கும் ஒன்றே — அதை மீறினால் தண்டனை உறுதி. ✍️ #Sivakpm  #IllegalImmigration #Kerala #LawAndOrder #IndiaFirst

சவுதிக்கு தப்பிச் சென்ற தீவிரவாதியை பிடிக்க முயற்சி

Image
 சவுதிக்கு தப்பிச் சென்ற தீவிரவாதியை பிடிக்க முயற்சி!! பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார் 2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி திரட்டி வந்தார். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்வதால் இவருக்கு கர்கோஷ் (முயல்) என்ற புனைப் பெயர் உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் தான் அவர் போலி பாஸ்போர்ட் மூலம் சவுதி அரேபியா சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை இந்தியாவுக்கு அழைத்துவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காஷ்மீரில் வசித்த உமர், லஷ்கர் அமைப்பின் ஆதரவாளர் ஒருவரின் மகளை, சஜ்ஜாத் என்ற போலி அடையாளத்துடன் ஜெய்ப்பூரில் திருமணம் செய்துள்ளார். இந்தத் திருமண ஆவணங்களை வைத்து போலியாக இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். ஸ்ரீநகர் போலீஸார் நடத்திய விசாரணை தகவல்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் பகிரப்பட்டுள்ளன. இது குற...

மத்திய பிரதேசத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை

Image
  மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை வரவழைத்து, மது புகட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை தேடித்தருவதாக ஆசை வார்த்தை கூறி, இரண்டு இளம்பெண்கள் அவரை போபாலுக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அந்தப் பெண்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக பீயர் குடிக்க வைத்துள்ளனர். அவர் நிலைகுலைந்த தருணத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்த இரண்டு இளைஞர்களுக்கு அந்தப் பெண்ணை இரையாக்கியுள்ளனர். அந்த காமக் கொடூரன்கள் சுமார் 6 மணி நேரம் அந்தப் பெண்ணை மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.     தொடர் சித்திரவதையால் அந்தப் பெண் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அவரை அங்கேயே கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, விரைந்து செயல்பட்ட போபால் போலீசார், சதித் திட்டம் தீட்டிய இரண்டு பெண்கள் மற்றும் வன்கொடுமையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் என மொத்தம் நான்கு பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளன...

வால்பாறை கொண்டை ஊசி வளைவில் விபத்து

Image
 இது அனைவருக்குமான பதிவு... 📢 வால்பாறை செல்லும் சாலையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலான வளைவுகளில் ஒன்று. 🛣️ இந்த பாதையை நன்கு அறிந்தவர்களே மேலிருந்து கீழே வரும்போது மிகக் கவனமாகத்தான் திரும்புவார்கள். ஆனால், புதியவர்கள் பலர் இந்த வளைவின் ஆபத்தை உணராமல் அலட்சியமாக, அதிவேகமாகத் திருப்புவதை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். 🏔️⚠️ இந்த வளைவு திரும்பும் இடத்தில் தடுப்புச் சுவரைத் தாண்டி தவறி விழுந்தால், இடையில் உள்ள 12 மற்றும் 10 ஆகிய வளைவுகளைத் தவிர்த்து, நேரடியாக 9-வது வளைவில்தான் போய் விழ நேரிடும். 📉 களப்பணியின் போது நாங்கள் 13-வது வளைவிலிருந்து நேரடியாக 9-வது வளைவு வரை சென்று அந்த ஆபத்தான சரிவை நேரில் பார்த்திருக்கிறோம். 14-வது வளைவிலிருந்து 13-வது வளைவு வரையிலான சாலை சற்று நேராக இருப்பதால், வாகன ஓட்டிகள் பலரும் அதிவேகமாக வருகிறார்கள். திடீரென வளைவு வரும்போது பிரேக் பிடித்து வேகத்தைக் குறைத்தால் மட்டுமே வண்டியைத் திருப்ப முடியும். அந்தத் தருணத்தில் பிரேக் சரியாகச் செயல்படவில்லை எனில், வாகனம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாவது உறுதி. 🚗💥 தற்போது நடந்த விபத...

காயங்குளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; காப்பாற்ற வந்தவர் என நடித்த காமவெறியன்!

Image
  காயங்குளத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; காப்பாற்ற வந்தவர் என நடித்த காமவெறியன்! வாகன விபத்தில் காயமடைந்து ரத்தம் சிந்திக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு கிடைக்க வேண்டியது பரிவு. ஆனால் காயம்குளத்தில் நடந்தது மனிதநேயத்தை வெட்கப்பட வைக்கும் கொடூரம். விபத்தில் சிக்கிய இளம் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், வர்த்தக அமைப்பு தலைவரான சினில் மேற்கொண்ட பாலியல் தாக்குதல், கேரளத்தை அவமானப்படுத்தியுள்ளது. “எதிர்த்து பேசும் சக்தியே இல்லை,” என்று அந்த பெண் கூறும்போது, நாம் ஒவ்வொருவரும் தலைகுனிய வேண்டிய நிலை. வலியால் துடித்துக் கொண்டிருந்த உடலின் மீது திட்டமிட்டு கையை வைத்த அந்த நபரின் செயல், உதவி அல்ல—வெறும் கொடூரம். மருத்துவர்கள் கூட அந்த பெண்ணின் உடலில் இருந்த காயங்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பணம் கொடுத்து மௌனம் காக்கச் செய்வதும், மிரட்டி வழிமறிக்க முயற்சிகளும் நடந்துள்ளன. குற்றவாளியை காப்பாற்றும் வகையில் போலீஸ் செயல்பட்டதாக அந்த பெண் குற்றம் சாட்டுகிறார். மருத்துவ பரிசோதனைக்கும், ரகசிய வாக்குமூலத்திற்கும் கூட போலீஸ் தயங்கியதற்கு காரணம் என்ன? நீதிக்காக அந்த பெண் நீதிமன்றத்தை நாடும...

நொடிப்பொழுதில் மாறிய நம்பர் பிளேட். டாக்டரின் கிளவர் பிளான்!

Image
  நொடிப்பொழுதில் மாறிய நம்பர் பிளேட்.. ஐதராபாத்தை தலைசுற்ற வைத்த டாக்டரின் கிளவர் பிளான்! நடந்தது என்ன சென்னை: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில், போக்குவரத்து போலீசாரின் வாகன சோதனையின் போது, ஒரு டாக்டர் தன்னுடைய சொகுசு காரின் நம்பர் பிளேட்டை நொடிப் பொழுதில் மாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஹாலிவுட் படமான ஜேம்ஸ் பாண்டில் வரும் தொழில்நுட்பத்தை நிஜ வாழ்க்கையில் குற்றச் செயலுக்காகப் பயன்படுத்திய அந்த டாக்டர் இப்போது போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டிருக்கிறார்.. என்ன நடந்தது? ஐதராபாத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கவுதம் ரெட்டி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு, தன்னுடைய பி.எம்.டபிள்யூ (BMW) சொகுசு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால், ஐதராபாத்தின் முக்கியப் பகுதியான ஜூப்ளி ஹில்ஸ் அருகே போலீசார் வழக்கமான தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போதையில் கார் ஓட்டி வந்த டாக்டர் கவுதமை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். பிறகு அவரிடம் மது பரிசோதனையும் நடத்தப்பட்டது.. அப்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவை வ...

மேற்கு வங்கத்தில் கலவரம். மூன்று பேர் பலி

Image
  பாம்பிற்கு பால் ஊற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார் மம்தாபானர்ஜி, பற்றி எரிகிறது முர்ஷிதாபாத், மேற்கு வங்கத்தில் 30% இஸ்லாமியர்கள் இருக்கும்போதே இந்த நிலைமை என்றால் அவர்கள் 50% மாக உயர்ந்தால் மம்தாபானர்ஜி யே ஆட்சியில் இருக்க முடியாது மேற்கு வங்கத்தில் எந்த ஹிந்துவும் முதல்வராக முடியாது, இதுவே உண்மை. அங்கு 500 பேர் வீடுகளை இழந்துள்ளனர், அவர்கள் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது, சொந்த ஊரிலேயே அந்த மக்கள் அகதிகளாக்கப் பட்டுள்ளனர் தொடர்ந்து 3 முறை முதல்வர் ஆகியிருக்கிறார் மம்தாபானர்ஜி என்றால் அவர் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்று அர்த்தம் இல்லை, இந்த 30% இஸ்லாமியர்கள் ஓட்டு மொத்தமாக மம்தாபானர்ஜிக்கு வாக்கு அளிக்கிறார்கள், அதுவே காரணம், அவர்களுக்கு எவ்வளவு மோசமான ஆட்சி நடத்தினாலும் பரவாயிலை ஆனால் அங்கு இருக்கும் இஸ்லாமியர்களை அரசு ஆதரிக்க வேண்டும, அவர்கள் செய்யும் தேச விரோத செயல்களுக்கு தடையாக இருக்க கூடாது, அவர்கள் எந்த வித கலவரமோ அராஜகமோ செய்தாலும் கண்டுகொள்ள கூடாது, இத்தனைக்கும் மேற்கு வங்கத்தில் இருக்கும் இஸ்லாமியர்கள் பாதிக்கு மேல் பங்களாதேஷை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க...

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

Image
  🇮🇳ஜம்முவில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டதாகத் Touseef என்ற நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.  👉ராணுவப் பொதுப் பள்ளியில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு, ராணுவப் பகுதிக்குள் சென்று வர முறையான அனுமதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது செல்போனைப் பரிசோதித்தபோது, பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று நபர்களின் எண்கள் "Chacha Gujjra", "Ahmiii" மற்றும் "Ali bhi" ஆகிய பெயர்களில் சேமிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

ஐடி நிறுவனத்தில் பாலியல் தொல்லை. ஒருவர் கைது

Image
 முதலில் ஐடி வேலை..! அடுத்து லீவு போட்டுவிட்டு ஹோட்டலுக்கு போகணும். "பெண் ஊழியர்களை மிரட்டி பலாத்காரம்". இம்புட்டு பெரிய நிறுவனத்திலா..? அதிர வைக்கும் உண்மை.!! மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரம் சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மையமாக மாறிவருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி பெண்களை ஏமாற்றிய அசோக் கராத் மற்றும் பெண்களின் அந்தரங்கப் படங்களை எடுத்து மிரட்டிய ரவீந்திர எரண்டே ஆகியோரின் விவகாரங்கள் அடங்குவதற்குள், தற்போது ஒரு பிரபல ஐடி (IT) நிறுவனத்தில் அரங்கேறியுள்ள பாலியல் வன்கொடுமைப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பன்னாட்டு ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி, பெண் ஊழியர்களின் மதம் குறித்து அவதூறாகப் பேசுவது மற்றும் ஆபாசமான செய்கைகளால் அவர்களைத் துன்புறுத்துவது போன்ற செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஒரு ஆண் ஊழியரை மதம் மாறச் சொல்லி வற்புறுத்திய அதிர்ச்சித் தகவலும் வெ...

தடை செய்யப்பட்ட எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த டென்மார்க் மர்ம மனிதர்

Image
  🇮🇳ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டம் காஜுவாலா பகுதியில், சர்வதேச எல்லைக்கு மிக அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய ரெனே என்ற நபர் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ளார். 👉பாதுகாக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட எல்லைப் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் பிகானேரில் உள்ள கூட்டு விசாரணை மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவரது பாஸ்போர்ட் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

வாகனத்தில் லிஃப்ட் கேட்டு சென்ற பெண் விபத்தில் மரணம்

Image
  📌கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே நிகழ்ந்த இந்த விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. 📌ஏப்ரல் 6, 2026 ஆலுவா - எடப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் முட்டம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. 📌 லிஃப்ட் கேட்ட பயணம்: நந்தனா (23) எடப்பள்ளி நோக்கிச் செல்வதற்காக பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அஷ்வின் ஆண்டனி என்பவரிடம் நந்தனா 'லிஃப்ட்' கேட்டுப் பயணித்துள்ளார். 📌 இவர்கள் சென்ற பைக் முட்டம் பகுதியில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. லாரி மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது பலமாக மோதியது. பாதிப்புகள் 📌பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நந்தனா, கார் மீது மோதி கீழே விழுந்தபோது அவருக்குத் தலையில் மிகப்பலத்த காயம் ஏற்பட்டது. ஹெல்மெட் அணிந்திருந்தாரா என்பது குறித்த தெளிவான தகவல் இல்லை என்றாலும், அடிபட்ட வேகம் அதிகமாக இருந்ததால் அவர் சம்பவ இடத்திலே...

பெங்களூருவில் நடந்த இதயத்தை உலுக்கும் தற்கொலைச் சம்பவம்.

Image
  பெங்களூருவில் நடந்த இதயத்தை உலுக்கும் தற்கொலைச் சம்பவம்.  பெங்களூருவின் வடக்கு பகுதியில் உள்ள ஹென்னூர் அருகே இருக்கும் 'பாரதிய சிட்டி' (Bhartiya City) என்ற பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  தெலுங்கானாவைச் சேர்ந்த பானு சந்தர்  (32) மற்றும் அவரது மனைவி பீபி ஷாஜியா (31) ஆகிய இருவரும் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் திருமணமாகி வாழ்ந்து வந்தனர்.  ஷாஜியா பெங்களூருவில் உள்ள IBM நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.  பானு சந்தர் சம்பவம் நடந்த நேரத்தில்  வேலை எதுவும் பார்க்கவில்லை. அவர் முன்பு அமெரிக்காவில் பொறியாளராகப் பணியாற்றி அங்கு வேலை இழந்ததைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டு அவர் இந்தியா திரும்பியுள்ளார். நேற்று (மார்ச் 30, 2026), இந்தத் தம்பதியினருக்கு இடையே ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பானு சந்தர், தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.  வேலை முடிந்து வீடு திரும்பிய ஷாஜியா, நீண்ட நேரம் கதவைத்...