Posts

Showing posts with the label #முக்கியசெய்திகள்

இன்றைய(22/12/2025) முக்கிய செய்திகள்

Image
   பொதிகை டைம்ஸ் செய்தியாளர் சிவா என்ற கருப்பசாமி 

பங்களாதேஷ் இந்திய சொத்துக்கள் குறித்து ராணுவ தளபதி விளக்கம்

Image
  🇮🇳 இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானுடன் தொலைபேசியில் உரையாடினார். 👉 வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்திய சொத்துக்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் வங்கதேசம் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் வங்கதேச ஜெனரல் ஜெனரல் திவேதிக்கு அவர்களுக்கு  உறுதியளித்தார்.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து

Image
     மார்கழி மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் மாலை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு கடந்த 19 12 2025 அன்று திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஐயப்ப பக்தர்கள் சென்று கொண்டிருந்த வேன் பணக்குடி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்தியாவின் புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் களின் விலை உயர வாய்ப்பு

Image
  இந்தியாவில் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் ஆனால் சிகரெட் போன்றவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.  இந்தியாவில் புகையிலை பயன்படுத்துபவரின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் புகையிலைப் பொருட்களின் வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து இந்திய அரசு கடந்த சில நாட்களாகவே பரிசீலித்து வந்தது. தற்போது புகையிலைப் பொருட்களுக்கான வரி விகிதத்தை உயர்த்தி இன்று அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிகரெட் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகம் உள்ளது.  இது இந்தியாவில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கார் ரேஸ் போட்டியில் அஜித் குமாரின் கார் பழுதானது

Image
 மலேசியாவில் நடைபெற்று வரும் ALM serious கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அப்பங்கயத்தின் பொழுது நடிகர் அஜித்குமாரின் கார் பழுதானதால் பாதியிலேயே போட்டியை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இது தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் இதுபோன்ற நிகழ்வுகள் மனதை தளர செய்வதாகவும் எனினும் தொடர்ந்து போட்டிகள் அது எதிர்நோக்கி உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்.

சென்னை வெள்ளத்தில் தத்தளிக்க காரணம்

Image
  கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை ஒவ்வொரு மழையின் போதும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு தத்தளிப்பது வாடிக்கையாகிவிட்டது. இதற்குக் காரணம் என்னவென்று பார்த்தால் சென்னையின் மக்கள் தொகை நெருக்கம், விதி மீறிய கட்டிடங்கள், நீர் நிலைகள்  ஆக்கிரமிப்பு, நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் அவற்றை பராமரிப்பதில் குறைபாடு போன்ற பல காரணங்கள் உண்டு.  இது கடந்த 25, 30 ஆண்டுகளுக்கும் மேலாகவே சீர்கேடுகள் ஆரம்பித்து தற்போது புரையோடி விட்டன.  சென்னை மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆட்சியில் நல்லது நடக்கும் அந்த ஆட்சியில் நல்லது நடக்கும் என்று நம்பி மாறி மாறி வாக்களித்து ஏமாந்து கொண்டு உள்ளனர்.  தற்போது நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகள் ஏன் பயனளிக்கவில்லை என்று ஆராய்ந்து பார்த்ததில் நமது அரசியல் அரசு ஊழியர்களாக பணியாற்றும் பலரும் ஊழல் மற்றும் லஞ்சம், சிபாரிசு போன்றவற்றை பயன்படுத்தி வேலையை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலர் தகுதியற்றவர்களாகவும் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் அரசு பணி ஆணையை பெறும் பொழுது நாம் எப்படி ஊழல் செய்து சம்பாதிக்கலாம், வேலை செய்யாமல் எப்படி பொழுதை போ...

கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்க முடியாத அறநிலையத்துறை

Image
 தமிழகத்தில் உள்ள பாரம்பரிய இந்து திருத்தலங்கள் அனைத்தும் தற்போது நிர்வாகித்து வருவது இந்து சமய அறநிலையத்துறை ஆகும்.  தமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்களில் பெரிய இந்து ஆலயங்கள் திருத்தலங்கள் அனைத்தையும் தரிசிக்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.  அவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலம், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோயில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் பல இந்து கோயில்களில் தரிசிக்க வரும் பக்தர்களிடம் வாகனம் நிறுத்த பார்க்கிங் கட்டணம் முதல் தரிசனம் செய்ய சிறப்பு கட்டணம் தொடங்கி பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதோடு கோவில் நிர்வாகத்திற்கு உண்டியல் மூலமாகவும் மற்றும் பல காணிக்கைகளும் வருகின்றன.  இதுபோக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடி காணிக்கை அளிக்க காது குத்த மற்றும் கட்டளைதாரர்களாக அபிஷேக ஆராதனைகள் நடத்த பல வழிகளிலும் பக்தர்களிடமிருந்து பணம் பெறப்படுகிறது. அவற்றிலும் பல...

காங்கிரஸின் நடவடிக்கைகள் சரிதானா?

Image
இவரை அடையாளம் காண்க. இவர் டெல்லி குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக இருந்தவரும், காங்கிரசின் சிறுபான்மை பிரிவின் பொறுப்பாளரும், அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் உரிமையாளருமான ஜவாத் சித்திக். கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒரு போன்சி திட்டத்திலிருந்து ஒரு பல்கலைக்கழகம் வரை. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கியது யார் தெரியுமா? 2014 இல் பூபேந்திர ஹூடாவின் காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதா? ஹரியானாவின் காங்கிரஸ் அரசு, விதிகள், சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பைத் திருத்துவதன் மூலம், மத்தியப் பிரதேசத்தில் மோசடி செய்து தப்பி ஓடிய ஒரு மோசடிக்காரரும் மோசடி செய்பவருமான ஜவாத் அகமது சித்திக் என்பவருக்கு ஃபரிதாபாத்தில் 60 ஏக்கர் மதிப்புள்ள நிலத்தை வெறும் ₹100க்கு வழங்கியது. இது மட்டுமல்லாமல், ஹரியானாவின் காங்கிரஸ் அரசு சிறுபான்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைக் கட்ட ₹60 கோடியை ஒதுக்கியது. அதானிக்கு நிலம் கொடுத்ததில் பெருமை கொள்ளும் காங்கிரஸ் கட்சி, பயங்கரவாத தளங்களை உருவாக்க ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் மட்டுமல்ல, 60 ஏக்கர் நிலத்தையும் எவ்வாறு வழங்குகிறது என...

திருநெல்வேலி அரசு அதிகாரிகள் மற்றும்அரசியல்வாதிகளின் கனிவான கவனத்திற்கு

Image
  திருநெல்வேலி நகரில் வண்ணார்பேட்டை பகுதியில் மாலை நேரங்களில் சென்னை பெங்களூர் கோயம்புத்தூர் போன்ற பல பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் மற்றும் SETC பேருந்துகள் மற்றும் கோவில்பட்டி சங்கரன்கோவில் வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு அருகில் உள்ள ஆப்பிள் ட்ரீ ஹோட்டலின் அருகில் நின்று செல்கின்றன.  இந்தப் பேருந்துகளில் ஏறுவதற்காக திருநெல்வேலி மாநகரின் பல பகுதிகளில் இருந்து மக்கள் பலரும் வந்து காத்திருக்கின்றனர்.  ஆனால் அப்பகுதியின் சாலைகள் மிகவும் மோசமான தரத்தில் உள்ளது. பேருந்துகளை ஓரமாக ஒதுக்கி நிறுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் பலவும் தாறுமாறாக சாலைகளில் நிறுத்தி நிறுத்தப்படுகின்றன.  இதனால் அப்பகுதியில் பேருந்துக்கு நிற்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாது பாலத்தின் மேலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் சாலை நடுவிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.  அந்த வண்...

தென்காசி அரசியல்வாதிகள் கனிவான கவனத்திற்கு

Image
தென்காசி பகுதி திருநெல்வேலியில் இருந்து பிரித்து மாவட்டமாகிய பிறகு பல பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  அதேபோல் திருநெல்வேலி தென்காசி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.   இந்த விரிவாக்குப் பணிகள் 90% முடிந்து விட்ட நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்படும் மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலரும் இன்னலுக்குள் ஆவதோடு தினசரி அந்த வழியாக பணி நிமித்தமாகவோ அல்லது பள்ளிக்குச் செல்ல வேண்டி இருப்பவர்களோ மேலும் பல சொந்தப் பணிகள் காரணமாக சென்று வருபவர்கள் என அனைவரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.  குறிப்பாக திருநெல்வேலி இருந்து தென்காசிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர்.  தென்காசி பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இது பற்றி எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்க இதுவரை முன் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆளும்கட்சியினர் தவிர எதிர்க்க...

வங்கதேசத்தினர் ஊடுருவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Image
  நமது இந்திய நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் திருநாமல்  காங்கிரஸ் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் பலவும் வாக்காளர் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றன.   இந்த தீவிர வாக்காளர் திருத்தச் சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நபர்கள் இறந்து போயிருந்தாலும் அல்லது மாற்றலாகி வேறு இடங்களுக்குச் சென்று இருந்தாலோ அவர்களது வாக்குரிமை பட்டியலில் இருக்கும். அவற்றை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் 18 வயதிற்கு மேல் உள்ள புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பலர் சட்ட விரோதமாக அந்நிய நாட்டவர்கள் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர் அவற்றின் கண்டறிந்து நீக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.  இதனால் பெரும்பான்மை பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறும் நிலை உருவாகும். கள்ள ஓட்டுக்கள் தடுக்கப்படும் சட்டவிரோத ஜனநாயக நடைமுறைகள் தடுக்கப்படும். பொதுமக்கள்...

தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலம்

Image
  நடிகர் விஜய் அவர்கள் தனது அரசியல் ஆசையின் காரணமாக தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு புதிய கட்சியை தொடங்கினார். ஆரம்ப காலத்தில் அவருக்கு மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையில் ஓரளவுக்கு ஆதரவும் இருந்தது.  இதனால் அவர் நடத்தும் கட்சிக் கூட்டங்கள் மாநாடுகள் போன்றவற்றுக்கு மக்கள் கூட்டம் திரளாக வரத் தொடங்கியது. இந்நிலையில் கரூரில் ஏற்பட்ட அசம்பாவித சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் ஓடி ஒளிந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் நிறுவனத் தலைவராக உள்ள நடிகர் விஜய் அவர்களும் தனது பனையூர் இல்லத்திலேயே இருந்தார். அவர்களுக்கு திடீரென்று ஒரு பிரச்சனை வரும்போது அதை எப்படி அரசியல் ரீதியாக கையாள வேண்டும். சிக்கலான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற அனுபவமும் சிந்தனையும் இல்லை. மேலும் விஜய் அவர்கள் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை மற்றவர்களை சார்ந்து வாழ்ந்து வந்துள்ளார். ஆரம்ப காலத்தில் சினிமாவில் நடிக்கும் பொழுது தனது தந்தையின் நிழலிலேயே இருந்தார். அதன் பின்னர் பலரும் அவரைக் கைப்பாயாக உபயோகிக்க தொடங்கி விட்டனர். இது அவரால் உணரவும் முடியவில்லை. இ...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் எழுச்சி

Image
  இந்தியாவில் எப்போதுமே விளையாட்டுக்களில் கிரிக்கெட்டுக்கு என்று தனி இடம் ஒன்று உண்டு.  இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே விரும்பி பார்த்து வந்தனர். பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் பெண்கள் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை பற்றி ஒருவருக்கும் தெரியாது.  ஆனால் தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக பெண்கள் அணியிலும் சில வீரர்கள் பேசப்பட்டு வருகின்றனர். ரசிகர்களிடையே பெண்கள் கிரிக்கெட் பற்றியும் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.  தற்போது நமது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மிகவும் வலுவானதாகவும் திறமை வாய்ந்ததாகவும் உள்ளது.  இந்த ஆண்டு உலக சாம்பியன்ளாக வந்துள்ள பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பொதிகை டைம்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.  நமது இந்திய ரசிகர்கள் எப்படி கிரிக்கெட்டை பெரிதாக ரசித்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்களோ அதே போன்று ஆக்கி ஃபுட்பால் கபடி பேஸ்கட் பால் போன்ற அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தினால் இந்திய அனைத்து விளையாட...

திமுக அரசு அடிப்படை பிரச்சனைகளையே தீர்க்க முடியாமல் திணறுவது ஏன்?

Image
  திமுக ஆட்சியில் தொடர்ந்து அடிப்படையாக மக்களுக்கு தேவையானவற்றை சரியாக செய்வதில்லை என்று குற்றச்சாட்டு பல மாதங்களாக எழுப்பப்பட்டு வருகிறது.  மற்ற எந்த ஆட்சிகளிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில் மட்டும் ஏன் இந்த அளவிற்கு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது என்பதை ஆராய்ந்த போது, திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தமிழ்நாட்டின் நிதி நிலைமையைப் பற்றி அறியாமல் தங்கள் வசதிக்கேற்ப வாக்குறுதிகளை அளித்ததன் விளைவு தற்போது மிகுந்த அதிருப்தியில் திமுக அரசு உள்ளது.  அது மட்டுமல்லாது திமுகவில் இருக்கும் பல அமைச்சர்கள் வயது மூப்பின் காரணமாக தங்கள் பணிகளை சரியாக செய்ய முடிவதில்லை என்ற கருத்துக்களும் நிலவுகின்றன. மேலும் திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களுக்கான நலன்களையும் வருமானத்தையும் பார்ப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.  இந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் பலரும் திமுகவின் தலைமைக்கும் அமைச்சர்களுக்கும் சாதகமாக செயல்படுவ...

காங்கிரஸ் கட்சியின் தொடர் பின்னடைவுகளுக்கு காரணம் என்ன?

Image
  இந்தியாவில் சுதந்திர காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட கட்சி காங்கிரஸ் என்பது அனைவரும் அறிந்தது.   காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்கள் சக்தி வாய்ந்த நபர்கள் இருந்ததால்  ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்து வந்தது.  ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அதற்குக் காரணம் அக்கா செயின் தலைமையில் ஒரு ஸ்த்திரதன்மை இல்லை. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின் காங்கிரஸில் சரியான ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. அக்கட்சியை  சரியான வழியில் வழி நடத்த தலைமையில் சரியான ஆள் இல்லாததோடு மட்டுமல்லாமல் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களும் கட்சியை பலப்படுத்தும் நோக்கோடு செயல்படவில்லை. மேலும் பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்ததால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் அடிமட்ட தொண்டர்களுடன் சரியான தொடர்பில் இல்லாததோடு மக்களிடமிருந்தும் அன்னியப்பட்டு விட்டனர்.  அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது இந்தியாவின் முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தது. எ...

அமேசான் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலைக்கு ஆபத்தா?

Image
  உலகெங்கும் மக்கள் தற்போது பெரும்பாலான பொருட்களை வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைன் மூலம் வாங்குவது விரும்புகின்றனர்.  இது போன்ற ஆன்லைன் விற்பனைத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது அமேசான். உலகம் முழுவதிலும் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. தற்போது ஆர்டர் செய்யும் பொருட்களை அந்தந்த பகுதிகளில் டெலிவரி அமேசான் நிறுவனம் டெலிவரி பார்ட்னர்களாக பலரையும் வேலைக்கான அமர்த்தி உள்ளது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.  ஆனால் தற்போது அமேசான் நிறுவனம் தனது டெலிவரி வேலைகளை செய்ய செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருட்களின் மூலம் ட்ரோன்கள் வழியாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய ஏற்பாடு செய்து வருகிறது.  இதன் மூலம் நிறுவனத்திற்கு டெலிவரி பார்ட்னர்களுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகைகள் மிச்சம் ஆவதோடு டெலிவரி பார்ட்னர்கள் வழியாக வரும் பல பிரச்சனைகளும் தவிர்க்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் பொருட்களை வழங்க முடியும் என்று நிறுவனம் கருதுகிறது.  இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு பரிபோகக் கூடிய ...

திமுகவை கர்மா பின் தொடர்கிறதா?

Image
 திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்தி ஊடகங்கள் அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு பிண அரசியல் பண அரசியல் என எல்லா வகையிலும் ஆளுங்கட்சியை குறை சொல்லி அரசியல் செய்து கொண்டிருந்தனர்.  அப்படி எல்லா விதத்திலும் அரசியல் செய்து அதிமுகவை வில்லன் போல் சித்தரித்து நாங்கள் ஆட்சிக்கு வந்த நாட்டில் பாலாறும் தேன்ஆறும் ஓடும் என்று மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர்.  தமிழில் ஒரு பழமொழி உண்டு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல தற்போது திமுக எதையெல்லாம் வைத்த அரசியல் செய்கிறதோ அதே போல் பிரச்சனைகள் அவர்கள் ஆட்சியிலும் நடக்கிறது. இதைத்தான் கர்மா பின் தொடர்தல் என்று கூறுவர்.  எடுத்துக்காட்டாக  சாத்தான்குளம் ஜெயராஜ் பெனிக்ஸ் லாக்கப் மரணத்தை வைத்து பெருமளவில் பினார அரசியல் செய்தது திமுக.  அதேபோல் திமுக ஆட்சியில் அஜித்குமார் கொலை நடந்தது. ஆனால் இப்போதும் ஊடகங்களை வைத்து அதை திசை திருப்ப பல வகைகள் என்னும் திமுக அரசின் முயற்சி செய்து வருகிறது.  அடுத்ததாக   அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து கனிமொழி உள்ளிட்ட...

இந்தியர்களுக்கு அனுதாபங்கள்( சகிப்புத்தன்மை) இல்லை இளைஞர் வீடியோ வைரல்.

Image
 தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.  அதில் அவர் இந்தியர்களுக்கு மற்றவர்கள் மீது அனுதாபம் இல்லை பெரும்பாலும் இந்தியர்கள் அனைவரும் சுயநலம் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்க்கும்பொழுது அவர் சொல்வது எந்த அளவு உண்மை என்பது மக்களுக்குப் புரியவரும். அடுத்த தலைமுறை சிறப்பாக வாழ நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.   எங்கள் பொதிகை டைம்ஸ் நியூஸ் டிஜிட்டல் இதழை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பெட்டியில் தெரிவிக்கவும். .

பூமர் அங்கிள்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Image
  தற்போதுள்ள இளைய தலைமுறை தங்களுக்கு முந்தைய தலைமுறைகள் ஏதாவது அவர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்களை பூமர் அங்கிள் என்று அழைக்கின்றனர்.  இவ்வாறு இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் பூமர் அங்கிள்களின்  உலகம் எப்படி இருக்கும்?  சென்ற தலைமுறை பூ மரங்கள் பெரும்பாலும் தங்கள் இள வயது பருவத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருப்பார்கள். இதனால் அவர்களுக்கு சிறுவயது பருவத்திலும் சரி அவர்கள் வாலிப வயதானத்திலும் சரி அவர்கள் ஆசைப்பட்ட பல பொருட்கள் அவர்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதுமட்டுமல்லாமல் அன்றைய தலைமுறை பெரியவர்கள் இவர்களுக்கு குடும்பத்தின் நிலைமை மற்றும் பொருளாதார நிலமை ஆகியவற்றை எடுத்துச் சொல்லி உணர்த்தி பொறுப்புடன் வளர்த்தனர்.  இதனால் அவர்கள் வளர்ந்து பொருளாதார ரீதியாகவும் ஒரு நல்ல நிலையை அடைந்த பின்பும் அவர்களுக்கு சிறுவயதில் அவர்கள் பட்ட  கஷ்டங்களும் தாங்கள் கடந்து வந்த பாதைகளையும் மனதில் கொண்டு அதிகம் செலவு செய்யாதவர்களாகவும் குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும் ...

பொதிகை டைம்ஸ் நேயர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Image
  எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதனை ஆதரித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.  இந்த இனிய நாள் முதல் உங்கள் வாழ்க்கையில் புதிய ஒளியும் சந்தோஷமும் வளர்ச்சியும் பெற்று மென்மேலும் உயர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.  நன்றி.  எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழை சப்ஸ்கிரைப் செய்து வரும் தகவல்களை படித்து உங்கள் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ்களில் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.