Posts

Showing posts with the label #விளையாட்டு

#lizelleLee பெண்கள் கிரிக்கெட் உலகின் ஆச்சரியம்

Image
 #lizelleLee இவங்களை டெல்லி கேப்பிட்டல்ஸ் களத்தில் பார்த்தபோது ஏன் எடுத்தாங்கன்னு தோணுச்சு. ரன்னிங் பண்ணமுடியுமா?   விரைவாக இயங்கமுடியுமான்னெல்லாம் யோசித்தேன். ஆனால் அதையெல்லாம் சிக்ஸர்களாகவும் விக்கெட்டுகளாகவும் சிதறடித்தார். ஃபீல்டில் ஓடமுடியாததால் விக்கெட்டிற்கு பின்னாடி நிறுத்தி வைத்திருக்கிறார்கள் போல என நினைத்தால் தோணி மாதிரி இந்த பக்கமும் அந்த பக்கமும் பறந்து பறந்து பந்துகளைப் பிடித்தார்.  சரி விக்கெட் கீப்பிங் மட்டும்தான் என்று பார்த்தால் குஜராத் ஜெயண்ட்ஸையே அடித்து நொறுக்கினார். ஐம்பது அடித்தபோது பேட்டை தூக்காமல்  தனது கையின் கட்டை விரலை மட்டும் தூக்கிக் காட்டினார். தைரியமான மனுஷி.  தனது மைனஸ்களை வெற்றியாக்கிக் கொண்ட மனுஷி. டெல்லி கேப்பிட்டல்ஸ் தோற்றாலும் போராடிய இவருக்கு எந்த விருது கொடுத்து பாராட்டினாலும் போதாது. பேட்டிங்கின் போது கண்ணாடி வேறு. நீங்கதான் #wpl2026  சூப்பர் ஸ்டார்.  உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

ஐசிசி அதிரடி. வங்கதேசம் அதிர்ச்சி

Image
 "விளையாடினா இந்தியாவுலதான் விளையாடணும்.. இல்லன்னா நடையைக் கட்டுங்க – வங்காளதேசத்திற்கு ஐசிசி கொடுத்த 'மரண அடி 👉சமீபகாலமாக இந்தியா - வங்காளதேச கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே ஒரு பனிப்போரே நடந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக, "பாதுகாப்பு சரியில்லை, அதனால நாங்க இந்தியாவுக்கு வரமாட்டோம், எங்களோட உலகக்கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாத்துங்க" என பிசிபி (BCB) அடம்பிடித்தது. 👉 ஜெய் ஷா தலைமையிலான ஐசிசி, வங்காளதேசத்தின் கோரிக்கையை அப்படியே குப்பையில் வீசியுள்ளது ☀ஐசிசி-யின் அதிரடி உத்தரவு: 👉  இடமாற்றம் கிடையாது: போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில்தான் நடக்கும்.  👉கொல்கத்தா & மும்பை: வங்காளதேசம் விளையாட வேண்டிய ஈடன் கார்டன்ஸ் மற்றும் வான்கடே மைதானங்களில் எந்த மாற்றமும் இல்லை.  👉புள்ளிகள் காலி: ஒருவேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வராமல் போனால், அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகள் எதிரணிக்கு வழங்கப்படும் . ☀முஸ்தபிசூர் ரஹ்மானை ஐபிஎல்-லிருந்து விடுவித்த கோபத்தில், வங்காளதேச விளையாட்டு அமைச்சகம் கொடுத்த அழுத்தத்தால்தான் பிசிபி இப்படி ஒரு கோரிக்கையை வைத்தது. ஆனால், "இங்க...

இந்தியா 315 ரன் வித்தியாசத்தில் வெற்றி

Image
  19 வயதுக்கு உட்பட்டோர் விளையாடும் under 19 ஆசிய கிரிக்கெட் போட்டியில் மலேசியா அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 315 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  பொதிகை டைம்ஸ் செய்தியாளர் சிவா என்ற கருப்புசாமி 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் எழுச்சி

Image
  இந்தியாவில் எப்போதுமே விளையாட்டுக்களில் கிரிக்கெட்டுக்கு என்று தனி இடம் ஒன்று உண்டு.  இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் ஆண்கள் கிரிக்கெட்டை மட்டுமே விரும்பி பார்த்து வந்தனர். பெண்கள் கிரிக்கெட் அணியை பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. அந்தப் பெண்கள் கிரிக்கெட் அணியில் உள்ள வீரர்களை பற்றி ஒருவருக்கும் தெரியாது.  ஆனால் தற்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக பெண்கள் அணியிலும் சில வீரர்கள் பேசப்பட்டு வருகின்றனர். ரசிகர்களிடையே பெண்கள் கிரிக்கெட் பற்றியும் ஒரு பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது.  தற்போது நமது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மிகவும் வலுவானதாகவும் திறமை வாய்ந்ததாகவும் உள்ளது.  இந்த ஆண்டு உலக சாம்பியன்ளாக வந்துள்ள பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பொதிகை டைம்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.  நமது இந்திய ரசிகர்கள் எப்படி கிரிக்கெட்டை பெரிதாக ரசித்து வீரர்களை உற்சாகப்படுத்துகிறார்களோ அதே போன்று ஆக்கி ஃபுட்பால் கபடி பேஸ்கட் பால் போன்ற அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தினால் இந்திய அனைத்து விளையாட...

இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமாவை ஊடகங்கள் தங்கள் விளம்பரத்துக்கு பயன்படுத்துகிறதா?

Image
 இந்திய பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.  இப் போட்டியில்  337 என்ற பெரிய இலக்கை எதிர்நோக்கி விளையாடிய இந்திய அணி ஆரம்பத்தில் சிறிது தடுமாறினாலும் பின்பு ஜெமிமா மற்றும் இந்தியனின் கேப்டன் ஹர்மன் பிரீத்  கவுர் இருவரின் சிறப்பான ஆட்டம் காரணமாக வெற்றிக்கு அடித்தளம் இட்டனர்.  மேலும் ரிச்சா, ஸ்ரீமித்தி மந்தனா, தீப்தி ஷர்மா போன்றோரின் ஆட்டமும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் ஆட்டத்தின் காரணமாகவே இந்திய அணியின் ரன் ரேட் உயர்ந்தது.   இந்தப் போட்டியை பொருத்தவரை ஜெமிமா மிகச்சிறப்பாக ஆடினார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அவருடைய பங்களிப்பு இந்த வெற்றிக்கு மிக முக்கியமானது என்பதை மறுப்பதற்கு இல்லை.  ஆனால் நேற்று முதல் எல்லா சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஜெமிமா மட்டுமே இந்த வெற்றிக்கு காரணம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டு யூடியூப் அவர்களும் சமூக வலைத்தள வாசிகளும் தங்கள் பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர்த்த பயன்படுத்திக் கொள்கிறார்களோ என...