நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்
நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான பணிகளுக்கு பதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை மாநகரில் அழகு நிலையத்துக்குள் புகுந்து அத்துமீறி பெண்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் ஒரு மகளிர் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 26ம் தேதி மாலையில் வழக்கம்போல் பெண் ஊழியர்கள் சிலர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காவல் சீருடையில் வந்த 2 பேர் அழகு நிலையம் முன்பு நின்றுள்ளார்கள்.. அவர்களில் ஒருவர் திடீரென அழகு நிலையத்துக்குள் சென்று, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், "இங்கு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் தர வேண...