Posts

Showing posts with the label #தமிழ்நாடு

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

Image
  நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் 2026 இல் திமுக தனது ஆட்சியை தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியிடம்  இழந்து விட்டது.  அது மட்டுமல்லாமல் திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியை தழுவினார். மேலும் பல முக்கிய அமைச்சர்களும் தோல்வியை தழுவினர்.  இது போன்ற ஒரு பெரிய பின்னடைவுக்கு காரணம்  1 திமுக தனது ஆட்சிக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு பொற்கால ஆட்சியை கொடுத்தது போல மாய உலகத்தில் இருந்தது. 2 தனது ஆட்சியைப் பற்றிய விமர்சனங்கள் அல்லது எதிர் கருத்துக்கள் யார் கூறினாலும் கூறினாலும் அல்லது சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வந்தாலும் அவர்கள் மீது வழக்கு தொடுத்தல் அவர்களுக்கு இடையூறு செய்தல் போன்ற வேலைகளிலேயே ஈடுபட்டு வந்தது. மாறாக அவர்கள் கூறும் குறைகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடவே இல்லை. 3 மேலும் திமுகவில் உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வரை வாக்களித்த மக்களை துளியும் மதிக்காமல் மரியாதைக்குரியுடனும் ஏளனத்துடனும் ஒரு மன்னர் மனநிலையிலேயே அணுகி வந்தனர். 4 த...

இன்றைய11/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

Image
  நடந்து முடிந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பலரும் எதிர்பார்க்காத ஆச்சரியமான முடிவுகளை மக்கள் கொடுத்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் போது முன்னாள் அரசு கொடுத்த உதவித்தொகை இலவசங்கள் போன்ற எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும், மேலும் வாக்குக்கு பணம் பெற்றுக் கொண்டு பலரும் மாற்றி வாக்களித்துள்ளதையும் உறுதிப்படுத்துகிறது.  இதன் மூலம் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இனி வரும் காலங்களில் நீங்கள் வாக்குச் செலுத்த பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என்பதை தெரிவித்துள்ளனர்.  அது மட்டுமல்லாமல் ஆட்சி முடியும் தருவாயில் நீங்கள் மக்களை ஏமாற்ற கொடுக்கும் சிறப்பு உதவித்தொகைகள், விழாக்கால தொகுப்புகள், மற்றும் உதவித்தொகைகள் போன்ற எதுவும் வாக்குகளைப் பெற்றுத் தராது என்பதை நிரூபித்துள்ளனர்.  அதற்கு பதிலாக ஐந்தாண்டுகளும் சிறப்பான சட்டம் ஒழுங்குடன், தரமான உட்கட்டமைப்பு, ஊழலற்ற ஆட்சி, சிறந்த மருத்துவ வசதி, சிறந்த பொதுப் போக்குவரத்து, சிறப்பான தரமான கல்வி முறை இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தால...

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

Image
  இனி எங்கும் இப்படிதான்  ரொம்ப குஷ்டம் 😀😀 ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் இருந்து **இன்னோவா (Innova)** காரில் ஊர்வலமாகப் புறப்பட்ட 12 விஜய் ரசிகர்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.  நீதிமன்றம்** மற்றும் **மாவட்ட ஆட்சியர் அலுவலகம்** போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் முன்பாகக் கத்திக் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.  * அனுமதியின்றி ஊர்வலம் சென்றது மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது போன்ற காரணங்களால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட 12 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். தற்போது அவர்கள் **கேணிக்கரை காவல் நிலையத்தில்** வைக்கப்பட்டு, விசாரணை  வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. > **குறிப்பு:** பொது இடங்களில் இது போன்ற செயல்பாடுகள் சட்டப்படி குற்றமாகும். குறிப்பாக நீதிமன்றம் மற்றும் கலெக்டர் அலுவலகம் போன்ற 'அமைதி மண்டலங்களில்' (Silence Zones) ரகளை செய்வது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு வழ...

அதிமுக திமுக கூட்டணி பற்றி ஆலோசனை. உதயநிதி காரணமா?

Image
  தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் 2026ல் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால் அரசியல் சூழ்நிலையில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது.  தமிழக வெற்றி கழகம் 107 இடங்களில் இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் அவர்களால் அரசு அமைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அவர்களிடம் கூட்டணி சேரவும் அனைத்து கட்சிகளும் தயக்கம் காட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அவர்களுக்கு ஆதரவளித்துள்ளது.  இந்த நிலையில் வெட்டிக் கழகத்தின் தலைவர் திரு விஜய் அவர்கள் ஆட்சி அமைத்தால் அது திமுகவில் வளர்ந்து வரும் உதயநிதிக்கு பின்னாலில் பெரும் சவாலாக அமையும். விஜய் தனது கட்சியையும், அரசியல் இருப்பையும் பலப்படுத்திக் கொண்டால் உதயநிதிக்கு பின்னடைவாக அமையும் என்பதால் திமுக ஒரு புதிய ராஜதந்திரத்தை கையாள முடிவு செய்துள்ளது.  விஜய் ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக ஆட்சியை அமைத்து விட்டால் விஜயின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று கணக்குப் போட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  இதன் மூல...

புதிய தமிழக அரசு சந்திக்கப் போகும் சவால்கள்

Image
  தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் உள்ளது.  இந்த நிலையில் புதிய தமிழக அரசு அமைந்த உடன் அந்த அரசு சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? என்பது பற்றி பார்ப்போம். 1 தமிழக அரசு தற்போது 10 லட்சம் கோடி வரை கடன் சுமையில் சிக்கித் தவித்து வருவது முதல் பிரச்சனையாக இருக்கும். 2 தற்போதைய புதிய அரசு அமைக்கவிருக்கும் தமிழக வெற்றி கழகம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரம் என்பது அரசிடம் தற்போது இல்லாததால் பல வகையில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதற்கும். 3 தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தில் மூலம் மது விற்பனை நடைபெறுவதில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்பதாக தற்போது முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திரு விஜய் அவர்களே கூறியுள்ள நிலையில் அதனை சரி செய்வதும் சவாலானதாக இருக்கும். 4 தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் போதை பழக்கங்களையும் அதனால் ஏற்படும் வன்முறைகள் பாலியல் குற்றங்கள் போன்றவற்றை தடுப்பதும் மிகுந்த சவாலானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 5 இது எல்லாம் விட முக்கியமானது தமிழக வெற்றி கழகத்தின் தொண...

தமிழக வெற்றிக்கழக வெற்றியாளர்கள் கவனத்திற்கு

Image
  தமிழக வெற்றிக்கழக வெற்றியாளர்கள் கவனத்திற்கு  தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றம் என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தத் தேர்தலின் மூலம் பொதுமக்கள் அனைவரும் உணர்த்துவது என்னவென்றால் ஊழல் இல்லாத, போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத, சிறப்பான சட்டம் ஒழுங்குடன் கூடிய ஒரு நல்ல ஆட்சியை எதிர்பார்த்தே மக்கள் மாற்றத்தை விரும்பி திராவிட சித்தாந்தம் கொண்ட இரு பெரும் அரசியல் இயக்கங்கள் மீது இல்லாத ஒரு நம்பிக்கையை தமிழக வெற்றி கழகத்தின் மீது வைத்து தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.  மேலும் இலவசங்கள், வாக்கு செலுத்த பணம் போன்ற பல மக்களை வாக்களிக்க தூண்டும் தூண்டில்களில் எதுவும் சிக்காமல் நல்லாட்சி ஒன்றே நமக்குத் தேவை என்பதை உணர்ந்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது இந்த தேர்தலில்  தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. ...

ஓட்டு போட வந்தவர் மாயம்

Image
  தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுபலட்சுமி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 22ம் தேதி ஓட்டுப்போடுவதற்காக சொந்த ஊரான கண்டமனூருக்கு வந்தார. அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.. தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே நடந்த இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. மாயமான இளம்பெண் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்ட செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பணியாற்றி வந்த சுபலட்சுமி, தேர்தல் வாக்களிப்பதற்காக ஊருக்கு வந்த நிலையில், ஏப்ரல் 22-ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேடுதல் வேட்டையின் முடிவில், கண்டமனூர் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதி, போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் ந...

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் - ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம்

Image
  *கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் - ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம்*  கோவையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மூப்பன்பட்டி விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது  சாலையில் நின்று கொண்டிருந்த  சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பெயரின் முகப்பு பகுதி முழுவதுமாக சிதைந்து சேதமடைந்தது. இதில் ஆம்னி டிரைவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன், எட்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.  காயமடைந்த ஆம்னி பேருந்து டிரைவர் பேருந்து முன் பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று  சிக்கி தவித்த டிரைவரை மீட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ...

தென்காசியில் காணாமல் போன நிட்சேப நதி

Image
  தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் நிட்சேப நதி தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 11/2 லட்சத்திற்கும் மேலான விவசாய விளைநிலங்கள் செழிக்க உதவியது. கரிவலம் வந்தநல்லூர் வழியாக வைப்பாறை அடைந்து கடலில் கலக்கும் இந்நதி கங்கை நதியினைப் போல புனித நதியாக கருதப்படுகிறது. இதனால் மகாத்மா காந்தியின் அஸ்தியை 7 இடங்களில் கரைக்கப்பட்ட நிலையில் நிட்சேப நதியிலும் கரைக்கப்பட்டது. இந்நதியில் காந்தியின் அஸ்தி 12.2.1948ல் கரைக்கப்பட்டது. இதற்கான நினைவு கல்வெட்டு வினோபாஜி அவர்களால் 4.4.1957 ல் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக உடைந்தது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட அணை சீர்செய்யப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டது. இதன் பின் இதுவரையில் சீரமைப்பு பணிகள்...

வால்பாறை கொண்டை ஊசி வளைவில் விபத்து

Image
 இது அனைவருக்குமான பதிவு... 📢 வால்பாறை செல்லும் சாலையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவு மிகவும் குறுகலான வளைவுகளில் ஒன்று. 🛣️ இந்த பாதையை நன்கு அறிந்தவர்களே மேலிருந்து கீழே வரும்போது மிகக் கவனமாகத்தான் திரும்புவார்கள். ஆனால், புதியவர்கள் பலர் இந்த வளைவின் ஆபத்தை உணராமல் அலட்சியமாக, அதிவேகமாகத் திருப்புவதை நாங்கள் பலமுறை பார்த்திருக்கிறோம். 🏔️⚠️ இந்த வளைவு திரும்பும் இடத்தில் தடுப்புச் சுவரைத் தாண்டி தவறி விழுந்தால், இடையில் உள்ள 12 மற்றும் 10 ஆகிய வளைவுகளைத் தவிர்த்து, நேரடியாக 9-வது வளைவில்தான் போய் விழ நேரிடும். 📉 களப்பணியின் போது நாங்கள் 13-வது வளைவிலிருந்து நேரடியாக 9-வது வளைவு வரை சென்று அந்த ஆபத்தான சரிவை நேரில் பார்த்திருக்கிறோம். 14-வது வளைவிலிருந்து 13-வது வளைவு வரையிலான சாலை சற்று நேராக இருப்பதால், வாகன ஓட்டிகள் பலரும் அதிவேகமாக வருகிறார்கள். திடீரென வளைவு வரும்போது பிரேக் பிடித்து வேகத்தைக் குறைத்தால் மட்டுமே வண்டியைத் திருப்ப முடியும். அந்தத் தருணத்தில் பிரேக் சரியாகச் செயல்படவில்லை எனில், வாகனம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாவது உறுதி. 🚗💥 தற்போது நடந்த விபத...

விதிமீறல் அலட்சியத்தால் நடந்த விபத்து

Image
  நள்ளிரவில் டீ குடிக்கச் சென்றபோது நேர்ந்த கோரம்:  ஆம்னி பேருந்து மோதி +2 மாணவர்கள் 3 பேர் துடிதுடித்து பலி! **விருதுநகர்:** "டீ குடித்துவிட்டு இதோ வந்துவிடுகிறோம்" என  சென்ற மாணவர்கள், சடலமாகத் திரும்பிய சம்பவம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ### நண்பர்களுடன் நள்ளிரவு பயணம்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்த கோகுல் (17), அதே பகுதியைச் சேர்ந்த பிரசன்னா (17) மற்றும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்த யுவராஜ் (17) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் மூவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தனர். சமீபத்தில் தான் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த நிலையில், விடுமுறையை நண்பர்களுடன் கழித்து வந்துள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் சுமார் 12 மணி அளவில், நண்பர்கள் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் டீ குடிப்பதற்காக சாத்தூர் - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் புறப்பட்டுச் சென்றுள்ளனர். ### விபத்து நேர்ந்த...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Image
  எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் வாசகர்கள் நேயர்கள் விளம்பரதாரர்கள் மற்றும் எங்கள் செய்தியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  இந்த தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் இனிய புத்தாண்டாக அமையும் வாழ்க்கையில் மென்மேலும் பல வெற்றிகளை பற்றி அனைவரும் மனமகிழ்ச்சியோடு ஆரோக்கியத்தோடு சந்தோஷத்தோடு இனிய வாழ்வு அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

பரபரப்பாக போகும் #புளியரை சோதனை சாவடி! தென்காசி மாவட்டம்

Image
  பரபரப்பாக போகும் #புளியரை சோதனை சாவடி! தென்காசி மாவட்டம். 11.4.26 முதல் கனிமவள வாகனங்கள் #குமரிமாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருநெல்வேலில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்லக்கூடிய கனிம வள வாகனங்கள் அனைத்தும் இனி புளியரை சோதனை சாவடி வழியாக கேரளாவிற்கு நுழையும். ஏற்கனவே தினம்தோறும் 500 வாகனங்கள் கனிம வளங்கள் ஏற்றி கேரளாவிற்கு செல்கின்றன  600 காலிவாகனங்களாக வருகின்றன. இந்த நிலையில் இன்னும் 500 வாகனங்கள் இந்த பாதையில் பயணித்தால் நிலைமை என்னவாகும். விபத்துகள் அதிகமாகும்! சாமானியன் சாலையில் பயணிக்க இயலாத நிலை ஏற்படும். ஏற்கனவே 10.4.26 இன்று இரவு புளியரை சோதனை சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல். நிலைமையை கருத்தில் கொண்டு District Collector Tenkasi | Tenkasi District Police தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். C Krishnamurali MLA | Shahin Fathima | தி.மு.இராசேந்திரன் திருமலாபுரம் | Niyas NjsR-Tvk  Adv Abubacker  #DMK #TenkasiDistrict #கனிமவளம் #ADMK

கடன் கொடுத்தவர் தற்கொலை

Image
  கடன் கொடுத்தவர் தற்கொலை..  கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபீஸ் தெருவில் வசித்தவர் சுப்பையா மகன் சந்திரன் (வயது 72). இவர் தச்சு தொழில் செய்து வந்தார். கடையநல்லூர் மதினா நகர் பகுதியைச் சேர்ந்த அப்துல் சலாம் மகன் முகமது ரபீக். இவர் அப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓட்டல் நடத்தி வந்தார். அப்பொழுது சந்திரனிடம் ஓட்டல் உரிமையாளர் முகமது ரபிக் ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் மேலும் 17 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு முகமது ரபீக் 27 லட்ச ரூபாய் மதிப்புள்ள தனக்கு சொந்தமான நிலத்தை சந்திரனுக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். பின்னர் அது போலி பத்திரம் என தெரிய வந்ததால், தான் கொடுத்த 27 லட்ச ரூபாய் பணத்தை திரும்பி கேட்டதால் முகமது ரபீக் ஓட்டலை மூடிவிட்டு தலைமறைவானார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக முகமது ரபீக் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தார்களிடம் பணத்தை கேட்ட நிலையில் பணம் திரும்ப கிடைக்காது என்ற விரக்தியில் நேற்று முகமது ரபீக்கின் வீட்டு வாசலில் சந்திரன் உடலில் மண் எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல்...

ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற தனியார் பேருந்து விபத்து

Image
  சற்று முன்பு (07/04/2026) ஏரலிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது பேருந்து சாலை ஓரத்தில் இருந்த தரிசு நிலத்தில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை ஓடி நின்றது. இதில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டிக்கொள்வோம். 🙏✨ #NewsUpdate #RoadSafety #TamilNews #Thoothukudi #Eral #BusAccident #SafetyFirst #MorningVibes #TamilNadu #PublicTransport #StaySafe 🚌⚠️

தாம்பரம் அருகே கடன் தொல்லையினால் இரண்டு குழந்தைகளுடன் இளம் தாய் த*ற்கொ*லை

Image
  தாம்பரம் அருகே கடன் தொல்லையினால் இரண்டு குழந்தைகளுடன் இளம் தாய் த*ற்கொ*லை செய்து கொண்ட சம்பவம் பெரும் அ*திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  படப்பையை அடுத்த மாடம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஷாம்ஷியா (26), தனது கணவர் ஆசிப் கடந்த ஆண்டு தொழில் ந*ஷ்டம் காரணமாக த*ற்கொ*லை செய்துகொண்ட நிலையில், தன் இரண்டு கு*ழந்தைகளான ஆசிபா (10) மற்றும் அப்சர் (5) ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார்.  கணவர் ம*றைவிற்குப் பிறகும் தீராத கடன் சுமைகளால் அவர் மன உ*ளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. தன் குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்த ஷாம்ஷியா, சமீபகாலமாக சென்னை கொளத்தூரில் வசித்து வந்தார்.  இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர், அங்கு செல்லவில்லை. நேற்று காலை மாடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் ஷாம்ஷியா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உ*டல்கள் மி*தப்பதைக் கண்டு அ*திர்ச்சியடைந்த பொதுமக்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த ம...

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியை பொருத்தவரை பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களும் கூலி தொழிலாளர்களுக்கும் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியை பொருத்தவரை பல ஆண்டுகளாக பெரிய வளர்ச்சிகள் ஏதும் இல்லாத பகுதி ஆகும்.  இந்த தொகுதியில் நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் இழுப்பதி நிலையே காணப்பட்டது. எந்தக் கட்சி இங்கு வெற்றி பெறும் என்ற வாய்ப்பு தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் நமது கருத்துக்கணிப்பின் கணக்குகளின் படி தி மு க கூட்டணி சிறிய அளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக முடிவுகள் வந்துள்ளது.  இந்த கருத்துக்கணிப்பு வேட்பாளர் தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதால் அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் பலத்தைப் பொறுத்து வாக்குகள் மாறவும் வாய்ப்பு உள்ளது.  இங்கு தமிழக வெற்றி கழகத்தின் வாக்குகள் 10 சதவீதம் அளவிற்கு நமது கருத்துக்கணிப்பில் உள்ளதாக தெரி...

நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்

Image
  நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான பணிகளுக்கு பதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை மாநகரில் அழகு நிலையத்துக்குள் புகுந்து அத்துமீறி பெண்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் ஒரு மகளிர் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 26ம் தேதி மாலையில் வழக்கம்போல் பெண் ஊழியர்கள் சிலர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காவல் சீருடையில் வந்த 2 பேர் அழகு நிலையம் முன்பு நின்றுள்ளார்கள்.. அவர்களில் ஒருவர் திடீரென அழகு நிலையத்துக்குள் சென்று, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், "இங்கு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் தர வேண...

புளியங்குடியில் மனதை வேதனை பட வைக்கும் சோக சம்பவம்

Image
  புளியங்குடியில் பள்ளி மாணவிகளின் மீது பள்ளிக்குள் விரைந்து வந்த கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிர் இழப்பு பெற்றோர்கள் கொதிப்பு 5 மணி நேரம் சாலை மறியல்  பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரசு அதிகாரிகள் வராததால் சம்பவம் நடந்த பள்ளிக்கு திடீரென திரண்டு பள்ளியின் மீது கற்கள் வீசி பரபரப்பு தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் புளியங்குடி அருகே உள்ள   நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி வேல்மகில் தம்பதியரின்  ஒரே மகள்   சிவயாழினி  (4) பள்ளியில் யுகேஜி  படித்து வந்தார் மாலை வீட்டிற்கு செல்வதற்கு பள்ளி மைதானத்தில் மாணவி நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த ஒரு கார் மாணவியின் மீது மோதியதாக கூறப்படுகிறது இதில் படுகாயம் அடைந்த மாணவி சிவ யாழினி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு சிவ யாழினி பரிதாபமாக இறந்து போனார்  இந்நிலையில் மாலை நேரத்தில் பள்ளியில் பஸ்ஸில் மாணவி...