Posts

Showing posts with the label #திருநெல்வேலி

நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்

Image
  நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான பணிகளுக்கு பதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை மாநகரில் அழகு நிலையத்துக்குள் புகுந்து அத்துமீறி பெண்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் ஒரு மகளிர் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 26ம் தேதி மாலையில் வழக்கம்போல் பெண் ஊழியர்கள் சிலர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காவல் சீருடையில் வந்த 2 பேர் அழகு நிலையம் முன்பு நின்றுள்ளார்கள்.. அவர்களில் ஒருவர் திடீரென அழகு நிலையத்துக்குள் சென்று, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், "இங்கு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் தர வேண...

வேலை கொடுத்த முதலாளியே கொலை செய்த தொழிலாளி

Image
  ஊழியரை பணிநீக்கியதால் ஏற்பட்ட கோபத்தின் விளைவு என்ன? திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரம் அருகே இரும்புக் கம்பியால் தாக்கியதில் கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளிக்கு எமனாக தொழிலாளி மாறியதன் பின்னணி என்ன? திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வனராஜ். 60 வயதான இவர் அதே பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் 26 வயதான மாயாண்டி என்பவர் ஓட்டுநராக பணியாற்றினார். மேலும், இரும்பு தரம் பிரிக்கும் வேலையிலும் மாயாண்டி ஈடுபட்டுள்ளார். அண்மைக் காலமாக ஓட்டுநரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, இவர் தனக்கு ஒத்துவர மாட்டார் என கருதிய வனராஜ் திடீரென மாயாண்டியை வேலையை விட்டு நீக்கியுள்ளார். திடீரென வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறியதால் கடை உரிமையாளர் மீது இளைஞர் கடும் கோபம் கொண்டுள்ளார். அதே கோபத்துடன் ஊருக்குள் சுத்தியவர் வனராஜைப் பார்க்கும் போதெல்லாம் அடிப்பது போன்றே முறைத்துப் பார்த்துள்ளார். திடீரென வேலையை விட்டு தூக்கியதால் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து ச...

பேருந்து நிலையத்தில் இளம்பெண் படுகொ*லை

Image
  பேருந்து நிலையத்தில் இளம்பெண் படுகொ*லை  நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேச்சியம்மாள் .  குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை வெட்டி கொ*லை செய்துவிட்டு கணவர் சுதாகர் காவல் நிலையத்தில் சரண்.  "எவ்வளவு கோபம் வந்தாலும் கொஞ்சம் இறங்கிப் போங்கய்யா... அது புருஷனாக இருந்தாலும் சரி, பொண்டாட்டியாக இருந்தாலும் சரி. உயிருக்கு ஒரு மதிப்பும் இல்லாத மாதிரி ஆகிடுச்சு. கொஞ்சமாவது சகிப்புத் தன்மையோடு இருங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து காவல்துறை தப்பு நடக்காம பார்த்துகிட்டு இருக்க முடியாது. குடும்பச் சண்டைகளை பேசி முடிக்கப் பாருங்கய்யா. குடும்பச் சண்டைக்கு எல்லாம் கொலை தீர்வாகாது. கவுன்சிலிங் போங்க. எல்லாத்தையும் விட கொஞ்சம் சமாதானமாப் போங்க."🙏🙏🙏  #Nellai

நெல்லை பணகுடி அருகே விபத்து

Image
  "நெல்லை மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பேருந்தும், நெல் ஏற்றி வந்த டிராக்டரும் மோதி சற்றுமுன்பு (09/03/2026)விப*த்*து." #tirunelveli #panagudi #panakudi #valliyur #tnstcbus #tnstc #nagercoil #kanniyakumari #trendingpost #trendin #bus #JustNow #nellai

நெல்லை தாமிரபரணி ஆற்றின் பரிதாப நிலை

Image
  #தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளின் கோடிக்கணக்கான நிதியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் பாதாள சாக்கடை மூலம் #ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லவேண்டிய சாக்கடை நீர் மாநகராட்சியினரால் நேரடியாக #மணிமூர்த்திஸ்வரம் அருகே தாமிரபரணி ஆற்றில் விடுகின்றனர்.  இது தற்போது எடுக்கப்பட்ட காட்சிகள்..!! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

ஆம்னி பேருந்தில் தீ விபத்து

Image
 திருநெல்வேலியில் இருந்து நேற்று இரவு 36 பயணிகளுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஒரு ஆம்னி பஸ் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் இளைப்பாற நிறுத்தப்பட்டுள்ளது. அப்போ எதிர்பாராத விதமாக அந்த ஆம்னி பஸ் உடைய பின் டயர் வெடித்து பஸ் தீப்பிடித்து எறிய தொடங்கியது.😪😪😪 இதைப் பார்க்க அதிர்ச்சி அடைந்த பஸ் ஓட்டுநர் உள்ளே இருந்த பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினார். பயணிகள் அனைவரும் பஸ்ல இருந்து இறங்குனதும் பஸ் முழுக்க தீப்பரவி எரிய ஆரம்பிச்சிருக்கு.😪😪😪 இதை அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 20 நிமிடங்கள் போராடி அந்த தீயை அணைத்துள்ளனர். சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தின் தென் பகுதியில் அமைவதற்கும் புதிய நான்கு வழி சாலை

Image
  தென் தமிழ்நாட்டையே.. அடியோடு மாற்ற போகும் மிக முக்கிய அறிவிப்பு.. நெல்லை, தூத்துக்குடிக்கு ஜாக்பாட் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை 16, 8 மற்றும் 4 வழிச் சாலைகளாக மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கியமான புதிய சாலைத் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. NH-32 தேசிய நெடுஞ்சாலையின் கீழ், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் புதிய நான்கு வழிச்சாலைக்கான உத்தேச வழித்தட வரைபடத்தை அரசு வெளியிட்டுள்ளது. தென் தமிழகத்தின் போக்குவரத்து புரட்சி சென்னையில் இருந்து தூத்துக்குடி வரையிலான சுமார் 690 கி.மீ. தூரத்திற்கான NH-32 நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்தச் சாலை தற்போது தூத்துக்குடியில் இருந்து தெற்கே நீட்டிக்கப்படுகிறது. ஆன்மீக நகரமான திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரியைச் சென்றடையும் இந்தச் சாலை, 'தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி (TTK) சாலைத் திட்டம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய நான்கு வழிச்சாலை சுமார...

நெல்லை மாவட்டம் மானூரில் தனியார் பேருந்து சிறைபிடிப்பு...

Image
   (05:02:2026) நெல்லை மாவட்டம் மானூரில் தனியார் பேருந்து சிறைபிடிப்பு...  (05:02:2026) அன்று காலை வன்னிக்கோனேந்தல் முதல் செட்டிகுறிச்சிவரை பயணம் செய்த ஒரு ஆசிரியையை உரிய செட்டிகுறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த சொல்லி எவ்வளவு வலியுறுத்தியும் செவிசாய்க்காமல் நடத்துனர்  வேண்டுமென்றே செட்டிகுறிச்சி கிராமம் கடந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் கடந்து நடுகாட்டில் இறங்குமாறு வலியுறுத்தியுள்ளார்...  இந்த இடத்தில் என்னை இறக்கினால் நான் எவ்வாறு எப்படி பள்ளிக்கு செல்ல முடியும் என ஆசிரியை நடத்துனரை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்... இதனை ஒரு பொருட்டாக கருதாதே பேருந்து நடத்துனர்... நீ யாரிடம் கேட்டு பேருந்து ஏறினாய்... இங்க இறங்கவில்லை என்றால் அழகியபாண்டியாபுரத்தில்தான் நிற்கும் என திமிராக ஒருமையில் பதிலளித்து உள்ளார்...  இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தாமல் விடக்கூடாது என முடிவெடுத்த ஆசிரியை நான் எங்கையும் இறங்க மாட்டேன் மானூரில் இறக்கிவிடுங்கள் யார் என்று காட்டுகிறேன் என முடிவெடுத்து மானூரில் இறங்கி காவல்நிலையத்தில் எழுத்து பூர்வமாக நடந்தை புகாராக எழுதி கொடுத்து காவல்...

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து. இளைஞர் பலி.

Image
  திருநெல்வேலி மாவட்டம் பணகுடிபிரதான சாலையில் நேற்று(04/02/26) இரவுபுனித மாதா ஆலயம் அருகில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து. பணகுடி கோரி காலனி சேர்ந்த பிரவீன் பணகுடி தளவாய்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்று இரு வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டுபடுகாயம் . இரவு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ரகுராமன் அந்த வழியாக வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு மணிமற்றும் காவலர் திரு ஜெகதீசன்ஆகியோர் விரைந்து மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கோரிகாலனியை சேர்ந்த பிரவீன் (17) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றிஇறந்துவிட்டார். ராஜ்குமார் என்பவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிகழ்வு பணகுடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பணகுடி காவல் ஆய்வாளர் திரு A.T.ராஜாராம் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள...

ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

Image
  தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய சரகம் பொட்டல்புதூர் பகுதியில் கடந்த 09.01.26 அன்று பூட்டியிருந்த நான்கு வீடுகளில் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை திருடி சென்றதாக பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.S.மாதவன் T.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் ஆழ்வார்குறிச்சி காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பல்வேறு கோணங்களில் தீவிரமாக தேடிவந்தனர். 320 க்கும் மேற்பட்ட CCTV காட்சிகளை ஆராய்ந்து வள்ளியூரை சேர்ந்த சிவலிங்கம்(40), செட்டிகுளத்தைச் சேர்ந்த சிவகுமார்(42), மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்(27) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி நபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது, அவர்களிடமிருந்து திருடப்பட்ட 157 கிராம் தங்கம், 874கிராம் வெள்ளி மற்றும் பணம் ரூபாய் 15,000 பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி மூன்று நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.  மேற்படி கைதுசெய்யப்பட்ட சுரேஷ் என்பவருக்கு தருமபுரி, திர...

அம்பையில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்ற 3 நாட்கள் அவகாசம்

Image
  #அம்பையில் ஆக்ரமிப்பு கடைகள் அகற்ற 3 நாட்கள் அவகாசம் அம்பாசமுத்திரத் தில் குறிப்பிட்ட பகுதியிலுள்ள ரோட்டோர ஆக்ரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேஸ்வரி தலைமையில் நேற்று மாலையில் அங்கு வந்து கடைகளை அகற்றக் கோரி சொல்லி வந்தனர்.. இந்த சூழலில் அங்கிருந்த நபர்களுக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது...உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து   அங்கு வந்தனர்.. பின்பு இரு தரப்பிற்கும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை வாக்குவாதம் நடைபெற்றது ஆக்கிரமிப்பை அகற்ற முடியாது என்ற முடிவில் உடனடியாக நெடுஞ்சாலைத் துறையினர் களத்தில் திடீரென உடனடியாக ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் லாரியுடன் வந்தனர். அம்பாசமுத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் போலீசாரும் வந்தனர். இத்தகவலறித்து, அங்கு திரண்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க., மற்றும் வி.எச்.பி., அமைப்பினர் அதிகாரிகளுடன் முறையிட்டனர். கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இறுதியில், 3 நாட்கள் கால அவகாசம் அளித்து...

சீவலப்பேரியில் நடந்த துயர சம்பவம்

Image
 திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அடுத்த தோணித்துறை பகுதியில் நண்பர்கள் சிலர் சேர்ந்து சுடுகாட்டு பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.  அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.  இதனை அடுத்து அனைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த திரு மார்ட்டின் தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த சாத்தான்குளம் அருகில் உள்ள முதல்வர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து

Image
     மார்கழி மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் மாலை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு கடந்த 19 12 2025 அன்று திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஐயப்ப பக்தர்கள் சென்று கொண்டிருந்த வேன் பணக்குடி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

திராவிட மாடல் கட்டிடக்கலையின் தரம்

Image
 தியாகராஜா நகர் பாலம் - பாளையங்கோட்டை !!! கண் முன்னே கரையும் வரிப்பணம்? - ஒரு சமூகப் பார்வை! 🚧💔 ​கடந்த மார்ச் 2024-ல் தான் இந்த பாலம் திறக்கப்பட்டது. ஆனால், இன்று பார்த்தால் சுமார் 5 முதல் 6 இடங்களில் சாலை சிதிலமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து போயுள்ளன. இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக ஆகவில்லை, அதற்குள் இப்படியொரு நிலைமை! ​ஏற்கனவே வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் மற்றும் முக்காணி பாலங்களின் கதியை நினைவூட்டுவது போல இதுவும் உள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் கட்டிய ஸ்ரீவைகுண்டம் பாலம், எத்தனையோ வெள்ளங்களையும் கால மாற்றங்களையும் தாண்டி இன்றும் கம்பீரமாக, தரமாக நிற்கிறது. ​ஆனால், நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்கால கட்டத்தில், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பாலங்கள் ஏன் இப்படி தரமற்றுப் போகின்றன? தரமான கட்டுமானம் என்பது ஆடம்பரம் அல்ல, அது மக்களின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிப்பார்களா? ​✍️ சா.சசிகுமார் ​📸 Photo by Sasikumar Samikan  ​#SocialAwareness #BridgeSafety #Infrastructure #Tirunelveli #TamilNadu #PublicSafety #Ro...

திருநெல்வேலி அரசு அதிகாரிகள் மற்றும்அரசியல்வாதிகளின் கனிவான கவனத்திற்கு

Image
  திருநெல்வேலி நகரில் வண்ணார்பேட்டை பகுதியில் மாலை நேரங்களில் சென்னை பெங்களூர் கோயம்புத்தூர் போன்ற பல பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் மற்றும் SETC பேருந்துகள் மற்றும் கோவில்பட்டி சங்கரன்கோவில் வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு அருகில் உள்ள ஆப்பிள் ட்ரீ ஹோட்டலின் அருகில் நின்று செல்கின்றன.  இந்தப் பேருந்துகளில் ஏறுவதற்காக திருநெல்வேலி மாநகரின் பல பகுதிகளில் இருந்து மக்கள் பலரும் வந்து காத்திருக்கின்றனர்.  ஆனால் அப்பகுதியின் சாலைகள் மிகவும் மோசமான தரத்தில் உள்ளது. பேருந்துகளை ஓரமாக ஒதுக்கி நிறுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் பலவும் தாறுமாறாக சாலைகளில் நிறுத்தி நிறுத்தப்படுகின்றன.  இதனால் அப்பகுதியில் பேருந்துக்கு நிற்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாது பாலத்தின் மேலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் சாலை நடுவிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.  அந்த வண்...

தென்காசி அரசியல்வாதிகள் கனிவான கவனத்திற்கு

Image
தென்காசி பகுதி திருநெல்வேலியில் இருந்து பிரித்து மாவட்டமாகிய பிறகு பல பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  அதேபோல் திருநெல்வேலி தென்காசி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.   இந்த விரிவாக்குப் பணிகள் 90% முடிந்து விட்ட நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்படும் மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலரும் இன்னலுக்குள் ஆவதோடு தினசரி அந்த வழியாக பணி நிமித்தமாகவோ அல்லது பள்ளிக்குச் செல்ல வேண்டி இருப்பவர்களோ மேலும் பல சொந்தப் பணிகள் காரணமாக சென்று வருபவர்கள் என அனைவரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.  குறிப்பாக திருநெல்வேலி இருந்து தென்காசிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர்.  தென்காசி பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இது பற்றி எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்க இதுவரை முன் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆளும்கட்சியினர் தவிர எதிர்க்க...

திமுக அரசில் ஏன் இவ்வளவு குளறுபடிகள்?

Image
 நம் தமிழ்நாடு சுதந்திரம் வாங்கியதும் விடுதலை பல நல்ல தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு பொருளாதாரத்திலும் கல்வி அறிவிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது.  குறிப்பாக காமராஜர் காலத்தில் நீர் மேலாண்மை செய்ய பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. பிள்ளைகள் கல்வி கற்க மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாது பல புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டது. கல்லூரிகள் திறக்கப்பட்டது. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற அரசின் சலுகையுடன்  பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டது.   அதன் பின்பு வந்த பல ஆட்சியாளர்களும் தமிழகத்தை தொடர்ந்து வளர்ந்து வரும் மாநிலமாகவே சிறந்த நிர்வாகத்தை செய்து கொண்டிருந்தனர்.  ஆனால் தற்போது சில நாட்களாக திமுக தலைமையின் கீழ் நடைபெற்று வரும் பல நிர்வாக குறைபாடுகள் நடைபெற்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  முதலாவதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் அவர்கள் மக்களை தூண்டிவிட்டு கையாண்ட விதத்தால் அந்த நிறுவனம் மூடப்பட்டதோடு அங்கு பல அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றன. ஆனால் தற்பொழுது அப்பகு...