Posts

Showing posts with the label #முக்கியசெய்திகள்

பேருந்து ஆட்டோ மோதல். கர்ப்பிணி பலி

Image
  நெல்லை; தருவை அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 மாத கர்ப்பிணி பெண் சையது அலி பாத்திமா உயிரிழப்பு படுகாயமடைந்த அவரது கணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை #Nellai #Accident #Auto #Bus #ThanthiTV

ஊரி செக்டாரில் ஊடுருவல் முறியடிப்பு - பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Image
 🇮🇳 ஊரி செக்டாரில் ஊடுருவல் முறியடிப்பு - பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை⚡ 👉ஜம்மு-காஷ்மீரின் ஊரி பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இணைந்து நேற்று இரவு வெற்றிகரமாக முறியடித்துள்ளன. 👉 அவனிடமிருந்து ஏ.கே துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நமது வீரர்களின் துரித செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

தீவிரவாத பிரச்சாரம் செய்த இளைஞர் கைது

Image
  21 வயது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் மாணவன் அயான் யூசுப் ஷேக் என்பவனை மகாராஷ்டிரா ATS கைது செய்துள்ளது 👇 அவன் பாகிஸ்தான் அடிப்படையிலான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் ISIS போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும் டெலிகிராம் குழுக்களில் தீவிரவாத பிரச்சாரங்களைப் பகிர்ந்ததாகவும் மேலும் இரண்டு மாணவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவனது சாதனங்களில் JeM தலைவர் மசூத் அஸார், ISIS வீடியோக்கள் மற்றும் தீவிரவாத பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆம்னி பேருந்தில் தீ விபத்து

Image
 திருநெல்வேலியில் இருந்து நேற்று இரவு 36 பயணிகளுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஒரு ஆம்னி பஸ் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் இளைப்பாற நிறுத்தப்பட்டுள்ளது. அப்போ எதிர்பாராத விதமாக அந்த ஆம்னி பஸ் உடைய பின் டயர் வெடித்து பஸ் தீப்பிடித்து எறிய தொடங்கியது.😪😪😪 இதைப் பார்க்க அதிர்ச்சி அடைந்த பஸ் ஓட்டுநர் உள்ளே இருந்த பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினார். பயணிகள் அனைவரும் பஸ்ல இருந்து இறங்குனதும் பஸ் முழுக்க தீப்பரவி எரிய ஆரம்பிச்சிருக்கு.😪😪😪 இதை அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 20 நிமிடங்கள் போராடி அந்த தீயை அணைத்துள்ளனர். சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கமேனி கோட்டைக்குள் புகுந்து 'ஸ்கெட்ச்' போட்டது எப்படி?

Image
  மொசாட்.. அந்தப் பெயர் கேட்டாலே அதிரும்! கமேனி கோட்டைக்குள் புகுந்து 'ஸ்கெட்ச்' போட்டது எப்படி? உலக வரைபடத்தில் ஒரு சிறிய புள்ளி போன்ற நாடுதான் இஸ்ரேல். ஆனால், அதன் உளவு அமைப்பான மொசாட் (Mossad) நினைத்தால், உலகின் எந்த மூலையிலும் இருக்கும் எதிரியைத் தூக்க முடியும் என்பதற்கு இது மற்றுமொரு சாட்சி. ஈரானின் உச்ச தலைவர் கமேனி தங்கியிருந்த 'Leadership House' என்பது சாதாரண இடமல்ல; அது ஒரு இரும்புக்கோட்டை. அந்தப் பாதுகாப்பு வளையத்தை மொசாட் எப்படி உடைத்தது? ஸ்கெட்ச்: பிப்ரவரி 28, காலை 8:00 மணி! கடந்த சில மாதங்களாகவே, ஈரானின் ராணுவக் கிடங்குகள் மற்றும் அணுசக்தி மையங்களுக்குள் 'சைலன்ட்' ஆக நுழைந்து தகவல்களைச் சேகரித்து வந்தது மொசாட். இந்த ஆபரேஷனுக்கு இஸ்ரேல் வைத்த பெயர் 'ரோரிங் லயன்' (Roaring Lion). மொசாட் கையாண்ட அந்த 4 தந்திரங்கள்: உள்ளிருந்து வேலை செய்த 'கருப்பு ஆடுகள்': ஈரான் ராணுவத்தின் (IRGC) மிக உயர்மட்டத்திலிருந்தே சிலரைத் தனது பக்கம் இழுத்தது மொசாட். கமேனி எப்போது சுரங்கப் பாதைக்குச் செல்வார், அவரது குடும்பத்தினர் எப்போது அங்கு வருவார்கள் என்ற துல...

7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 8 வயது சிறுமி.🙏🙏

Image
  7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 8 வயது சிறுமி.🙏🙏 கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்🙏 கோவையைச் சேர்ந்த திரு. சந்தோஷ் (78வது வார்டு கவுன்சிலர்) & திருமதி:சுகன்யா  தம்பதியின் மகளான வெண்பா, கடந்த 23ம்தேதி மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். 😭😭 நெஞ்சம் தாங்கா துயரத்திலும், மகளின் உடல்உறுப்புகளை (சிறுநீரகம், கல்லீரல், தோல், கண்கள்) தானம் செய்ய பெற்றோர் முன்வந்த நிலையில், 7 பேருக்கு அவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார். 🙏🙏😭♥️ சிறுமியின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.🙏🙏🙏 "எல்லாம்வல்ல இறைவன் அக்குடும்பத்தினருக்கு இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையையும், மன அமைதியையும் அருள்புரிவானாக. அவர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம். 🙏✨" அவர்களுக்காக பிராத்திப்போம்🙏🙏

பிரதமர் வருகை: காவல் ஆணையர் ஆய்வு

Image
  பிரதமர் வருகை: காவல் ஆணையர் ஆய்வு: மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு மோடி வருகை தருவதன் காரணமாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் மாநகர காவல் ஆணையர் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோவிலில் தற்போது ஆய்வு மேற் கொண்டனர்.  பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி மதுரையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வருகை தருகிறார்.  மதுரை வருகை தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.  இந்த நிலையில் பாரத பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் அவரது சிறப்பு பாதுகாப்பு படையினர் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் மதுரை விமான நிலையம், விமான நிலையம் அருகே அரசு நிகழ்ச்சி நடைபெறும் பகுதி  அதனைத் தொடர்ந்து , பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் மண்டேலா நகர் பகுதி மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.  பிரதமர் வந்து செல்லும் பகுதியில், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பகுதிகளில் பாதுகாப்ப...

காஷ்மீர் என்கவுண்டர்; ஜெய்ஷ் - இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சு*ட்டுக்கொ*லை; பாதுகாப்பு படையினர் அதிரடி..!

Image
  காஷ்மீர் என்கவுண்டர்; ஜெய்ஷ் - இ-முகமது பயங்கரவாதிகள் 3 பேர் சு*ட்டுக்கொ*லை; பாதுகாப்பு படையினர் அதிரடி..! ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாரில் நேற்று நடந்த மோதலின் போது 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சு*ட்டுக் கொ*ல்லப்பட்டனர். இவர்களில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் மிகவும் தேடப்படும் ப*யங்கரவா*தியான சைபுல்லா என்பவனும் உ*யிரிழந்தான். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதியான சைஃபுல்லா, கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியில் தலைமறைவாக இருந்து, குறைந்தது 20 முறை பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிச் சென்றிருக்கிறான். ப*யங்கரவா(திகள் மலைப்பகுதியில் உள்ள ஒரு மண் வீட்டிற்குள் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கியது.  குறிப்பிட்ட அந்த இடத்தை நெருங்கிய போது பாதுகாப்புப் படையினர் மீது ப*யங்கரவா*திகள் தா*க்குதல் நடத்தியபோது இந்த மோதல் தொடங்கியது. பாதுகாப்புப் படையினர் உடனடியாக திறம்பட து*ப்பாக்கிச் சூடு நடத்தியதில் சைபுல்லா உட்பட 3 தீ*விரவா*திகள் சு*ட்டுக் கொ*ல்லப்பட்டனர்.  என்கவுன்டர் நடத்திய இடத்தில் இருந்து இரண்ட...

பெங்களூருவில் நடந்த இதயத்தை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம்

Image
  இது பெங்களூருவில் நடந்த இதயத்தை உலுக்கும் ஒரு துயரச் சம்பவம் 2 வயது வர்ஷா மற்றும் 4 வயது பானு ஆகிய இரண்டு பிஞ்சு உயிர்கள் ஒரு கோர விபத்தில் பறிபோயுள்ளன. அவர்களது தந்தை பால் வாங்குவதற்காக குழந்தைகளை அழைத்துச் சென்றபோது, திரும்பிய ஒரு பள்ளிப் பேருந்து எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி, குழந்தைகள் மீது ஏறியது. இதில் அந்த இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயி😥😥😭ரி😭😭ழந்😭😭😭தனர். ஒரு சாதாரண காலைப் பொழுது, சில நொடிகளில் ஒரு பேரிடராக மாறியுள்ளது.  எந்தவொரு பெற்றோருக்கும் இத்தகைய வலி ஏற்படக்கூடாது. இது வெறும் விபத்து மட்டுமல்ல — சாலை பாதுகாப்பு, குடியிருப்பு பகுதிகளில் கனரக வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டியதன் அவசியம் மற்றும் ஒரு பள்ளிப் பேருந்தை ஓட்டும்போது இருக்க வேண்டிய பொறுப்பு ஆகியவற்றை நமக்கு நினைவூட்டும் ஒரு எச்சரிக்கை. துக்கத்தில் இருக்கும் அந்த குடும்பத்திற்கு எமது பிரார்த்தனைகளும், மனவலிமையும் உரித்தாகட்டும். 🕊️🙏 பாதுகாப்பாக வாகனங்களை ஓட்டுங்கள். விழிப்புடன் இருங்கள். ஒரு நொடி கவனக்குறைவு பல உயிர்களை அழித்துவிடும்.🙏🤝

திருவண்ணாமலை அருகே விபத்து ஒருவர் பலி

Image
  சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தின் முன் பகுதி டயர் வெட்டித்ததில் கட்டுபாட்டை இழந்து டாட்டா ஏசி வாகனம் மீது மோதியதில் டாட்டா ஏசி டிரைவர் தலையில் பலத்த கா*யம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ப*லியானார். இதை அந்த டாடா ஏசி டிரைவரின் விதி என்று  சொல்வதா???  இல்லை; சரியாக பேருந்துகளை பராமரிக்காத தமிழ்நாட்டு அரசின் சதி என்று சொல்வதா??  என்னமோ போங்கய்யா, புள்ளிங்கோக்களை பார்த்தால் ஓரமாக போகணும்..  பொதுவெளியில் மது குடிப்பவர்களை பார்த்தாலும் கண்டுக்காமல் செல்லணும்  இப்ப அரசு பேருந்துகளை கண்டாலும் பயத்தோடவே கடந்து செல்லணுமா?? 🥺🥺🥺🥺 இது பற்றிய உங்க கருத்து என்ன??

மருத்துவத்துறை மாஃபியாக்களை தோலுரித்த பெண் எம்பி

Image
  "இந்திய மருத்துவ துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது. பெரிய தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் படுக்கை கட்டணங்கள், 5 நட்சத்திர ஓட்டல் கட்டணங்களை விட அதிகமாக இருக்கிறது. தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் இன்ஷுரன்ஸ் இருக்கிறதா என்றுதான் முதலில் கேட்கிறார்கள். இருக்கிறது என்று சொல்லி விட்டால் நீங்கள் காலி! அடுத்த நொடியே பில்லிங் மீட்டர் ஓட ஆரம்பித்து விடும். தேவையே இல்லாத காஸ்ட்லியான மருந்துகளை கொடுக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத மருத்துவ பரிசோதனைகளை எடுக்கிறார்கள். போலி பில்களை தயாரிக்கிறார்கள்.  5 நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டிய நோயாளியை 15 நாள் கழித்துதான் அனுப்புகிறார்கள். இனியும் இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காமல், ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!!" --- ராஜ்ய சபாவில் கர்ஜித்த ஆம் ஆத்மி கட்சி  பெண் எம்பி  ஸ்வாதி மாலிவால்  .

போதையின் பிடியில் தமிழகம்.

Image
 “அவளுக்கும் ஊத்திக் கொடு…” – திருவாரூர் அரசு கல்லூரியில் மது அருந்திய மாணவிகள்; பெற்றோர்கள் அதிர்ச்சி. நெல்லை பாளையங்கோட்டையில் அரசு பள்ளி மாணவிகள் மது அருந்திய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த விவகாரம் அடங்குவதற்குள் தற்போது திருவாரூரில் அரசு கல்லூரி மாணவிகள் பீர் குடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே கிடாரம் கொண்டான் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜ கோயில் வளாகத்தில் அரசு கலைக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். வகுப்பறையிலேயே மது அருந்திய மாணவிகள் இந்தக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கான நடன ஒத்திகையின் போது, ஐந்து பேருக்கும் மேற்பட்ட மாணவிகளில் சிலர் வகுப்பறைக்குள் அமர்ந்தபடியே பீர் குடித்ததாக கூறப்படுகிறது. இதனை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில்,  மாணவிகள் கையில் பீர் பாட்டில்களை வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி குடிப்பதும், “அவங்களுக்கும...

அதிசயம் தக்காளியும் உருளைக்கிழங்கும் ஒரே செடியிலா?

Image
ராஜலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் நிறுவன ஆடைகளின் அணிவகுப்புகளை கீழே உள்ள இன்ஸ்டாகிராம் அல்லது whatsapp லிங்க்கை பயன்படுத்தி கண்டு மகிழுங்கள்.  https://www.instagram.com/rajalaxmi.fashion_21?utm_source=qr&igsh=MWpheHF3aHUwYTNzdw== Follow this link to join my WhatsApp community: https://chat.whatsapp.com/ICc4mrk0fuRFbU1nENxGdF விவசாய உலகில் ஒரு பெரிய அதிசயம் நடந்துள்ளது! கோரக்பூர் பல்கலைக்கழகம் (DDU) விஞ்ஞானிகள், கிராஃப்டிங் (Grafting) தொழில்நுட்பம் மூலம் ஒரு ‘சூப்பர் செடி’ உருவாக்கியுள்ளனர். இந்த செடியின் மேல்பகுதியில் தக்காளி காய்க்கும், வேர்பகுதியில் உருளைக்கிழங்கு வளரும். இந்த செடிக்கு விஞ்ஞானிகள் ‘போமேட்டோ’ (Pomato) என்று பெயர் வைத்துள்ளனர். உங்களிடம் நிலம் இல்லையென்றாலும், ஒரு பெரிய தொட்டியில் கூட இந்த இரண்டு காய்கறிகளையும் வளர்க்கலாம்.  இது நகர்ப்புற மக்களுக்கு குறைந்த இடத்தில் அதிக பயிர் பெற ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. எதிர்காலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் வீட்டு தோட்டப் புரட்சிக்கு இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.  #Pomato #Agricul...

டெலிகிராம் செயலியில் மோசடியில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

Image
  தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், ஆன்லைனில் போலியான டெலிகிராம் ஐடி மற்றும் போலியான வெப்சைட் ஆகியவற்றை உருவாக்கி காயின் பிட்டிங் டாஸ்க் ( Old Coin Purchase Task) செய்தால் லாபம் கிடைக்கும் என்று கூறி முதலீடு செய்ய வைத்து போலியாக வாலட்டில் பணம் வரவு வைக்கப்பட்டதாக ரூ.5,83,007 பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியது தொடர்பாக, தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், எதிரிகள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G.S.மாதவன்T.P.S., அவர்களின் அறிவுறுத்தலின்படி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜீலியஸ் சீசர் அவர்களின் தலைமையில், காவல் ஆய்வாளர் திருமதி.வசந்தி மற்றும்  சைபர் குற்றப்பிரிவு காவலர்கள் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று, மேற்படி குற்றங்களில் ஈடுபட்ட ஆறு எதிரிகள் கைது செய்து  அவர்களிடமிருந்து 10 மொபைல் போன்கள், 33 சிம் கார்டுகள், 44 வங்கி கணக்கு விவரங்கள...

இந்திய பட்ஜெட்2026 இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது

Image
 

ரயில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய பலே கில்லாடி கைது

Image
  ரயிலில் செல்லும் பெண்களே டார்கெட்.. அசந்து தூங்கும் நேரத்தில் அதிர்ச்சி.. நபரை சுற்றிவளைத்து தூக்கிய போலீசார்! மதுரை - ரயில் நிலையத்தில் பெண்களுக்கு உதவுவது போல் நடித்து நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் போலீசார் விரித்த வலையில் வசமாக வந்து சிக்கியிருக்கிறார். பொதுச் சேவைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்" என காலரை தூக்கி விட்டுக்குகொண்டு ரயில் நிலையத்தில் ஒரு கதாநாயகனாக திரிந்து கொண்டிருந்த நபர் ஒரு ஜில்லா திருடன் என்பது கடைசியில் தான் தெரியவந்துள்ளது. திடீர் நல்லவனாக மாறி ரயில் பயணிகளுக்கு சேவை செய்து வந்த நபர், அசந்த நேரத்தில் செயின்பறிப்பில் ஈடுபட்டு செல்வசெழிப்புடன் வாழ்ந்து வந்திருக்கிறார். உதவி என்கிற பெயரில் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை உருவிச் சென்ற நபர் போலீஸ் விரித்த வலையில் சிக்கியது எப்படி? கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான கார்த்திக். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பயணிகளுக்கு அவர் செய்து வந்த சேவையைப் பார்த்தால், ஆஹா "இப்படி ஒரு பையன் இருப்பதால் தான் மதுரையில் மழையே பெய்கிறது" என சொல்லத் தோன்றும். ரயில் பயணிகளிடம், அதிலும் குறிப்பாக ...

ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் சதி முறியடிப்பு

Image
  பெரும் சதி முறியடிப்பு  🇮🇳ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் (Nagaur) மாவட்டத்தில், ஒரு விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10,000 கிலோ அமோனியம் நைட்ரேட் மற்றும் வெடிபொருட்களை ராஜஸ்தான் போலீசார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். 👉சோதனையில் 187 மூட்டை வெடிமருந்துகள், 9 அட்டைப் பெட்டிகளில் இருந்த டெட்டனேட்டர்கள்  மற்றும் ஏராளமான பியூஸ் ஒயர்கள் மீட்கப்பட்டுள்ளன.  👉இந்த விவகாரம் தொடர்பாக 58 வயதான சுலைமான் கான் (Suleman Khan) என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.  👉வெடிபொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த வெடிபொருட்கள் எதற்காகச் சேமிக்கப்பட்டன? இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.  🇮🇳குடியரசு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த மிகப்பெரிய வெடிமருந்து வேட்டை ஒரு பெரும் அசம்பாவிதத்தைத் தடுத்துள்ளது.

சீன விசா வழக்கில் கார்த்திக் சிதம்பரம் கைதாவாரா?

Image
  2011ஆம் ஆண்டு மன்மோகன் சிங் இன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் திரு சிதம்பரம் அவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தபோது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனத் தொழிலாளர்களுக்கு விசா வாங்கி கொடுத்த வழக்கு நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள Talwandi Sabo Power Limited (TSPL) என்ற மின் நிலையத் திட்டத்தில் பணியாற்ற, 263 சீன தொழிலாளர்கள் இந்தியா வர வேண்டியிருந்தது. அந்த காலகட்டத்தில் சில சீன ஊழியர்களின் விசா காலாவதியான பின்னரும், மீண்டும் (reuse) விசா அனுமதி பெறுவதில் சட்ட விதிகளை மீறி தலையீடு செய்யப்பட்டதாக விசாரணை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. விசா மறுபயன்பாட்டு அனுமதியைப் பெற உதவியதற்காக ₹50லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. கார்த்திக் சிதம்பரம் உட்பட பலர் மீது charge sheet தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். இது அரசியல் பழிவாங்கல் என்றும், சட்டப்படி தன்னை நிரூபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இந்த வழக்கை அரசியல் நோக்கத்துடன் தொடரப்படும் விசாரணை என குற்...

சமூக விரோதிகளின் கூடாரம் ஆகிறதா தமிழகம்?

Image
 கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஏன் இப்படி சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகிறது என்பது தெரியவில்லை.   தமிழகத்தின் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே ஒருவன் அத்துமீறி சமூக விரோத செயலில் ஈடுபடுகிறான். அவன் மீதும் சரியான நடவடிக்கை இல்லை.  பள்ளி மாணவர்கள் பலர் சேர்ந்து ஒரு அப்பாவி சக மாணவனை அடித்தே சாகடிக்கின்றனர்.  மேலும் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை மிரட்டும் காட்சிகளும் வெளியானது. பின்னாளில் அந்த மாணவர் சமூக விரோத செயலில் ஈடுபட்டு ஜெயிலுக்கு சென்றதும் தெரிந்தது. கோவையில் சமூக விரோதிகள் சிலர் பெண்ணை பலாத்காரம் செய்கின்றனர். ஒரு அப்பாவி இளைஞனை போலீசார் சட்டவிரோதமாக அடித்துக் கொலை செய்திருக்கின்றனர். அதற்கு காரணமான பெண் இன்றும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்.  கள்ளச்சாராயத்தை விற்று பல உயிர்களை பலி வாங்கியவர்களும் இதே தமிழகத்தில் தான் இருக்கின்றனர். மேலும் கஞ்சா மது மெத்தபட்ட மெயின் போன்ற பல போதை வஸ்துகளும் தமிழகத்தில் தாராளமாக கிடைக்கிறது என்ற செய்திகளும் வந்து கொண்டிருக்கிறது.  மெத்தப்பட்ட மைன் போன்ற ஆபத்தான போதை வஸ்துக்களை உலக அளவில் வர்த்தகம் செய...

பங்குச் சந்தையில் காத்திருக்கும் ஆபத்து

Image
  தற்போது இந்திய பங்குச் சந்தை கிட்டத்தட்ட தன்னுடைய உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் பல பங்குகளும் உச்ச விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதாகவும் நிறுவனத்தின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் பங்குச் சந்தைக்கு வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பல நிறுவனங்களின் நிறுவனர்களும் முக்கிய பங்குதாரர்களும் தங்கள் நிறுவன பங்குகளை விற்று தங்களுக்கான லாபத்தை பதிவு செய்து வருகின்றனர்.   அது மட்டுமல்லாது பல புதிய நிறுவனங்களும் புதிய பங்குகளை வெளியிட்டு தங்களுக்கான தொகையை திரட்டி கொண்டு வருகின்றன. அதில் சில நிறுவனங்களில் புரமோட்டோர்கள் தங்கள் பங்குகளை offer for சேலம் இல் விற்பனை செய்து தங்களது உடைய லாபத்தை பதிவு செய்து வருகின்றனர்.  இதில் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் சில்லறை முதலீட்டாளர்களும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து பங்குகளை வாங்குகின்றனர்.  இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி வர வாய்ப்புள்ளது.  ஏனெனில் சந்தையில் தங்கள் நிறுவன...