Posts

Showing posts with the label #காங்கிரஸ்

உங்கள் கருத்து என்ன? பதிவிடுங்கள்

Image
 அன்பார்ந்த பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தற்போது நமது பொதிகை டைம் டிஜிட்டல் இதழ் சார்பாக தென்காசியின் புகழ்பெற்ற பாரத் கல்வி குழுமத்துடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு தென்காசி மாவட்டத்திற்காக நடத்தப்பட்டு வருகிறது.  இதில் தென்காசி கடையநல்லூர் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் ஆலங்குளம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.  மேலே உள்ள தொகுதிகளில் வாக்களிக்க உள்ள வாசகர்கள் அனைவரும் இத்துடன் இணைக்கப்பட்ட தேர்தல் கருத்துக்கணிப்பு கேள்விகளைப் படித்து அதற்கான பதில்களை எங்கள் டிஜிட்டல் இதழில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு பக்கத்தில் 12 கேள்விகளுக்கான பதில்களை மட்டும் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  நீங்கள் அளிக்கும் இந்த கருத்துக் கணிப்பு பங்களிப்பின் இறுதி முடிவு வரும் பிப்ரவரி 20ஆம் தேதி 2026 அன்று நமது பொதிகை டைம் டிஜிட்டல் இதழில் வெளியிடப்படும்.  வாசகர்கள் அனைவரும் தவறாது தங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மூத்த குடிமக்கள் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி ஜெயா பச்சன் உரை

Image
  பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி.ஜெயாப்பச்சன் மிக முக்கியமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பினார். அதற்காக கீழே உள்ளவாறு அவர் ஆற்றிய உரைக்காக அவருக்கு வணக்கம் செலுத்துகிறோம்; 65 வயதிற்குப் பிறகு குடிமக்கள், ஏனெனில் இந்த தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தத் தயாராக இல்லை. “இந்தியாவில் மூத்த குடிமகனாக இருப்பது குற்றமா? இந்தியாவின் மூத்த குடிமக்கள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவக் காப்பீட்டிற்குத் தகுதியற்றவர்கள், அவர்கள் EMI இல் கடன் பெற மாட்டார்கள். ஓட்டுநர் உரிமம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு எந்த வேலையும் வழங்கப்படுவதில்லை, எனவே அவர்கள் பிழைப்புக்காக மற்றவர்களை நம்பியிருக்கிறார்கள். இப்போது மூத்த குடிமக்கள் ஆன பிறகும், அவர்கள் அனைத்து வரிகளையும் செலுத்த வேண்டும். இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான திட்டம் எதுவும் இல்லை. *** ரயில்வே/விமானப் பயணத்தில் 50% தள்ளுபடியையும் நிறுத்தப்பட்டுள்ளது. *** அரசியலில் உள்ள மூத்த குடிமக்களுக்கு எம்எல்ஏ, எம்பி அல்லது அமைச்சர் என அனைத்து சலுகைகளும் வழங்கப்படுவதுடன், ஓய்வூதியமும் பெறுகிறார்கள். மற்ற அனைவருக்கும் (ச...

சீன விசா வழக்கில் கார்த்திக் சிதம்பரம் கைதாவாரா?

Image
  2011ஆம் ஆண்டு மன்மோகன் சிங் இன் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் திரு சிதம்பரம் அவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தபோது மத்திய அரசின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக 263 சீனத் தொழிலாளர்களுக்கு விசா வாங்கி கொடுத்த வழக்கு நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள Talwandi Sabo Power Limited (TSPL) என்ற மின் நிலையத் திட்டத்தில் பணியாற்ற, 263 சீன தொழிலாளர்கள் இந்தியா வர வேண்டியிருந்தது. அந்த காலகட்டத்தில் சில சீன ஊழியர்களின் விசா காலாவதியான பின்னரும், மீண்டும் (reuse) விசா அனுமதி பெறுவதில் சட்ட விதிகளை மீறி தலையீடு செய்யப்பட்டதாக விசாரணை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. விசா மறுபயன்பாட்டு அனுமதியைப் பெற உதவியதற்காக ₹50லட்சம் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. கார்த்திக் சிதம்பரம் உட்பட பலர் மீது charge sheet தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். இது அரசியல் பழிவாங்கல் என்றும், சட்டப்படி தன்னை நிரூபிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி இந்த வழக்கை அரசியல் நோக்கத்துடன் தொடரப்படும் விசாரணை என குற்...

சிறுபான்மை வாக்கு வங்கி படுத்தும்பாடு

Image
  நமது இந்திய திருநாடு மதசார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா முழுவதிலும் அரசியல் கட்சிகள் மட்டும் மதசார்பற்று இயங்குவதில்லை.  அதேபோல் சில மதங்கள் சார்ந்தவர்களும் அந்த மத அமைப்புகளும் அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளன. அந்த குறிப்பிட்ட மதங்களைப் பொறுத்தவரை ஒரு தனி மனிதன் தான் விருப்பப்பட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க அனுமதிப்பதில்லை. மாறாக அவர்களின் மதக் கூட்டமைப்பு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறதோ அவர்களுக்கு வாக்கைச் செலுத்துகின்றனர்.   இதனால் தேர்தல் நேரங்களில் அரசியல் கா நேரங்களில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் பணியில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் கேட்கும் வாக்குறுதிகளை செய்து தருவதாக உறுதி அளிப்பதோடு ஆட்சிக்கு வந்த பின்னும் அவர்களுக்கு வாலாட்டும் நாய்கள் போல சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.  சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டும் என்றால் அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையோ மற்ற மதங்களை குறை சொல்லி அவர்களை விரோத மனப்பான்மையோடு அணுகினால் மட்டுமே சிறுபான...

காங்கிரஸின் நடவடிக்கைகள் சரிதானா?

Image
இவரை அடையாளம் காண்க. இவர் டெல்லி குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக இருந்தவரும், காங்கிரசின் சிறுபான்மை பிரிவின் பொறுப்பாளரும், அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் உரிமையாளருமான ஜவாத் சித்திக். கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒரு போன்சி திட்டத்திலிருந்து ஒரு பல்கலைக்கழகம் வரை. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கியது யார் தெரியுமா? 2014 இல் பூபேந்திர ஹூடாவின் காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதா? ஹரியானாவின் காங்கிரஸ் அரசு, விதிகள், சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பைத் திருத்துவதன் மூலம், மத்தியப் பிரதேசத்தில் மோசடி செய்து தப்பி ஓடிய ஒரு மோசடிக்காரரும் மோசடி செய்பவருமான ஜவாத் அகமது சித்திக் என்பவருக்கு ஃபரிதாபாத்தில் 60 ஏக்கர் மதிப்புள்ள நிலத்தை வெறும் ₹100க்கு வழங்கியது. இது மட்டுமல்லாமல், ஹரியானாவின் காங்கிரஸ் அரசு சிறுபான்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைக் கட்ட ₹60 கோடியை ஒதுக்கியது. அதானிக்கு நிலம் கொடுத்ததில் பெருமை கொள்ளும் காங்கிரஸ் கட்சி, பயங்கரவாத தளங்களை உருவாக்க ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் மட்டுமல்ல, 60 ஏக்கர் நிலத்தையும் எவ்வாறு வழங்குகிறது என...

தமிழக வாக்காளர்களின் கனிவான கவனத்திற்கு

Image
  தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் திறமையான நேர்மையான சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய என்ன செய்ய கீழே உள்ள கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். அப்படி நீங்கள் இதை பின்பற்றும் பட்சத்தில் உங்கள் தொகுதி வளர்ச்சி அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.  முதலில் தற்போது வெற்றி பெற்று பதவியில் உள்ள  வேட்பாளர் தங்களிடம் கலந்து தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வரும்போது என்னென்ன வசதிகள் செய்து கொடுப்பேன் என்றும் அடிப்படை வசதிகளில் எதை செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் என்பதை பழைய தேர்தல் அறிக்கையை எடுத்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் வெற்றி பெற்ற  வேட்பாளர் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்ற கட்சியா? அவ்வாறு அவர் வெற்றி பெற்ற கட்சியிலோ அல்லது கூட்டணியோ இருந்திருந்தால் அந்தக் கூட்டணி கொடுத்துள்ள வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டனரா? என்று முதலில் பார...

தில்லு முல்லு திமுகவின் தில்லாலங்கடி வேலை

Image
  தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதும் SIR சிறப்பு வாக்காளர் திருத்த திட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சென்ற தேர்தலில் வாக்களித்த பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டின் பல தொகுதிகளிலும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் வாக்காளர்களின் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக அதிமுக பிஜேபி போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பும் சாதாரண வாக்காளர்களின் பெயர்களை வெகு சாமர்த்தியமாக நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.  சமீபத்திய தேர்தல்களில்  எந்த அரசியல் கட்சி வெற்றி பெற்றாலும் வெற்றி சதவீதம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் இதுபோன்று வாக்காளர்கள் நீக்கப்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பை உண்டாக்க அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே எதிர்க்கட்சியில் உள்ள பூத் கமிட்டி முகவர்கள் தங்கள் ஏரியாவில் உள்ள வாக்குச்சாவடி பூத் லிஸ்ட்டை வைத்து வீடு வீடாக சென்று ...

வாக்குத் திருட்டு. எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையா?

Image
  எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து தற்போது ஆளும் கட்சிக்கு எதிராக எடுத்திருக்கும் முக்கிய ஆயுதம் ஓட்டு திருட்டு.  கடந்த 14 வருடங்களுக்கு மேலாக மதில் ஆட்சி செய்து வரும் பிஜேபி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதுவும் குற்றம் சொல்ல வாய்ப்பில்லாத போது தற்போது அவர்கள் தேடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் வாக்குத் திருட்டு.  இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதுமே வாக்காளர் பட்டியலில் சில குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. தற்போது தொழில்நுட்பங்கள் பலவகையிலும் வளர்ந்து விட்ட பின்பும் நமது வாக்காளர் பட்டியில் சில குளறுபடிகள் இருக்கத்தான் செய்கிறது.அதை தற்போது சரி செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.   அதற்கு தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் பொழுது அந்தக் குளறுபடிகளால் ஆதாயம் அடைந்த கட்சிகள் அதை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. இவர்கள் சொல்வது போல் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்தால் அவற்றை ஆதாரத்தோடு பொதுவெளியிலும், தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் முறையிடலாம்.  வாக்காளர் பட்டியலில் ஒரே முகவரியில் பல வாக்காளர்க...