Posts

Showing posts with the label #dmk

திமுகவின் பெயர் அரசியல் எடுபடுமா?

Image
  தமிழகத்தில் தற்போது மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி அதைப் பெயர் மாற்றியது சம்பந்தமாக திமுக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  திமுக செய்யும் இந்த பெயர் அரசியலில் அவர்களே சிக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. காரணம் தமிழகத்தில் பல விடுதலைப் போராட்ட வீரர்கள் முக்கிய அரசியல் தலைவர்கள் இருந்தும் இவர்கள் வைக்கும் அனைத்து திட்டத்திற்கும் பெயர் முதலமைச்சர் ஸ்டாலின் பெயராகவே உள்ளது. மேலும் பல அரசு பேருந்து நிலையங்களுக்கும் கட்டிடங்களுக்கும் பாலங்களுக்கும் கருணாநிதி பெயர் அல்லது தெலுங்கர்களின் பெயர்களையே வைத்துள்ளனர். இவர்கள் இதுவரை ஏதாவது ஒரு திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை வைத்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது.   பாராளுமன்றத்தில் திருச்சி சிவா எம் பி அவர்கள் தென்னிந்திய குறிப்பாக தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி வடமாநிலங்களில் உள்ளவர்களுக்கும் மத்திய அரசுக்கும் தெரியவில்லை என்றும் உரிய அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.  ஆனால் இங்கு தமிழ்நாட்டில் ஒரு திட்டத்திற்கு கூட ஒரு இடத்திற்கு கூட ...

இந்தியாவில் இளைஞர்கள் சீரழிந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

Image
 நமது இந்திய நாட்டில் நியூ ஆப்ஸ் டைம்ஸ்  பத்திரிகை எடுத்த ஆய்வில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்கள் சீரழிந்த மாநிலத்தில் நமது தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.  இந்தியாவின் நியூ ஹேர் டைம்ஸ் பத்திரிகை எடுத்த ஆய்வில் மது, போதைப் பொருள் பழக்கம், பொறுப்பற்ற நடைமுறைகள், சட்ட விதிமுறை மீறல்களில் முதலிடம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் ரவுடிசம் இவற்றின் அடிப்படையில் இந்தியாவிலேயே தமிழக இளைஞர்கள் தான் அதிகம் சீரழிந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  இந்தப் பெருமை அனைத்தும் நமது திராவிட மாடல் அரசையும், காவல்துறையின் அமைச்சராக இருக்கும் முதலமைச்சரையும் சாரும்.  இனியும் தமிழகம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தமிழக இளைஞர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாவது உறுதி.

ஊழலில் பட்டம் பெற்றுள்ளது தமிழ்நாடு. மார்க்கண்டேய கட்ஜூ கருத்து

Image
  இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் தமிழ்நாடு ஆளப்படுகிறது.முன்னாள் நீதிபதி கருத்து.  முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "இந்தியாவில் ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.ஊழல் இல்லாமல் எதுவும் நகராத மாநிலம் என்ற பெருமையைப் பெறலாம், இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் தமிழ்நாடு ஆளப்படுகிறது. முன்னாள் பிரதமர் நேரு, முதலமைச்சர் காமராஜரின் கீழ் இருந்த தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலம் என்று வர்ணித்த காலத்திலிருந்து இது வெகு தொலைவில் உள்ளது.  தமிழ்நாட்டில் ஆளும் நவ-பாசிச திமுக ஆட்சி, அதன் ஊழல் மற்றும் பிற தவறான செயல்கள் குறித்த எந்தவொரு எதிர்ப்பையும் அல்லது விமர்சனத்தையும் பொறுத்துக்கொள்ள விரும்பாதது போல் தெரிகிறது, எந்தவொரு எதிர்ப்புகளையும் அடக்குவதற்காக, மாநிலத்தில் ஒரு பயங்கர ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.  இதன் விளைவாக, பயங்கரமான விளைவுகளை எதிர்கொள்ள அஞ்சி, எந்த ஊடகவியலாளரும் அதற்கு எதிராகப் பேசத் துணிவதில்லை. சவுக்கு சங்கர் தமிழ்நாட்டில் பிரபலமான, துணிச்சலான மற்றும் நேர்மையான யூட...

திராவிட மாடல் vs தேசிய மாடல்

Image
 நமது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக தலைமையிலான அரசு தங்களை திராவிடம் மாடல் அரசு என சொல்லிக் கொள்கிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேசிய மாடல் என அழைக்கப்படுகிறது.  இந்த இரு அரசுகளும் தங்கள் ஆட்சி காலத்தில் செய்த நன்மைகள் திட்டங்கள் பற்றி பார்ப்போம்.  திராவிட மாடல்   ஆட்சிக்கு வந்தவுடன் முதல் அறிவிப்பாக மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டது. இதில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய வசதியாக இருந்தாலும் போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்க முடிவதில்லை என்ற பிரச்சனையும் வரும் பேருந்துகள் சரியான நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை என்ற பிரச்சனையும் பேருந்துகளில் தரம் மிகக் குறைவாக உள்ளதாகவும் பயணிகள் பயணம் செய்யவே பயப்படும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் பல மாதங்கள் கடந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் அதை வைத்து அரசியல் அழுத்தம் கொடுத்ததால் அனைவருக்கும் ஆயிரம் உதவித்தொகை என்பது மாறி தகுதி உள்ளவ...

சிறுபான்மை வாக்கு வங்கி படுத்தும்பாடு

Image
  நமது இந்திய திருநாடு மதசார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதிலும் அரசியல் கட்சிகள் மட்டும் மதசார்பற்று இயங்குவதில்லை.  அதேபோல் சில மதங்கள் சார்ந்தவர்களும் அந்த மத அமைப்புகளும் அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளன. அந்த குறிப்பிட்ட மதங்களைப் பொறுத்தவரை ஒரு தனி மனிதன் தான் விருப்பப்பட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க அனுமதிப்பதில்லை. மாறாக அவர்களின் மதக் கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறதோ அவர்களுக்கு வாக்கைச் செலுத்துகின்றனர்.   இதனால் தேர்தல் நேரங்களில் அரசியல் கா நேரங்களில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் கேட்கும் வாக்குறுதிகளை செய்து தருவதாக உறுதி அளிப்பதோடு ஆட்சிக்கு வந்த பின்னும் அவர்களுக்கு வாலாட்டும் நாய்கள் போல சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.  சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ மற்ற மதங்களை குறை சொல்லி அவர்களை விரோத மனப்பான்மையோடு அணுகினால் மட்டுமே சிறுபான...

சொந்தக்காசில் சூனியம் வைத்த உதயநிதி

Image
  திமுக அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சி என்றாலும் அக்கட்சி தற்போது கருணாநிதி குடும்பம் மொத்தம் தான் ஆண்டு அனுபவித்து வருகிறது.  அந்த வகையில் தற்போது கருணாநிதி தொலைந்து ஸ்டாலின் ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதி தலைமை பதவிக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறார்.  அதற்கு முன்னோட்டமாக வாழும் சட்டமன்றத் தேர்தலில் அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் வகையில் ஒரு புதிய பாடலை தயார் செய்து திமுக வெளியிட்டுள்ளது.  அது தற்போது எதிர்மறை பாதிப்பை அதிகமாக திமுகவிற்கு வழங்கி வருகிறது. அந்தப் பாடலை வைத்து தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள், பாஜக தொண்டர்கள் மற்றும் திமுக எதிர்ப்பாளர்கள் அனைவரும் உதயநிதியையும் அந்தப் பாடலையும் வைத்து சிறப்பான முறையில் ட்ரோல்  செய்து வருகிறார்கள். இது திமுகவுக்கு பலத்த பின்னாடைவாகவே பார்க்கப்படுகிறது.  தமிழக வெற்றி கழக விஜய் மற்றும் பாஜக அண்ணாமலை போன்ற இளம் தலைவர்களுக்கு எதிராக உதயநிதியை பெரிய தலைவராக ஒரு பிம்பத்தை உருவாக்க நினைத்து தனது சொந்த காசி சூனியம் வைத்தது போல் கொஞ்சநஞ்சம் திமுகவினரிடம் இருந்த தலைவர் இமேஜையும் டோட்டல் ட...

தமிழகமெங்கும் சாலைகளின் அவலநிலை

Image
  தமிழகத்தில் தற்போது எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் பள்ளி செல்லுதல் போன்ற பல காரணங்களுக்காக தினசரி வெளியே சென்று வரும் நிலையில் நமது தமிழ்நாட்டின் பெரும்பாலான சாலைகள் வயல்வெளிகளைப் போல் சேரும் சகதியும் ஆக மழை நீரோடு சேர்ந்து கழிவு நீரும்  சாலைகளில் தேங்கியுள்ளது.  இதில் பயணிப்பதால் பலருக்கும் பலவிதமான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலைகளில் உள்ள பள்ளமேடுகள் நீர் நிரம்பியுள்ளதால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பலரும் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகளும் அன்றாடம் நடைபெற்று வருகிறது.  திராவிட மாடல் ஆட்சி என்று பெருமை பேசும் இந்த ஆட்சியாளர்கள் கடந்த நான்கரை வருடங்களாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் எதிலும் சாலைகளை சிறப்பாக சீரமைத்ததாக ஒரு தமிழக சாமான் என் கூட தெரிவிக்கவில்லை. சில சாலைகள் போடப்பட்டாலும் கூட அவை தரத்தில் மிக மோசமாகவும் ஒரு மலைக்கு கூட தாங்காத அளவிற்கு தகுதியற்றதாக உள்ளது.  இதற்கு நாம் ஆட்சியாளர்களை குறை சொல்லி ஒன்றும் பிரயோஜனம் இல்லை. இலவசத்திற்காகவும் காசுக்...

திமுகவின் தவறான அணுகுமுறையால் முதலீடுகளை இழக்கும் தமிழகம்

Image
  திமுக ஆட்சிக்கு வந்த பின் வருடம் ஒருமுறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக நமது முதலமைச்சராக அவர்கள் பல நாடுகளுக்கு சென்று வருகிறார். அவர் ஒவ்வொரு முறை வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு சில ஆயிரம் கோடிகளுக்கு முதலீடு வந்துள்ளது என்று அறிக்கைகளை அளிப்பார்கள்.  ஆனால் உண்மையில் அதில் பாதி நிறுவனங்கள் கூட புதியதாக தொழிலை தொடங்கியதாக தெரியவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இவர்கள் அளிக்கும் அறிக்கைகளில் உள்ள பாதி நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்களை நடத்தி வரும் நிறுவனங்களாக உள்ளது.  திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது வேதாந்தா காப்பர் நிறுவனத்திற்கு எதிராக தூத்துக்குடியில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி தேவையில்லாமல் தன்னை கார்ப்பரேட் விரோதியாக காட்டிக் கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால் பின்வரும் காலங்களில் திமுகவை தங்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.  இதனால் புதிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது திமுக ஆட்சியில் புதிதாக த...

தமிழகம் மெல்ல மெல்ல தெலுங்கர்கள் பிடியில் செல்கிறதா?

Image
  தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சி எப்போதும் செய்வது மொழி அரசியல்.  அவர்கள் எப்போதும் இந்தி மொழியை எதிர்த்து போராட்டம் நடத்துவதும் ஏதோ தமிழ் மொழிக்கு அவர்கள் தான் பாதுகாப்பு அதிகாரம் பெற்றவர்கள் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.  ஆனால் உண்மையில் தமிழ் மொழியை திட்டமிட்டு அழிப்பதும் தமிழர்களை பின்னுக்கு தள்ளி தெலுங்கர்களை வாழ வைப்பதும் திமுக தான் என்பதை தமிழ் மக்கள் எப்போது அறிந்து கொள்வார்கள் என்பதே தெரியவில்லை.  மூன்றாவது மொழியாக இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று கூறுபவர்கள் தங்கள் அமைச்சரவையில் பெரும்பான்மை அமைச்சர்கள் தெலுங்கர்கள் என்பதை மறைத்துக் கொண்டே வருவார்கள்.  இந்தி மொழி எதிர்ப்பது போலவே தெலுங்கர்களின் தெலுங்கு மொழியையும் எதிர்க்க வேண்டும் என்பது தானே நியாயம். இந்தி மொழி வந்தால் தமிழ் அழியும் என்றால் தெலுங்கு மொழி வந்தாலும் தமிழ் அழிய தானே செய்யும்.  இங்கிருக்கும் அமைச்சர்கள் ஊழல் செய்து கொள்ளை அடித்த பணத்தில் பங்கு கொடுக்கும் கடவுள் கூட தெலுங்கு தேசத்தில் தான் இருக்கிறார்.  அதுமட்டுமல்லாது மறைமுகமா...

ஓடும் குதிரையில் பயணிக்கிறாரா ரஜினிகாந்த்?

Image
  தமிழ் சினிமா உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் திரு ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களை அழைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.  தற்போது கமலஹாசன் இயக்கத்தில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஒரு படம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. அதை திரு சுந்தர் சி அவர்கள் இயக்குவதாகவும் தகவல்கள் பரவியது. அந்தப் படத்தின் கதை பற்றிய விவாதங்களும் நடந்து வந்ததாக கூறப்பட்டது.  ஆனால் தற்போது திரு சுந்தர் சி அவர்கள் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வருகிறது.  கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் அவர்கள் பெரும் வெற்றி படங்களை கொடுத்த இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வந்தார். காரணம் அவர்கள் இளம் தலைமுறை என்ன ஓட்டங்களை சரியாக புரிந்து வைத்து அதற்கேற்றார் போல் படங்களை உருவாக்குவார்கள் என்ற எண்ணத்தில் அப்படி செயல்பட்டதாக கூறப்படுகிறது.  ஆனாலும் தற்போது வரை அவர் நடித்த படங்களில் சமீபத்திய படங்கள் பலவும் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. தற்போதைய இளம் தலைமுறை இயக்குனர்களை விட சிறந்த...

தமிழக வாக்காளர்களின் கனிவான கவனத்திற்கு

Image
  தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் திறமையான நேர்மையான சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய என்ன செய்ய கீழே உள்ள கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். அப்படி நீங்கள் இதை பின்பற்றும் பட்சத்தில் உங்கள் தொகுதி வளர்ச்சி அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.  முதலில் தற்போது வெற்றி பெற்று பதவியில் உள்ள  வேட்பாளர் தங்களிடம் கலந்து தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வரும்போது என்னென்ன வசதிகள் செய்து கொடுப்பேன் என்றும் அடிப்படை வசதிகளில் எதை செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் என்பதை பழைய தேர்தல் அறிக்கையை எடுத்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் வெற்றி பெற்ற  வேட்பாளர் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்ற கட்சியா? அவ்வாறு அவர் வெற்றி பெற்ற கட்சியிலோ அல்லது கூட்டணியோ இருந்திருந்தால் அந்தக் கூட்டணி கொடுத்துள்ள வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டனரா? என்று முதலில் பார...

தில்லு முல்லு திமுகவின் தில்லாலங்கடி வேலை

Image
  தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதும் SIR சிறப்பு வாக்காளர் திருத்த திட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சென்ற தேர்தலில் வாக்களித்த பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டின் பல தொகுதிகளிலும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் வாக்காளர்களின் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக அதிமுக பிஜேபி போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பும் சாதாரண வாக்காளர்களின் பெயர்களை வெகு சாமர்த்தியமாக நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.  சமீபத்திய தேர்தல்களில்  எந்த அரசியல் கட்சி வெற்றி பெற்றாலும் வெற்றி சதவீதம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் இதுபோன்று வாக்காளர்கள் நீக்கப்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பை உண்டாக்க அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே எதிர்க்கட்சியில் உள்ள பூத் கமிட்டி முகவர்கள் தங்கள் ஏரியாவில் உள்ள வாக்குச்சாவடி பூத் லிஸ்ட்டை வைத்து வீடு வீடாக சென்று ...

வங்கதேசத்தினர் ஊடுருவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Image
  நமது இந்திய நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் திருநாமல்  காங்கிரஸ் திமுக போன்ற எதிர்க்கட்சிகள் பலவும் வாக்காளர் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வருகின்றன.   இந்த தீவிர வாக்காளர் திருத்தச் சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம். பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருக்கும் நபர்கள் இறந்து போயிருந்தாலும் அல்லது மாற்றலாகி வேறு இடங்களுக்குச் சென்று இருந்தாலோ அவர்களது வாக்குரிமை பட்டியலில் இருக்கும். அவற்றை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் 18 வயதிற்கு மேல் உள்ள புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. பலர் சட்ட விரோதமாக அந்நிய நாட்டவர்கள் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர் அவற்றின் கண்டறிந்து நீக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.  இதனால் பெரும்பான்மை பொதுமக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெறும் நிலை உருவாகும். கள்ள ஓட்டுக்கள் தடுக்கப்படும் சட்டவிரோத ஜனநாயக நடைமுறைகள் தடுக்கப்படும். பொதுமக்கள்...

திமுக கையில் எடுக்கும் ஆயுதங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வுகிறதா?

Image
 தமிழகத்தில் திமுகவிற்கு எப்போதெல்லாம் பின்னடைவு பிரச்சனைகள் எதிர்ப்புகள் போன்றவை வருகிறதோ அப்போதெல்லாம் திமுக அதனை மடை மாற்ற பல யுக்திகளை கையாளும்.  அவற்றில் முக்கியமானது இந்தி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, நீட் விலக்கு மற்றும் மத்திய அரசின் சட்டங்களுக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு மக்களுக்கு தங்கள் மீது உள்ள கோபத்தையும் அதிருப்தியையும் சரி செய்ய இவற்றை ஆயுதமாக பயன்படுத்தும்.  அப்படி அவர்கள் சமீப காலங்களில் முயற்சி செய்த இந்தி எதிர்ப்பு, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றில் இவர்கள் செய்த அரசியல் எடுபடவில்லை.  தற்போது சென்னை சாலைகளில் நிலை, மழை வெள்ளம், விவசாய நெல் கொள்முதல், மற்றும் பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற இவர்களின் தவறுகளை மறைக்க இவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் SIR எனப்படும் வாக்காளர் சரி பார்க்கும் பணியை வைத்து ஒரு போராட்டத்தை உருவாக்க நினைக்கிறது திமுக அரசு.  தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக 2016ல் திமுக அரசே புகார் தெரிவித்து இருக்...

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் எழுச்சி

Image
  இந்தியாவில் எப்போதுமே விளையாட்டுக்களில் கிரிக்கெட்டுக்கு என்று தனி இடம் ஒன்று உண்டு.  இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே விரும்பி பார்த்து வந்தனர். பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் பெண்கள் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை பற்றி ஒருவருக்கும் தெரியாது.  ஆனால் தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக பெண்கள் அணியிலும் சில வீரர்கள் பேசப்பட்டு வருகின்றனர். ரசிகர்களிடையே பெண்கள் கிரிக்கெட் பற்றியும் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.  தற்போது நமது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மிகவும் வலுவானதாகவும் திறமை வாய்ந்ததாகவும் உள்ளது.  இந்த ஆண்டு உலக சாம்பியன்ளாக வந்துள்ள பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பொதிகை டைம்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.  நமது இந்திய ரசிகர்கள் எப்படி கிரிக்கெட்டை பெரிதாக ரசித்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்களோ அதே போன்று ஆக்கி ஃபுட்பால் கபடி பேஸ்கட் பால் போன்ற அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தினால் இந்திய அனைத்து விளையாட...

வாக்குத் திருட்டு. எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையா?

Image
  எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து தற்போது ஆளும் கட்சிக்கு எதிராக எடுத்திருக்கும் முக்கிய ஆயுதம் ஓட்டு திருட்டு.  கடந்த 14 வருடங்களுக்கு மேலாக மதில் ஆட்சி செய்து வரும் பிஜேபி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதுவும் குற்றம் சொல்ல வாய்ப்பில்லாத போது தற்போது அவர்கள் தேடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் வாக்குத் திருட்டு.  இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதுமே வாக்காளர் பட்டியலில் சில குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. தற்போது தொழில்நுட்பங்கள் பலவகையிலும் வளர்ந்து விட்ட பின்பும் நமது வாக்காளர் பட்டியில் சில குளறுபடிகள் இருக்கத்தான் செய்கிறது.அதை தற்போது சரி செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.   அதற்கு தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் பொழுது அந்தக் குளறுபடிகளால் ஆதாயம் அடைந்த கட்சிகள் அதை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. இவர்கள் சொல்வது போல் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்தால் அவற்றை ஆதாரத்தோடு பொதுவெளியிலும், தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் முறையிடலாம்.  வாக்காளர் பட்டியலில் ஒரே முகவரியில் பல வாக்காளர்க...

திமுக அரசு அடிப்படை பிரச்சனைகளையே தீர்க்க முடியாமல் திணறுவது ஏன்?

Image
  திமுக ஆட்சியில் தொடர்ந்து அடிப்படையாக மக்களுக்கு தேவையானவற்றை சரியாக செய்வதில்லை என்று குற்றச்சாட்டு பல மாதங்களாக எழுப்பப்பட்டு வருகிறது.  மற்ற எந்த ஆட்சிகளிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில் மட்டும் ஏன் இந்த அளவிற்கு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது என்பதை ஆராய்ந்த போது, திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தமிழ்நாட்டின் நிதி நிலைமையைப் பற்றி அறியாமல் தங்கள் வசதிக்கேற்ப வாக்குறுதிகளை அளித்ததன் விளைவு தற்போது மிகுந்த அதிருப்தியில் திமுக அரசு உள்ளது.  அது மட்டுமல்லாது திமுகவில் இருக்கும் பல அமைச்சர்கள் வயது மூப்பின் காரணமாக தங்கள் பணிகளை சரியாக செய்ய முடிவதில்லை என்ற கருத்துக்களும் நிலவுகின்றன. மேலும் திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களுக்கான நலன்களையும் வருமானத்தையும் பார்ப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.  இந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் பலரும் திமுகவின் தலைமைக்கும் அமைச்சர்களுக்கும் சாதகமாக செயல்படுவ...

உதயநிதிக்கு ஆப்பு அடிப்பது திமுகவினரே தானா?

Image
 தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க கட்சிகளில் ஒன்று திமுக ஆகும். திராவிட சிந்தாந்தத்தை முன்வைத்து அண்ணா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும்.  அண்ணாவின் மறைவிற்கு பின் அவருடன் பல மூத்த தலைவர்கள் கட்சி ஆரம்பிக்க உதவியவர்கள் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி திரு கருணாநிதி அவர்கள் இந்தக் கட்சியை கைப்பற்றினார். அன்று முதல் இன்று வரை அவரது குடும்பமே திமுக கட்சி என்று ஆகிவிட்டது.  தற்போது திமுகவின் உதயநிதியை முன்னிறுத்தி கட்சியில் பல பணிகள் நடந்து வருகின்றன. அவர் துணை முதலமைச்சர் ஆக இருப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் முதலமைச்சராகவும் வாய்ப்பு வரப்போகிறது  என்கிற செய்திகளும் வந்து கொண்டுள்ளன.  இந்நிலையில் திமுகவில் இருக்கும் சில மூத்த சீனியர் தலைவர்களுக்கும் அக்கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஒரு பகுதியினர் இந்த வாரிசு அரசியலில் சில வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டு அதற்கு உடன் உள்ளனர் என்பது அக்கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் மூலமாக தெரிய வந்தது.  இதனால் திமுகவில் உதயநிதியின் செயல்பாடுகள் பற்றி பின் தொடர்ந்து அவர் செய்யும்...