Posts

Showing posts with the label #கல்வி

இட ஒதுக்கீடு சமூகத்தை சம நிலைக்கு கொண்டு வந்து விட்டதா?

Image
நமது இந்திய திருநாட்டில் அரசியலமைப்புச் சட்டம் ஆரம்ப காலத்தில் இருந்தே இட ஒதுக்கீடு சட்டம் அமலில் உள்ளது. இது நமது இந்திய நாட்டின் சமூக அமைப்புகளை சமநிலைக்கு கொண்டு வரும் நோக்கோடு உருவாக்கப்பட்டது.  தற்போது சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகாலம் ஆன பின்னரும் ஆரம்ப காலத்தில் இருந்த அதே இட ஒதுக்கீடு முறை இன்றும் தொடர்ந்து பிரிந்து வருகிறது.  எப்போதுமே ஒரு சட்டம் காலம் மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே அது மக்களுக்கு பயனளிக்கும் என்பது நிதர்சனம்.  சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு முறையில் தற்போது பலன் பெற்று வரும் மக்களை யார் என்று கணக்கெடுத்தால் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளாக முதன்முறை பலன் பெற்றவர்களே அவர்களது வாரிசுகளுக்கு அப்பலன்களை கொண்டு சேர்ப்பது தெரியவரும்.  ஒரு விளிம்பு நிலை சமூகம் சமநிலை பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின் மூலமாக ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் பலன் பெற்று வருகிறார்கள் என்பது நமது குற்றச்சாட்டு.  அதே விளிம்பு நிலை பகுதியில் உள்ள மக்கள் இன்னமும் தங்...

தமிழகத்தில் மாணவர்களின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது

Image
தமிழ்நாடு எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது.  தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம்,மத்திய சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் இன்டர்நேஷனல் பள்ளிகளின் பாடத்திட்டம் என பல பிரிவுகளில் பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இதில் மாநில பாடத்திட்ட மொழிகளில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் சிபிஎஸ்சி மற்ற பாடத்திட்டங்கள் படிக்கும் பள்ளிகளில் தமிழ் ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுக்க படிக்கவும் முடியும்.  தற்போது நம் பொதிகை டைம்ஸ் இதழ் சார்பாக சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்து உரையாடிய பொழுது அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தது.   தமிழ்நாட்டில் படிக்கும் இன்றைய தலைமுறை மாணவர்கள் பலருக்கும் தமிழை சரியாக எழுத படிக்க கூட தெரியவில்லை என்பது நமக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டில் இங்கு சில அரசியல் கட்சிகள் தமிழை வளர்ப்போம், தமிழ் தான் உயிர் மூச்சு என்று வசனம் எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழ் பயின்று கொண்டு இருக்கும் மாணவர்களுக்...

கைப்பிடி இல்லாத கத்தி போன்று ஆபத்தானதா? (AI) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

Image
 உலகில் அனைத்து பகுதிகளிலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பம் எதுவென்றால் அது என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக எப்படி கம்ப்யூட்டர் மற்றும் IT என அழைக்கப்படும் தொழில்நுட்பத்துறை உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோ அதுபோல வருகின்ற சில ஆண்டுகளை AI தொழில்நுட்பம் என்பது தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். AI தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வேலைகளும் எளிதாக செய்ய முடியும் என்பதும் சில வேலைகளை தானே எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றதாகவும் இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்பது பலன் கருத்தாக உள்ளது. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை இதில் அறியலாம். AI தொழில்நுட்பத்தின் மூலம் பல நிறுவனங்களுக்கு வேலைகளை எளிதாகவும் குறைந்த கால அளவிலும் குறைந்த செலவிலும் முடிக்க முடியும். இதனால் பல பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் உள்ள சிறு குறு தொழில்கள் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக ஒரே மாதிரி செய்யக்கூடிய ...

இந்திய யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் வெளியிட்டுள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்.

Image
 இந்தியாவில் தற்போது பல போலிப் பல்கலைக்கழகங்கள் யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது. இவை போலி டாக்டர் பட்டங்கள் வழங்குதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத பட்டப்படிப்புகளை நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது அவ்வாறு செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை இந்திய யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே உள்ள படத்தில் பார்த்து அறிந்து கொள்ளவும். #Pothigaitimes #Fake #Universities #UGC #India

உயர்கல்வித்துறையில் மணிகண்டன் நியமனம் - ஏன் கொதிக்கிறார் சவுக்கு சங்கர்?

Image
சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் உயர்கல்வித்துறைக்கு திரு மணிகண்டன் அவர்கள் நியமிக்கப்பட்டது குறித்து அரசாணை வெளியானது. இதனை அடுத்து பலரும் அவர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் மற்றும் சனாதனத்துக்கு துணை போகக் கூடியவர் அதனால் அவரை எப்படி உயர்கல்வித்துறைக்கு நியமனம் செய்யலாம்? அவர் கல்வித் துறையில் சனாதன சக்திகளின் கருத்துக்களை நுழைப்பார் என்று பலரும் பல விதமாக பேசத் தொடங்கினர். இதில் சவுக்கு சங்கர் பல youtube சேனல்களிலும் இது குறித்து பயங்கரமாக பேசி கொதித்துப் போனார். இந்த கருத்துக்கள் அனைத்தும் அப்படியே ஏற்றுக் கொண்டாலும் கூட இதே பள்ளி கல்வித்துறையால் திரு லியோனி அவர்கள் பாடநூல் கழகத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்ட போது அவரும் திராவிட பின்பலம் கொண்டவர் தானே திராவிடக் கொள்கைகளை புகுத்த நினைப்பார்கள் அப்போது ஆர் எஸ் எஸ் சனாதன தர்மம் என்று இன்று பேசுபவர்கள் அன்று ஏன் வாய் திறக்கவில்லை  அவர்கள் வாயில் என்ன இருந்தது?  சவுக்கு சங்கர் போன்றவர்கள் தீவிர திராவிட ஆதரவாளர்கள் என்பது அனைவருக்கும் அறிந்த விஷயம். அதனால்தான் திராவிட சித்தாந்தம் உள்ளவர்கள் புகுத்தப்படும் போது பேசாமல் இருந்...