Posts

Showing posts with the label #annamalai

திராவிட மாடல் vs தேசிய மாடல்

Image
 நமது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் திமுக தலைமையிலான அரசு தங்களை திராவிடம் மாடல் அரசு என சொல்லிக் கொள்கிறது. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தேசிய மாடல் என அழைக்கப்படுகிறது.  இந்த இரு அரசுகளும் தங்கள் ஆட்சி காலத்தில் செய்த நன்மைகள் திட்டங்கள் பற்றி பார்ப்போம்.  திராவிட மாடல்   ஆட்சிக்கு வந்தவுடன் முதல் அறிவிப்பாக மகளிர்க்கு இலவச பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டது. இதில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய வசதியாக இருந்தாலும் போக்குவரத்து துறை கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதால் தேவையான அளவிற்கு பேருந்துகளை இயக்க முடிவதில்லை என்ற பிரச்சனையும் வரும் பேருந்துகள் சரியான நிறுத்தங்களில் நிறுத்துவதில்லை என்ற பிரச்சனையும் பேருந்துகளில் தரம் மிகக் குறைவாக உள்ளதாகவும் பயணிகள் பயணம் செய்யவே பயப்படும் நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என்ற திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் பல மாதங்கள் கடந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் அதை வைத்து அரசியல் அழுத்தம் கொடுத்ததால் அனைவருக்கும் ஆயிரம் உதவித்தொகை என்பது மாறி தகுதி உள்ளவ...

தமிழ்நாட்டில் தவறான வியூகங்களால் தடுமாறுகிறதா பாஜக?

Image
தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்து ஆலோசித்து செயல்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அறிவித்து செயல்பட்டு வரும் நிலையில் கரூரில் நடந்த தமிழக வெற்றி கழக சம்பவத்திற்கு பின் நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியினர் பேசி எப்படியாவது அவரை கூட்டணியில் கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால் அது இதுவரை கை கூடவில்லை. அது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ஒரு பிரிவினருக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்தும் நிலவி வந்தது.  மேலும் திரு அண்ணாமலை அவர்களை தலைமைப் பதவியிலிருந்து மாற்றிய பின்பு அவருக்கு சரியான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவருடைய ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.   தற்போது பாரதி ஜனதா கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டு வரும் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்வதோடு கட்சியினரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார் என்ற போதில...

தமிழக வாக்காளர்களின் கனிவான கவனத்திற்கு

Image
  தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் திறமையான நேர்மையான சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய என்ன செய்ய கீழே உள்ள கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். அப்படி நீங்கள் இதை பின்பற்றும் பட்சத்தில் உங்கள் தொகுதி வளர்ச்சி அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.  முதலில் தற்போது வெற்றி பெற்று பதவியில் உள்ள  வேட்பாளர் தங்களிடம் கலந்து தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வரும்போது என்னென்ன வசதிகள் செய்து கொடுப்பேன் என்றும் அடிப்படை வசதிகளில் எதை செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் என்பதை பழைய தேர்தல் அறிக்கையை எடுத்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் வெற்றி பெற்ற  வேட்பாளர் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்ற கட்சியா? அவ்வாறு அவர் வெற்றி பெற்ற கட்சியிலோ அல்லது கூட்டணியோ இருந்திருந்தால் அந்தக் கூட்டணி கொடுத்துள்ள வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டனரா? என்று முதலில் பார...

தில்லு முல்லு திமுகவின் தில்லாலங்கடி வேலை

Image
  தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதும் SIR சிறப்பு வாக்காளர் திருத்த திட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சென்ற தேர்தலில் வாக்களித்த பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டின் பல தொகுதிகளிலும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் வாக்காளர்களின் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக அதிமுக பிஜேபி போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பும் சாதாரண வாக்காளர்களின் பெயர்களை வெகு சாமர்த்தியமாக நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.  சமீபத்திய தேர்தல்களில்  எந்த அரசியல் கட்சி வெற்றி பெற்றாலும் வெற்றி சதவீதம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் இதுபோன்று வாக்காளர்கள் நீக்கப்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பை உண்டாக்க அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே எதிர்க்கட்சியில் உள்ள பூத் கமிட்டி முகவர்கள் தங்கள் ஏரியாவில் உள்ள வாக்குச்சாவடி பூத் லிஸ்ட்டை வைத்து வீடு வீடாக சென்று ...

திமுக கையில் எடுக்கும் ஆயுதங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வுகிறதா?

Image
 தமிழகத்தில் திமுகவிற்கு எப்போதெல்லாம் பின்னடைவு பிரச்சனைகள் எதிர்ப்புகள் போன்றவை வருகிறதோ அப்போதெல்லாம் திமுக அதனை மடை மாற்ற பல யுக்திகளை கையாளும்.  அவற்றில் முக்கியமானது இந்தி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு, நீட் விலக்கு மற்றும் மத்திய அரசின் சட்டங்களுக்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு போன்ற ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு மக்களுக்கு தங்கள் மீது உள்ள கோபத்தையும் அதிருப்தியையும் சரி செய்ய இவற்றை ஆயுதமாக பயன்படுத்தும்.  அப்படி அவர்கள் சமீப காலங்களில் முயற்சி செய்த இந்தி எதிர்ப்பு, பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றில் இவர்கள் செய்த அரசியல் எடுபடவில்லை.  தற்போது சென்னை சாலைகளில் நிலை, மழை வெள்ளம், விவசாய நெல் கொள்முதல், மற்றும் பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற இவர்களின் தவறுகளை மறைக்க இவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம் SIR எனப்படும் வாக்காளர் சரி பார்க்கும் பணியை வைத்து ஒரு போராட்டத்தை உருவாக்க நினைக்கிறது திமுக அரசு.  தமிழ்நாட்டில் பல தொகுதிகளில் போலி வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக 2016ல் திமுக அரசே புகார் தெரிவித்து இருக்...

தமிழகத்தில் இன்றைய இளைய தலைமுறை அரசியல் தலைவர்களில் யார் தகுதியானவர்?

Image
 தமிழக அரசியல் களம் தற்போது இளைஞர்களை சுற்றி நடந்து வருகிறது.  தமிழகத்திலும் முதல் முறை வாக்களிக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ள நிலையில் அவர்களின் மனம் கவர்ந்த தலைவர் யார் என்ற கோணத்தில் நாம் இளைஞர்களுடன் கலந்தாலோசித்த பொழுது அவர்களின் எதிர்பார்ப்பு இளம் தலைவர்கள் பற்றி தான் இருந்தது.  ஒருவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் ஆகவும் அடுத்தவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் திரு அண்ணாமலை அவர்களாகவும் திமுகவின் இளம் தலைமுறை தலைவராக இளைஞர்களின் தேர்வாக உள்ளது.  இன்றைய தமிழக அரசியல் முழுவதும் இவர்கள் மூவரை சுற்றிய நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  நாம் பொதிகை டைம்ஸ் இதழ் நிருபர்கள் இளைஞர்களுடன் கலந்து ஆலோசித்த பொழுது அவர்கள் கூறிய சில கருத்துக்கள் அடிப்படையில் யாருக்கு எப்படி வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றி விவரத்தை பார்க்கலாம்.  நடிகர் விஜய் அவர்களைப் பொறுத்தவரை தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியின் மூலம் தமிழக முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்வசம் வைத்துள்ளார். ஆனால் அவரது தமிழக வெற்றி கழகத்தில் ஒரு சரியான கட்டமைப்போ, திட்...

தேசிய ஜனநாயக கூட்டணியில் திரு அண்ணாமலை அவர்களின் நிலை என்ன?

Image
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய கூட்டணிகளை வலு சேர்க்கும் விதத்திலும் மக்களிடம் பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபட தொடங்கி விட்டனர்.  இந்நிலையில் பெரும்பாலான கட்சிகளில் ஒரு கட்சி அரசியலும் சூடு பிடித்துள்ளது.  தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளாக உள்ள அதிமுக பாஜக இரு கட்சிகளிலும்  உட்கட்சி பிரச்சனைகளும் அதிகார போட்டியும் மேலோங்கி உள்ளது.  அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு வைத்த முதல் நிபந்தனையாக கூறப்படுவது திரு அண்ணாமலை அவர்களை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது.  ஏனெனில் அண்ணாமலை தமிழக பாஜகவை பெருமளவில் வளர்ச்சி இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் தற்போது அரசியலில் பாஜகவின் முகமாக அனைவராலும் அறியப்படுபவர் திரு அண்ணாமலை அவர்கள். இதுபோன்று மாற்றுக் கட்சியில் ஒரு தலைவர் உருவானால் அது பின்னாலே நமக்கு பிரச்சனையாக முடியும் என்று யோசித்ததாலே இது போன்ற ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அதிமுக போன்ற வேறு கட்சியில் இருப்பவர்கள் அண்ணாமலை பார்த்து பயப்படுவது நியாயம். ஆனால் பாஜகவில் இரு...

அண்ணாமலையை வீழ்த்த ரகசிய திட்டமா?

Image
 தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் முக்கிய செய்தி பிஜேபி மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் நற்பெயரை கெடுப்பதற்கும் அவருடைய அரசியல் செயல்பாடுகளை தடுப்பதற்கும் மிகப்பெரிய சதி நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பொதுவாகவே திமுக போன்ற திராவிட கட்சிகளின் எதிரிகளை அழிக்க அவர்கள் எடுக்கும் முக்கிய ஆயுதம் தனிமனித தாக்குதல் மற்றும் அவர்களின் நற்பெயர் களங்கம் ஏற்படுத்துதல் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை தனி நபர் மீது தொடுத்து அதனை மக்களிடம் உண்மை போல் நம்ப வைத்து அவர்களின் அரசியல் ஆளுமையை சிதைக்க முயற்சி செய்வார்கள். அதில் பலமுறை அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். குறிப்பாக நீதி கட்சியும் திராவிட கூட்டங்களும் காமராஜர் கக்கன் ராஜாஜி போன்ற பெரிய தலைவர்களின் தொடங்கி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வரை அவர்கள் கையாண்டபாணி மக்களுக்கு நன்கு தெரியும். தற்போது திரு அண்ணாமலை அவர்களின் தனி மனித ஒழுக்கத்தை கேள்விக்குள் ஆக்கும் விதமாக அவர்களின் பிஜேபி கட்சிக்குள்ளே சில ஸ்லீப்பர் செல்களை உருவாக்கி அவர்களின் மூலம் திரு அண்ணாமலை அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைக்க சதி நடப்பதாக சில ஊடக...