Posts

Showing posts with the label #அரசியல்

திமுகவின் பெயர் அரசியல் எடுபடுமா?

Image
  தமிழகத்தில் தற்போது மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி அதைப் பெயர் மாற்றியது சம்பந்தமாக திமுக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.  திமுக செய்யும் இந்த பெயர் அரசியலில் அவர்களே சிக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. காரணம் தமிழகத்தில் பல விடுதலைப் போராட்ட வீரர்கள் முக்கிய அரசியல் தலைவர்கள் இருந்தும் இவர்கள் வைக்கும் அனைத்து திட்டத்திற்கும் பெயர் முதலமைச்சர் ஸ்டாலின் பெயராகவே உள்ளது. மேலும் பல அரசு பேருந்து நிலையங்களுக்கும் கட்டிடங்களுக்கும் பாலங்களுக்கும் கருணாநிதி பெயர் அல்லது தெலுங்கர்களின் பெயர்களையே வைத்துள்ளனர். இவர்கள் இதுவரை ஏதாவது ஒரு திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை வைத்துள்ளனர் என்ற கேள்வி எழுகிறது.   பாராளுமன்றத்தில் திருச்சி சிவா எம் பி அவர்கள் தென்னிந்திய குறிப்பாக தமிழ் சுதந்திரப் போராட்ட வீரர்களை பற்றி வடமாநிலங்களில் உள்ளவர்களுக்கும் மத்திய அரசுக்கும் தெரியவில்லை என்றும் உரிய அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.  ஆனால் இங்கு தமிழ்நாட்டில் ஒரு திட்டத்திற்கு கூட ஒரு இடத்திற்கு கூட ...

இந்தியாவில் இளைஞர்கள் சீரழிந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

Image
 நமது இந்திய நாட்டில் நியூ ஆப்ஸ் டைம்ஸ்  பத்திரிகை எடுத்த ஆய்வில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்கள் சீரழிந்த மாநிலத்தில் நமது தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.  இந்தியாவின் நியூ ஹேர் டைம்ஸ் பத்திரிகை எடுத்த ஆய்வில் மது, போதைப் பொருள் பழக்கம், பொறுப்பற்ற நடைமுறைகள், சட்ட விதிமுறை மீறல்களில் முதலிடம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் ரவுடிசம் இவற்றின் அடிப்படையில் இந்தியாவிலேயே தமிழக இளைஞர்கள் தான் அதிகம் சீரழிந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  இந்தப் பெருமை அனைத்தும் நமது திராவிட மாடல் அரசையும், காவல்துறையின் அமைச்சராக இருக்கும் முதலமைச்சரையும் சாரும்.  இனியும் தமிழகம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தமிழக இளைஞர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாவது உறுதி.

அறிவு ஜீவி அடி முட்டாள் ஆன கதை

Image
  நமது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பல ஆண்டுகள் திரையுலகல் மின்னி வந்த திரு கமலஹாசன் அவர்கள் சினிமாவில் நடிப்பு, டைரக்ஷன், தயாரிப்பு, பாடகர் என பன்முகத்திறமை கொண்ட ஒரு சிறந்த கலைஞனாக அனைவராலும் அறியப்பட்டவர். சினிமாவில் அவருக்குத் தெரியாத துறைகளை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் பல விஷயங்களை கற்றுத் தேர்ந்தவர். பல மொழிகளும் அறிந்தவர். தென்னிந்திய சினிமா முதல் பாலிவுட் வரை தன் வெற்றி கொடியை நாட்டியவர். சினிமாவில் அவர் ஒரு அறிவிஜீவி என்பதற்கு மாற்று கருத்து இல்லை.  அதனால் தானோ என்னவோ அரசியலிலும் நாம் அதே போன்று எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணி ஓவர் கான்ஃபிடன்ஸ் உடன் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தொடங்கிய புதிதில் வீராவேசமாக பல கருத்துக்களை தெரிவித்தார். குறிப்பாக அவரது தேர்தல் பிரச்சார விளம்பரத்திலேயே குடும்ப அரசியல், ஊழல், நிர்வாகத் திறமையின்மை போன்ற பல விஷயங்களுக்கு எதிராக கோபப்பட்டு தன் சின்னமான டார்ச் லைட்டை டிவியின் மேல் போட்டு உடைத்தார்.   ஆனால் அவரது அரசியல் எதிர்ப்புகள் எல்லாம் ஒரே தேர்தலில் காணாமல்...

ஊழலில் பட்டம் பெற்றுள்ளது தமிழ்நாடு. மார்க்கண்டேய கட்ஜூ கருத்து

Image
  இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் தமிழ்நாடு ஆளப்படுகிறது.முன்னாள் நீதிபதி கருத்து.  முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "இந்தியாவில் ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.ஊழல் இல்லாமல் எதுவும் நகராத மாநிலம் என்ற பெருமையைப் பெறலாம், இந்தியாவிலேயே மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தால் தமிழ்நாடு ஆளப்படுகிறது. முன்னாள் பிரதமர் நேரு, முதலமைச்சர் காமராஜரின் கீழ் இருந்த தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலம் என்று வர்ணித்த காலத்திலிருந்து இது வெகு தொலைவில் உள்ளது.  தமிழ்நாட்டில் ஆளும் நவ-பாசிச திமுக ஆட்சி, அதன் ஊழல் மற்றும் பிற தவறான செயல்கள் குறித்த எந்தவொரு எதிர்ப்பையும் அல்லது விமர்சனத்தையும் பொறுத்துக்கொள்ள விரும்பாதது போல் தெரிகிறது, எந்தவொரு எதிர்ப்புகளையும் அடக்குவதற்காக, மாநிலத்தில் ஒரு பயங்கர ஆட்சியைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.  இதன் விளைவாக, பயங்கரமான விளைவுகளை எதிர்கொள்ள அஞ்சி, எந்த ஊடகவியலாளரும் அதற்கு எதிராகப் பேசத் துணிவதில்லை. சவுக்கு சங்கர் தமிழ்நாட்டில் பிரபலமான, துணிச்சலான மற்றும் நேர்மையான யூட...

நம்பிக்கை துரோகியான நாம் தமிழர்

Image
  தமிழ்நாட்டில் அரசியல் முக்கிய கட்சிகளில் ஒன்று நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தமிழ் மற்றும் தமிழ் தேசியம் பற்றி எப்போதும் பேசக் கூடியவர். அப்படி அவர் தமிழ் பற்றி பேசும்போது தமிழ் கடவுள் ஆன முருகனை முப்பாட்டன் முருகன் என்று அழைப்பார்.  எப்போதும் முருகனைப் பற்றி பேசக்கூடிய திரு சீமான் அவர்கள் தமிழ் கடவுள் முருகன் திருத்தலமான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வின் போது நடந்த பிரச்சனையைப் பற்றி வாயே திறக்காமல் அமைதி காத்துள்ளார்.  தமிழ்நாட்டில் பிஜேபி தவிர சிறுபான்மை வாக்குகளுக்காக அனைத்து கட்சிகளும் சிறுபான்மை வாக்குகளுக்காக தங்கள் சுய கௌரவத்தையும் தன்மானத்தையும் கூட அடக்க வைக்க தயங்க மாட்டார்கள் என்பதற்கு திரு சீமான் போன்றவர்களை சாட்சி. மற்ற விஷயங்களுக்கெல்லாம் முந்திக்கொண்டு கருத்து சொல்லும் திரு சீமான் அவர்கள் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றும் விழாவின் பிரச்சனையில் ஓடி ஒளிந்து கொண்டு வாயில் வாழைப்பழத்தை வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. மொத்தத்தில் இந்து மக்களுக்கு நம்பிக்கை துரோகியாக மாறிவிட்டது நாம் தமிழர் கட்சி....

திராவிட மாடல் vs தேசிய மாடல்

Image
 நமது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக தலைமையிலான அரசு தங்களை திராவிடம் மாடல் அரசு என சொல்லிக் கொள்கிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேசிய மாடல் என அழைக்கப்படுகிறது.  இந்த இரு அரசுகளும் தங்கள் ஆட்சி காலத்தில் செய்த நன்மைகள் திட்டங்கள் பற்றி பார்ப்போம்.  திராவிட மாடல்   ஆட்சிக்கு வந்தவுடன் முதல் அறிவிப்பாக மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டது. இதில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய வசதியாக இருந்தாலும் போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்க முடிவதில்லை என்ற பிரச்சனையும் வரும் பேருந்துகள் சரியான நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை என்ற பிரச்சனையும் பேருந்துகளில் தரம் மிகக் குறைவாக உள்ளதாகவும் பயணிகள் பயணம் செய்யவே பயப்படும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் பல மாதங்கள் கடந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் அதை வைத்து அரசியல் அழுத்தம் கொடுத்ததால் அனைவருக்கும் ஆயிரம் உதவித்தொகை என்பது மாறி தகுதி உள்ளவ...

மத வழிபாடு பற்றி அரசியல் அமைப்பு என்ன சொல்கிறது?

Image
 நமது இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுகிறது. இங்கே ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் அவர் விருப்பப்படி அவரது மத வழிபாட்டு முறைகளை பின்பற்ற உரிமை உள்ளது.  ஆனால் நமது தமிழ்நாட்டில் இந்து மதத்தை தவிர மற்ற எல்லா மதங்களுக்கும் அந்த உரிமை உள்ளது. ஆனால் இந்து மதத்தை நமது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கையில் வைத்துக்கொண்டு குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போன்று வைத்திருக்கிறது.  இந்திய அரசு சட்டப்படி இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்ள அதிகாரம் கோயில் சொத்துக்களை நிர்வகித்து அதன் வரவு செலவு கணக்குகளை சரி பார்த்து கோயிலுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுப்பது மட்டுமே ஆகும். மற்றபடி நமது இந்து சமயத்தின் ஆகம விதிகள், வழிபாட்டு சட்டதிட்டங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் தலையிட உரிமை இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் தற்போது இந்து சமய அறநிலைத்துறை என்பது முழு வீச்சில் இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நமது இந்து கோவில்களின் நிதி வருவாய் எடுத்து அரசு பல்வேறு ...

நடிகர் விஜயின் ஊமைக்குத்து அரசியல்

Image
  நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் நீட் விளக்கு, சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் போன்றவற்றை வைத்து அரசியல் செய்து வந்தார்.  ஆனால் தமிழக அரசின் நிர்வாக திறமையின்மை, அந்நிய முதலீடு இருப்பதில் நடந்த குளறுபடிகள், தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் பாலியல் வன்கொடுமைகள், வேங்கை வெயில் பிரச்சனை, கனிம வள கொள்ளை போன்ற எந்த பிரச்சனையைப் பற்றி பேசாமல் திமுகவுக்கு முட்டுக்கொடுத்து அரசியல் செய்து வரும் நடிகர் விஜய் தற்போது சிறுபான்மை வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்தி வருவதால் தற்போது வெகுவாக பேசப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் பிரச்சினையும் தனது கருத்தை சொல்ல வக்கில்லாமல் திராணியில்லாமல் அமைதியாக பனையூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது.  இவரை களம் இறக்கீடு கிறிஸ்தவ மிஷனரி சிறுபான்மை மக்களும் பின்னாலிருந்து செயல்படுவதால் திருப்பரங்குன்றத்தில் நடந்த அநீதியை பற்றி பேசினால் இவரது அரசியல் முடிவு வந்துவிடும்  என்று அஞ்சி நடுங்கி பேசாமல் இருக்கிறார்.  மேலும் தற்போது சிறுபான்மை மக்களை பொருத்தவரை ஸ...

சிறுபான்மை வாக்கு வங்கி படுத்தும்பாடு

Image
  நமது இந்திய திருநாடு மதசார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதிலும் அரசியல் கட்சிகள் மட்டும் மதசார்பற்று இயங்குவதில்லை.  அதேபோல் சில மதங்கள் சார்ந்தவர்களும் அந்த மத அமைப்புகளும் அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளன. அந்த குறிப்பிட்ட மதங்களைப் பொறுத்தவரை ஒரு தனி மனிதன் தான் விருப்பப்பட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க அனுமதிப்பதில்லை. மாறாக அவர்களின் மதக் கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறதோ அவர்களுக்கு வாக்கைச் செலுத்துகின்றனர்.   இதனால் தேர்தல் நேரங்களில் அரசியல் கா நேரங்களில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் கேட்கும் வாக்குறுதிகளை செய்து தருவதாக உறுதி அளிப்பதோடு ஆட்சிக்கு வந்த பின்னும் அவர்களுக்கு வாலாட்டும் நாய்கள் போல சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.  சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ மற்ற மதங்களை குறை சொல்லி அவர்களை விரோத மனப்பான்மையோடு அணுகினால் மட்டுமே சிறுபான...

விடுதலைச் சிறுத்தைகள் கடந்து வந்த பாதை

Image
  தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம் தான் விடுதலை சிறுத்தைகள். இது அந்த மக்களின் முன்னேற்றத்திற்கும் வாழ்வாதாரத்தில் மாற்றங்களை கொண்டு வரவும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு அரசியல் களத்தில் செயல்பட்டு வந்தது.  ஆரம்ப காலத்தில் அவர்களின் நோக்கத்தில் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தவர்கள். நாளடைவில் அரசியல் சூழ்நிலைகள் காரணமாகவும் தங்கள் சுயலாபத்திற்காகவும் சில தவறான முடிவுகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.  அது மெல்ல மெல்ல விரிவடைந்து தற்போது விடுதலை சிறுத்தைகள் பற்றிய பொது மக்களின் கருத்து எப்படி இருக்கிறது என்றால் சமூக விரோத செயல்களிலும் கட்டப்பஞ்சாயத்துகளிலும் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் மற்ற சமூகப் பெண்களிடம் காதல் என்ற பெயரில் தொந்தரவு செய்து அவர்கள் வாழ்க்கையை சீரழிப்பது அல்லது பெற்றோர்களிடம் கட்ட பஞ்சாயத்து பேசுவது பணம் பறிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக கூறப்படுகிறது.  அதுமட்டுமல்லாமல் ரவுடிகளாகவும் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அரசியல் அல்லகைகளாகவுமே இருக்கின்றனர் என்றும் அரசிய...

பாண்டிச்சேரியை குறி வைக்கிறாரா விஜய்

Image
தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி கிடைக்காத நிலையில் பாண்டிச்சேரியில் தனது பிரசாரத்தை பயன்படுத்தி நடிகர் திலகம் எம்ஜிஆர் போன்று அவர் பாணியில் முதலில் பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நடிகர் விஜய் செயல்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  நடிகர் விஜய் அவர்களோடு இருக்கும் திரு புஸ்ஸி ஆனந்த் அவர்கள் ஏற்கனவே பாண்டிச்சேரி எம்எல்ஏவாக இருந்தவர். பாண்டிச்சேரி அரசியல் குறித்து சில தகவல்களை அறிந்து வைத்திருப்பதோடு அங்குள்ள அரசியல் தலைவர்களின் வட்டாரத்தில் அவருக்கு பழக்கம் உள்ளது.  இதனால் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி அங்கு ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் எண்ணமாக உள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் பின்னால் ஓடும் அரசியல்வாதிகள்

Image
  தமிழக அரசியல் எப்போதுமே திரை பிரபலங்களை தூக்கி வைத்துக் கொண்டாடும் என்பதில் சந்தேகமில்லை. நமது தமிழக வாக்காளர்களின் மனநிலையை சினிமாவில் ஒரு நடிகர் நல்லது செய்வது போல் நடித்தால் அதை நம்பி ஏமாறும் சுபாவம் படைத்தவர்கள் தான்.  தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தொடங்கியுள்ள கட்சியை நம்பி அதிமுகவில் உள்ள பல பெரிய அரசியல் அனுபவம் உள்ள  தலைவர்களும் மற்றும் சில தொண்டர்களும் தாவியுள்ளனர்.  இது அதிமுக மட்டுமல்லாமல் மற்றுமுள்ள அனைத்து கட்சிகளிலிருந்தும் சிலர் தமிழக மக்கள் நடுநிலை கொண்டாடுவார்கள் என்ற சிந்தனையோடு கட்சி மாற வாய்ப்பு உள்ளது.  ஆனால் அரசியலில் நடிகருக்குள்ள ஒரு ஈர்ப்பும் புகழும் மட்டுமே போதாது. ஒரு நல்ல தலைவருக்கு முக்கியமான அம்சங்கள் என்னவென்றால்  தொலைநோக்குப் பார்வை   ஒரு அரசியல் தலைவர் இன்று வரும் பிரச்சினைகளை மட்டும் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் பின்னாளில் பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது போன்ற பிரச்சினைகள் திரும்ப எழும்ப வண்ணம் முடிவுகளை எடுக்க வேண்டும்.  முன்னேற்றத் திட்டங்கள்   இப்போது நமது பகுதியில் உள்ள பிரச்சனைகள...

சொந்தக்காசில் சூனியம் வைத்த உதயநிதி

Image
  திமுக அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சி என்றாலும் அக்கட்சி தற்போது கருணாநிதி குடும்பம் மொத்தம் தான் ஆண்டு அனுபவித்து வருகிறது.  அந்த வகையில் தற்போது கருணாநிதி தொலைந்து ஸ்டாலின் ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதி தலைமை பதவிக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறார்.  அதற்கு முன்னோட்டமாக வாழும் சட்டமன்றத் தேர்தலில் அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் வகையில் ஒரு புதிய பாடலை தயார் செய்து திமுக வெளியிட்டுள்ளது.  அது தற்போது எதிர்மறை பாதிப்பை அதிகமாக திமுகவிற்கு வழங்கி வருகிறது. அந்தப் பாடலை வைத்து தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள், பாஜக தொண்டர்கள் மற்றும் திமுக எதிர்ப்பாளர்கள் அனைவரும் உதயநிதியையும் அந்தப் பாடலையும் வைத்து சிறப்பான முறையில் ட்ரோல்  செய்து வருகிறார்கள். இது திமுகவுக்கு பலத்த பின்னாடைவாகவே பார்க்கப்படுகிறது.  தமிழக வெற்றி கழக விஜய் மற்றும் பாஜக அண்ணாமலை போன்ற இளம் தலைவர்களுக்கு எதிராக உதயநிதியை பெரிய தலைவராக ஒரு பிம்பத்தை உருவாக்க நினைத்து தனது சொந்த காசி சூனியம் வைத்தது போல் கொஞ்சநஞ்சம் திமுகவினரிடம் இருந்த தலைவர் இமேஜையும் டோட்டல் ட...

தமிழ்நாட்டில் 2026 இல் தொங்கு சட்டசபை அமைந்தால்

Image
  தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான்கு முறை போட்டியாக நடைபெற வாய்ப்புகள் பெருமளவில் உள்ளன.  தற்போது வரையில் அதிமுக பாஜக தனிமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமை ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும், தமிழக வெற்றி கழகம் ஓர் அணியாகவும் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  அவ்வாறு நடந்து சட்டமன்றத் தேர்தலில் விஜய் குறிப்பிடத்தக்க வாக்குகளை எடுத்து சில எம்எல்ஏக்களை தமிழக வெற்றி கழகம் பெற்றிடும் நிலையில் ஒருவேளை அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் கிட்டத்தட்ட ஒரே அளவு எம்எல்ஏக்களை பெற்றிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் யாருக்கு ஆதரவளிக்கிறதோ அவர்களை ஆட்சி அமைக்க முடியும் என்கிற ஒரு சூழ்நிலை வந்தால் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து ஓர் அரசியல் ஆய்வாளரின் கருத்து இது.  தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு எந்த ஒரு கூட்டணியும் தனிப்பெரும்பான்மை பெறாமல் தொங்கு சட்டமன்றம் அமையும் சூழ்நிலை வந்தால் தமிழகத்தின் புதுவரமான தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்கிற ஒரு சூழ்நிலை வரும் பொழுது இரு...

தமிழகமெங்கும் சாலைகளின் அவலநிலை

Image
  தமிழகத்தில் தற்போது எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் பள்ளி செல்லுதல் போன்ற பல காரணங்களுக்காக தினசரி வெளியே சென்று வரும் நிலையில் நமது தமிழ்நாட்டின் பெரும்பாலான சாலைகள் வயல்வெளிகளைப் போல் சேரும் சகதியும் ஆக மழை நீரோடு சேர்ந்து கழிவு நீரும்  சாலைகளில் தேங்கியுள்ளது.  இதில் பயணிப்பதால் பலருக்கும் பலவிதமான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலைகளில் உள்ள பள்ளமேடுகள் நீர் நிரம்பியுள்ளதால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பலரும் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகளும் அன்றாடம் நடைபெற்று வருகிறது.  திராவிட மாடல் ஆட்சி என்று பெருமை பேசும் இந்த ஆட்சியாளர்கள் கடந்த நான்கரை வருடங்களாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் எதிலும் சாலைகளை சிறப்பாக சீரமைத்ததாக ஒரு தமிழக சாமான் என் கூட தெரிவிக்கவில்லை. சில சாலைகள் போடப்பட்டாலும் கூட அவை தரத்தில் மிக மோசமாகவும் ஒரு மலைக்கு கூட தாங்காத அளவிற்கு தகுதியற்றதாக உள்ளது.  இதற்கு நாம் ஆட்சியாளர்களை குறை சொல்லி ஒன்றும் பிரயோஜனம் இல்லை. இலவசத்திற்காகவும் காசுக்...

இட ஒதுக்கீடு சமூகத்தை சம நிலைக்கு கொண்டு வந்து விட்டதா?

Image
நமது இந்திய திருநாட்டில் அரசியலமைப்புச் சட்டம் ஆரம்ப காலத்தில் இருந்தே இட ஒதுக்கீடு சட்டம் அமலில் உள்ளது. இது நமது இந்திய நாட்டின் சமூக அமைப்புகளை சமநிலைக்கு கொண்டு வரும் நோக்கோடு உருவாக்கப்பட்டது.  தற்போது சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகாலம் ஆன பின்னரும் ஆரம்ப காலத்தில் இருந்த அதே இட ஒதுக்கீடு முறை இன்றும் தொடர்ந்து பிரிந்து வருகிறது.  எப்போதுமே ஒரு சட்டம் காலம் மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே அது மக்களுக்கு பயனளிக்கும் என்பது நிதர்சனம்.  சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு முறையில் தற்போது பலன் பெற்று வரும் மக்களை யார் என்று கணக்கெடுத்தால் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளாக முதன்முறை பலன் பெற்றவர்களே அவர்களது வாரிசுகளுக்கு அப்பலன்களை கொண்டு சேர்ப்பது தெரியவரும்.  ஒரு விளிம்பு நிலை சமூகம் சமநிலை பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின் மூலமாக ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் பலன் பெற்று வருகிறார்கள் என்பது நமது குற்றச்சாட்டு.  அதே விளிம்பு நிலை பகுதியில் உள்ள மக்கள் இன்னமும் தங்...

உங்கள் பகுதியின் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும்?

Image
 தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உங்கள் பகுதியில் நல்ல வேட்பாளரை எப்படி தேர்வு செய்யலாம் என்பது குறித்து சில கருத்துக்கள் கொடுத்துள்ளோம். இதை பயன்படுத்தி சிறந்த வேட்பாளரை தேர்வு செய்து வாக்களித்து வெற்றி பெற வைத்து உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யுங்கள்.  முதலில் உங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். அதில் ஏற்கனவே பலமுறை போட்டியிட்ட வேட்பாளர்களின் விவரங்களை வைத்து ஆர் போட்டியிட்ட ஒவ்வொரு முறையும் என்னென்ன வாக்குறுதிகள் எல்லாம் அளித்துள்ளார். அதில் எத்தனை சதவீதத்தை நிறைவேற்றி உள்ளார். அவர் சார்ந்த அரசியல் கட்சி என்னென்ன வாக்குறுதிகளை அளித்தது அதில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளது என்பது குறித்து ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். இதை வைத்து அவர்கள் எத்தனை சதவீதம் நம்பகத்திற்குரியவர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.  உங்கள் பகுதியில் அரசியல் கட்சிகளையும் தாண்டி உங்கள் தனிப்பட்ட அரசியல் சார்பையும் விட்டு தனிப்பட்ட முறையில் எந்த வேட்பாளர் சிறந்தவர் என்பதை கண்டறிய உங்கள் பகுதியி...

தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் சரியா?

Image
  தமிழகத்தில் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர் என்று பரவலான கருத்து நிலவி வரும் நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.  தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. கரூரில் நடைபெற்ற சம்பவத்திற்கு பின் அமைதி காத்து வந்த தமிழக வெற்றி கழகத்தினர் தற்போது லேசாக வெளிவந்து மீண்டும் தங்கள் அரசியலை தொடங்கியுள்ளனர்.   தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய தலைவர்கள் நடிகர் விஜய் புஸ்சி ஆனந்த் உட்பட பலரும் கரூர் சம்பவத்திற்கு பின் ஒளிந்து கொண்டனர். தற்போது அதன் தாக்கம் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பிய பின் தங்களின் அரசியலை தொடர ஆரம்பித்துள்ளனர்.  இந்நிலையில் அவர்கள் செய்யும் அரசியல் என்பது திமுகவின் காப்பியாகவே உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். திமுக தங்கள் அரசியலில் எப்படி முன்னெடுத்துச் செல்கிறதோ அதேபோன்று  தமிழக வெற்றி கழகத்தின் அரசியலும் செயல்படுகிறது.  குறிப்பாக மத்திய அரசை காரணம் இல்லாமல் எதிர்ப்பதிலும், நீட் தேர்வு விவகாரத்திலும், சிறப்பு வாக்க...

திமுகவின் தவறான அணுகுமுறையால் முதலீடுகளை இழக்கும் தமிழகம்

Image
  திமுக ஆட்சிக்கு வந்த பின் வருடம் ஒருமுறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக நமது முதலமைச்சராக அவர்கள் பல நாடுகளுக்கு சென்று வருகிறார். அவர் ஒவ்வொரு முறை வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு சில ஆயிரம் கோடிகளுக்கு முதலீடு வந்துள்ளது என்று அறிக்கைகளை அளிப்பார்கள்.  ஆனால் உண்மையில் அதில் பாதி நிறுவனங்கள் கூட புதியதாக தொழிலை தொடங்கியதாக தெரியவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இவர்கள் அளிக்கும் அறிக்கைகளில் உள்ள பாதி நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்களை நடத்தி வரும் நிறுவனங்களாக உள்ளது.  திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது வேதாந்தா காப்பர் நிறுவனத்திற்கு எதிராக தூத்துக்குடியில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி தேவையில்லாமல் தன்னை கார்ப்பரேட் விரோதியாக காட்டிக் கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால் பின்வரும் காலங்களில் திமுகவை தங்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.  இதனால் புதிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது திமுக ஆட்சியில் புதிதாக த...

தமிழகம் மெல்ல மெல்ல தெலுங்கர்கள் பிடியில் செல்கிறதா?

Image
  தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சி எப்போதும் செய்வது மொழி அரசியல்.  அவர்கள் எப்போதும் இந்தி மொழியை எதிர்த்து போராட்டம் நடத்துவதும் ஏதோ தமிழ் மொழிக்கு அவர்கள் தான் பாதுகாப்பு அதிகாரம் பெற்றவர்கள் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.  ஆனால் உண்மையில் தமிழ் மொழியை திட்டமிட்டு அழிப்பதும் தமிழர்களை பின்னுக்கு தள்ளி தெலுங்கர்களை வாழ வைப்பதும் திமுக தான் என்பதை தமிழ் மக்கள் எப்போது அறிந்து கொள்வார்கள் என்பதே தெரியவில்லை.  மூன்றாவது மொழியாக இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று கூறுபவர்கள் தங்கள் அமைச்சரவையில் பெரும்பான்மை அமைச்சர்கள் தெலுங்கர்கள் என்பதை மறைத்துக் கொண்டே வருவார்கள்.  இந்தி மொழி எதிர்ப்பது போலவே தெலுங்கர்களின் தெலுங்கு மொழியையும் எதிர்க்க வேண்டும் என்பது தானே நியாயம். இந்தி மொழி வந்தால் தமிழ் அழியும் என்றால் தெலுங்கு மொழி வந்தாலும் தமிழ் அழிய தானே செய்யும்.  இங்கிருக்கும் அமைச்சர்கள் ஊழல் செய்து கொள்ளை அடித்த பணத்தில் பங்கு கொடுக்கும் கடவுள் கூட தெலுங்கு தேசத்தில் தான் இருக்கிறார்.  அதுமட்டுமல்லாது மறைமுகமா...