தியாகராஜா நகர் பாலம் - பாளையங்கோட்டை !!! கண் முன்னே கரையும் வரிப்பணம்? - ஒரு சமூகப் பார்வை! 🚧💔 கடந்த மார்ச் 2024-ல் தான் இந்த பாலம் திறக்கப்பட்டது. ஆனால், இன்று பார்த்தால் சுமார் 5 முதல் 6 இடங்களில் சாலை சிதிலமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து போயுள்ளன. இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக ஆகவில்லை, அதற்குள் இப்படியொரு நிலைமை! ஏற்கனவே வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் மற்றும் முக்காணி பாலங்களின் கதியை நினைவூட்டுவது போல இதுவும் உள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் கட்டிய ஸ்ரீவைகுண்டம் பாலம், எத்தனையோ வெள்ளங்களையும் கால மாற்றங்களையும் தாண்டி இன்றும் கம்பீரமாக, தரமாக நிற்கிறது. ஆனால், நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்கால கட்டத்தில், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பாலங்கள் ஏன் இப்படி தரமற்றுப் போகின்றன? தரமான கட்டுமானம் என்பது ஆடம்பரம் அல்ல, அது மக்களின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிப்பார்களா? ✍️ சா.சசிகுமார் 📸 Photo by Sasikumar Samikan #SocialAwareness #BridgeSafety #Infrastructure #Tirunelveli #TamilNadu #PublicSafety #Ro...