Posts

Showing posts with the label #திருநெல்வேலி

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து

Image
     மார்கழி மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் பெருமளவில் மாலை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு கடந்த 19 12 2025 அன்று திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி ஐயப்ப பக்தர்கள் சென்று கொண்டிருந்த வேன் பணக்குடி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

திராவிட மாடல் கட்டிடக்கலையின் தரம்

Image
 தியாகராஜா நகர் பாலம் - பாளையங்கோட்டை !!! கண் முன்னே கரையும் வரிப்பணம்? - ஒரு சமூகப் பார்வை! 🚧💔 ​கடந்த மார்ச் 2024-ல் தான் இந்த பாலம் திறக்கப்பட்டது. ஆனால், இன்று பார்த்தால் சுமார் 5 முதல் 6 இடங்களில் சாலை சிதிலமடைந்து, ஜல்லிகள் பெயர்ந்து போயுள்ளன. இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக ஆகவில்லை, அதற்குள் இப்படியொரு நிலைமை! ​ஏற்கனவே வெள்ளத்தில் சேதமடைந்த ஏரல் மற்றும் முக்காணி பாலங்களின் கதியை நினைவூட்டுவது போல இதுவும் உள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர்கள் கட்டிய ஸ்ரீவைகுண்டம் பாலம், எத்தனையோ வெள்ளங்களையும் கால மாற்றங்களையும் தாண்டி இன்றும் கம்பீரமாக, தரமாக நிற்கிறது. ​ஆனால், நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்த இக்கால கட்டத்தில், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பாலங்கள் ஏன் இப்படி தரமற்றுப் போகின்றன? தரமான கட்டுமானம் என்பது ஆடம்பரம் அல்ல, அது மக்களின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த விஷயம். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனிப்பார்களா? ​✍️ சா.சசிகுமார் ​📸 Photo by Sasikumar Samikan  ​#SocialAwareness #BridgeSafety #Infrastructure #Tirunelveli #TamilNadu #PublicSafety #Ro...

திருநெல்வேலி அரசு அதிகாரிகள் மற்றும்அரசியல்வாதிகளின் கனிவான கவனத்திற்கு

Image
  திருநெல்வேலி நகரில் வண்ணார்பேட்டை பகுதியில் மாலை நேரங்களில் சென்னை பெங்களூர் கோயம்புத்தூர் போன்ற பல பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் மற்றும் SETC பேருந்துகள் மற்றும் கோவில்பட்டி சங்கரன்கோவில் வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு அருகில் உள்ள ஆப்பிள் ட்ரீ ஹோட்டலின் அருகில் நின்று செல்கின்றன.  இந்தப் பேருந்துகளில் ஏறுவதற்காக திருநெல்வேலி மாநகரின் பல பகுதிகளில் இருந்து மக்கள் பலரும் வந்து காத்திருக்கின்றனர்.  ஆனால் அப்பகுதியின் சாலைகள் மிகவும் மோசமான தரத்தில் உள்ளது. பேருந்துகளை ஓரமாக ஒதுக்கி நிறுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் பலவும் தாறுமாறாக சாலைகளில் நிறுத்தி நிறுத்தப்படுகின்றன.  இதனால் அப்பகுதியில் பேருந்துக்கு நிற்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாது பாலத்தின் மேலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் சாலை நடுவிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.  அந்த வண்...

தென்காசி அரசியல்வாதிகள் கனிவான கவனத்திற்கு

Image
தென்காசி பகுதி திருநெல்வேலியில் இருந்து பிரித்து மாவட்டமாகிய பிறகு பல பகுதிகளிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.  அதேபோல் திருநெல்வேலி தென்காசி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.   இந்த விரிவாக்குப் பணிகள் 90% முடிந்து விட்ட நிலையில் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் அமைக்கப்படும் மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.  இதனால் அப்பகுதியில் வசிக்கும் பலரும் இன்னலுக்குள் ஆவதோடு தினசரி அந்த வழியாக பணி நிமித்தமாகவோ அல்லது பள்ளிக்குச் செல்ல வேண்டி இருப்பவர்களோ மேலும் பல சொந்தப் பணிகள் காரணமாக சென்று வருபவர்கள் என அனைவரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.  குறிப்பாக திருநெல்வேலி இருந்து தென்காசிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்கள் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர்.  தென்காசி பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இது பற்றி எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்க இதுவரை முன் வரவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆளும்கட்சியினர் தவிர எதிர்க்க...

திமுக அரசில் ஏன் இவ்வளவு குளறுபடிகள்?

Image
 நம் தமிழ்நாடு சுதந்திரம் வாங்கியதும் விடுதலை பல நல்ல தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு பொருளாதாரத்திலும் கல்வி அறிவிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது.  குறிப்பாக காமராஜர் காலத்தில் நீர் மேலாண்மை செய்ய பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. பிள்ளைகள் கல்வி கற்க மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாது பல புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டது. கல்லூரிகள் திறக்கப்பட்டது. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற அரசின் சலுகையுடன்  பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டது.   அதன் பின்பு வந்த பல ஆட்சியாளர்களும் தமிழகத்தை தொடர்ந்து வளர்ந்து வரும் மாநிலமாகவே சிறந்த நிர்வாகத்தை செய்து கொண்டிருந்தனர்.  ஆனால் தற்போது சில நாட்களாக திமுக தலைமையின் கீழ் நடைபெற்று வரும் பல நிர்வாக குறைபாடுகள் நடைபெற்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  முதலாவதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் அவர்கள் மக்களை தூண்டிவிட்டு கையாண்ட விதத்தால் அந்த நிறுவனம் மூடப்பட்டதோடு அங்கு பல அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றன. ஆனால் தற்பொழுது அப்பகு...

நாம் தமிழர் கட்சியில் நடப்பது என்ன?

Image
 தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே தமிழ் தேசியம், சுயசார்பு பொருளாதாரம் போன்றவற்றில் உறுதியாக நின்று போராடி வரும் அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி முக்கியமான ஒன்றாகும்.  இதில் சீமான் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து முன்னின்று நடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை ஏராளமான இளைஞர்கள் தன்னார்வத்துடன் களப்பணி  செய்து வருகின்றனர்.  இக்கட்சியின் மூலம் ஏராளமான புதிய இளைஞர்கள் அரசியல் தலைவராக உருவெடுத்து உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.  நாம் தமிழர் கட்சியில் இருந்து களப்பணியாற்றி இரண்டாம் கட்ட தலைவர்களாக முன்னேறிய ராஜீவ் காந்தி கல்யாண சுந்தரம் காளியம்மாள் போன்ற பலரும் தமிழக மக்கள் பலராலும் அறியப்படுபவர்கள்.  ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் இக்கட்சியை விட்டு வெளியேறி வெவ்வேறு புதிய கட்சிகளின் இணைந்துள்ளனர் சிலர் இணைய தயாராக உள்ளனர். நாம் தமிழர் கட்சி நன்றாக வளர்ந்து வரும் நிலையிலும் இது போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களும் பலராலும் அறியப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் நிலையிலும் ஏன் இவர்கள் அக்கட்சியினை விட்டு வெளியேறினார்கள் என்பது அனைவரும் கேள்வியாக உள்...

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்

Image
 தமிழகத்தில் அதிக அளவில் பத்திரிகைகளும் டிஜிட்டல் ஊடகங்களும் செயல் பட்டு வருகின்றன. அவற்றில் தினசரி செய்திகள் மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.  கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பத்திரிகை ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்தாலே நமக்கு நன்றாக தெரியும். செய்தி ஊடகங்கள் எப்படி செயல்படுகிறது என்பது.  பொதுவாகவே எல்லா தருணங்களிலுமே பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் மற்றவற்றுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிடும். ஏனெனில் இங்குள்ள பல பத்திரிகைகள் அரசியல் கட்சிகளாலும் அல்லது அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாலும் நடத்தப்படுகிறது.  இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் சம்பவம் குறித்து திரு நக்கீரன் கோபால் அவர்கள் ஒரு காணொளி வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த பின் மக்களும் உளவுத்துறை நண்பர்களும் தெரிவித்த கருத்துக்கள் என்னவென்றால் இவரைப் போன்ற ஒரு மட்டமான ஒரு தலைப்பச்சமான பத்திரிக்கையாளரை அரசியல் சொம்பு தூக்கி பார்த்ததில்லை. டிஜிட்டல் ஊடகத்துறையில் எப்படி செந்தில்வேல் மற்றும் குணசேகரன் போன்றவர்கள் அதுபோன்று அச்சு ஊடகத்துறையில் திரு...

தேசிய கூட்டணி தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால் பலன் கிடைக்குமா?

Image
 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தற்போது தமிழகம் இருக்கும் போது மொத்த அரசியல் கட்சிகளின் கவனமும் தமிழக வெற்றி கழகம் என்ன செய்யப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு விஜய் ஆதரித்து எப்படியாவது அவரை நமது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது. இது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று பார்த்தால் விஜய் எப்போதும் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்ததால் இந்தக் கூட்டணி மீது மக்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கும் என்பதை பற்றி ஒரு கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தற்போது ஒரு பெரிய அதிருப்தி நிலவுகிறது. கரூர் சம்பவத்தை முன்வைத்து அரசியலில் அவரை ஓரங்கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான பரப்புரைகள் முறுக்கி விடப்பட்டுள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபடுவது யார் என்பது மக்களுக்கே நன்றாக தெரியும். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைந்தாலும் எந்தளவுக்கு தமிழக வெற்...

விஜயின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

Image
 தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் தனது கட்சியின் பிரச்சார பயணத்தின் போது கரூரில் நடைபெற்ற துயரப் சம்பவத்திற்கு பின்னர் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் கரூர் சம்பளத்திற்கு தார்மீக ரீதியில் விஜய் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் அவர் பிரச்சாரக் கூட்டத்திற்கு பல மணி நேரம் தாமதமாக வந்ததும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததுமே இது போன்றதொரு பேரைச் சம்பவத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அது தவிர மற்ற பல காரணங்கள் இருந்தாலும் இது தமிழக வெற்றி கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்பதால் அவர்களுக்கே பொறுப்பு கூடுதல் என்பது அனைவரும் அறிந்தது. இந்த கரூர் சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் தலைமறைவாக உள்ளனர். அது மட்டுமல்லாது பலர் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இதன்பின் விஜயின் எதிர்காலம் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.  இனி விஜய் அவர்கள் அரசியலில் வேறு ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணியுடன் போட்டியிட்டால் மட்டுமே ஓரளவு வாக்குகளை பெற முடியும். எனவே அவர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவ...

தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?

Image
 தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?  இன்றைய கால சூழ்நிலையில் எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சி அடைந்து வருகின்றன.  அந்த வகையில் தற்போது கணினி தொழில்நுட்பத்தில் ஏ ஐ (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் ஒரு புதிய தொழில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் கணினி துறையில் பல வேலைகள் நுட்பத்தின் மூலம் எளிதாக செய்ய முடிகிறது. பல வேலை ஆட்கள் மூலம் பல மணி நேரம் செய்ய வேண்டிய வேலைகளை இந்த ஏஐ தொழில்நுட்பம் எளிதாக செய்து விடுகிறது.  இதுபோல் மற்ற துறைகளிலும் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. எடுத்துக்காட்டாக தானியங்கி மோட்டார் வாகனங்கள் டிரைவர்(ஓட்டுநர்) இல்லாமலே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுமான துறைகளிலும் பூச்சு வேலை, டைல்ஸ் பதிக்கும் வேலை மற்றும் பொருட்களை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் வேலை போன்ற பல வேலைகளுக்கு புதிதாக பல மிஷின்கள் வந்துவிட்டன.  இதனால் கணினி துறையில் வேலை பார்க்கும் பலருக்கும் வேலை இழக்கும் வாய்ப்ப...

இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் விலை ₹4900/கிராம் வெள்ளி விலை ₹67.70/கிராம்

நெல்லை ராமையன்பட்டி பொதுப்பணித்துறை காவல்துறை வருவாய்த்துறை கூட்டு சேர்ந்து அகற்றிய விநாயகர் சிலை இந்துமுன்னணி போராட்டம் காரணமாக மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை

Image
 வெற்றி வெற்றி வெற்றி *நெல்லை ராமையன்பட்டி பொதுப்பணித்துறை காவல்துறை வருவாய்த்துறை கூட்டு சேர்ந்து அகற்றிய விநாயகர் சிலை இந்துமுன்னணி போராட்டம் காரணமாக மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை* நெல்லை மாநகரம் ராமையன்பட்டி இலந்தைகுளம் குளக்கரையில் இருந்த விநாயகர் கோவில் குளத்து ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி பொதுப்பணித்துறை  உதவி செயற்பொறியாளர் புகாரில் வருவாய்த்துறை காவல்துறையோடு இணைந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று காலை விநாயகர் கோவிலை இடிக்க  துவங்கினர்  தகவல் அறிந்து *இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் தலைமையில்*  மாவட்ட தலைவர் *சிவா* மாவட்ட பொதுச் செயலாளர் *பிரம்மநாயகம்* மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் *விமல் , சுரேஷ்*  ஆகியோர் உடனடியாக பிரச்சனைக்குரிய இடத்திற்கு வரைந்தனர்  கோவிலை  அகற்றியது இதே போல் கோவில் குளக்கரையில் உள்ள சர்ச் ஆக்கிரமிப்புகளையும் அளந்து அகற்ற உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என அதிகாரிகளிடம் இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் குற்றாலநாதன் சவால் விடுத்து பேசினார் நாங்கள் நியாயமாக செயல்படுவோம் எந்த ஆக்கிரமிப்பு இருந்தாலும் அ...