Posts

Showing posts with the label #பொதிகைடைம்ஸ்

திராவிடம் 2.0 ஆக மாறுகிறதா? தவெக

Image
  தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம் கூட்டணியோடு ஆட்சி அமைத்தது.  இந்த நிலையில் அதிமுக திமுக போன்ற திராவிட கட்சிகளில் இருந்து பல முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய தயாராக இருப்பதாக செய்திகள் வருவதோடு பலரும் ஏற்கனவே திராவிட சித்தாந்தத்தில் இருந்து விலகி தவெகவில்  இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   மக்கள் புதிய ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து பெரும் நம்பிக்கையுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்துள்ள நிலையில் ஏற்கனவே 50 ஆண்டுகாலம் மாறி மாறி ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து பல தலைவர்களும் தேவைக்காக இணைந்து வருவது மக்களிடம் அதற்கு ஏற்படுத்தி உள்ளது.  மேலும் தமிழக அரசியலில் வாடிக்கையாக நடப்பது என்னவென்றால் திராவிட கட்சிகளில் உள்ள சில புல்லுருவிகள் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் எந்த கட்சிக்கு வேண்டும் எனும் தாவி தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதோடு அக்கச்சியின் முக்கிய ப...

மினி பேருந்து ஆட்டோ விபத்து இருவர் பலி

Image
  மினி பேருந்தும் லோடுஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் பலி! 5 படுகாயம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆய்க்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கம்பிளி கிராமம் விந்தன் கோட்டை விளக்கிற்கு கீழ்ப்புறம்  சுரண்டை சாலையில் கார், லோடு ஆட்டோ,  மினி பேருந்து, விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர், விவசாயி என இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர் பஸ்ஸில் பயணம் செய்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் இலத்தூர் அருகே சீவநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாதவன் வயது (39) இவர் லோடு ஆட்டோ  ஓட்டுகிறார்  மாலை 6 மணி அளவில் இலத்தூர் சங்கர் தெருவை சேர்ந்த தங்கையா தேவர் மகன் அண்ணாமலை வயது ( 65 ) ஆகியோர் வயலில் காய்கறிகளை   ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோவில் சுரண்டை காய்கறி மார்க்கெட்டுக்கு  சென்று  கொண்டிருந்தனர் அப்பொழுது கம்பிளிக்கு கிழக்கே விந்தக்கோட்டை விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது அதே வழியாக சுரண்டையை நோக்கி சென்ற கார் லோடு ஆட்டோவின் மீது பின்னால் மோதியது இதில் ஆட்டோ நிலை தடுமாறி  சென்றது அப்பொழுது சுரண்டையில் இருந...

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

Image
  *20 ஆண்டுகளாக போலி பெயரில் பாஸ்போர்ட் பயன்படுத்தி சவூதியில் வேலை: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது* திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதாக போலி முகவரி மற்றும் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த நபர், சொந்த ஊருக்குத் திரும்பியபோது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உவரி காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பெண் முதல் நிலை காவலர் செல்வகனி, வெளிநாட்டில் இருந்து புதுப்பிப்புக்காக வந்திருந்த ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்தப் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், திருநெல்வேலி மாவட்டம் உவரி, பரதர் உவரி வடக்குத் தெருவைச் சேர்ந்த 'ஜார்ஜ், தந்தை பெயர் போரஸ்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 2-ஆம் தேதி அந்த முகவரியில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த முகவரியில் ஜார்ஜ் என்ற பெயருடைய நபர் உண்மையா...

மனிதநேயத்துடன் உயிரை பணயம் வைத்த இந்தியர்

Image
  ருமேனியா நாட்டில் கட்டிட வேலைக்காக சென்ற விபின் குமார் என்ற இந்தியருக்கு, ருமேனியா குடியுரிமை வழங்கி சிறப்பித்திருக்கிறது அந்த நாட்டு அரசு.  ருமேனியாவில் பனிப்பொழிவுக்காலம் என்பதால் ஏரிகள் அனைத்தும் உறைந்து காணப்படும். அப்படிப்பட்ட ஒரு ஏரியில் இறங்கிய சிறுமி ஒருவர், பனிக்கட்டி உடைந்து நீருக்குள் விழுந்து விட்டார். அப்போது அந்த வழியாக நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த விபின் குமார் சிறிதும் யோசிக்கலாம் சிறுமியை காப்பாற்ற களம் இறங்கினார்.  பனிக்கட்டிகள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும் என்ற ஆபத்து இருந்ததால், கரையிலிருந்து ஊர்ந்து கொண்டே சிறுமி அருகில் சென்று சேர்ந்தார். ஆனால் விபின் குமாரின் எடையை தாங்காமல் பனிக்கட்டிகள் உடைந்து விபின்குமாரும் நீருக்குள் விழுந்தார். ஆனாலும் மனம் தளராமல் சிறுமியை தன் மீது ஏற்றிக்கொண்டு மீட்புக்குழுவினர் வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.  தன் உயிரையும் பொருட்படுத்தாமல், கடும் குளிரையும் கண்டு கொள்ளாமல்  20 நிமிடத்துக்கு மேல் குளிர்ந்த நீரில் சிறுமியுடன் காத்திருந்தார் விபின். மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு இருவரையும்...

பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர்

Image
 *புளியங்குடியில் காதல் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்வததாகக்கூறி காதல்மனைவி குழந்தையுடன் காதல்கணவரின் வீட்டின் முன்பு தர்ணா- கணவரின் பெற்றோர்கள் பெண்ணை தாக்கி விரட்டும் வீடியோ வைரல்* தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் மஞ்சுப்ரியா (எ)தன்ஷிலா (25) இவர் இதே புளியங்குடி பகுதியை சேர்ந்த இளைஞர்  முகமது இத்ரிஸ்(27) என்பவரும்  கடந்து ஐந்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில் மஞ்சு ப்ரியா (எ) தன்ஷிலா சென்னையில் உள்ள கல்லூரிக்கு படிக்க சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து காதலன் முகமது இத்ரீஸை தனது பெற்றோர்கள் வேலைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள  நிலையில் மூன்று மாதங்கள் வெளிநாட்டில் இருந்த இவர் தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் சென்னையில் படிக்கும் தனது காதலியை சந்திக்கச் சென்ற நிலையில் பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகுவதற்கு முன்பே பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த விபரம்  மஞ்சுப்ரியாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து புளியங்குடி  ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற...

youtuberகளின் அட்டகாசம்

Image
   கேரளாவில் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸரான ஃபாஸ்மினா ஜாக்கீர் (Fazmina Zakir) மற்றும் ஒரு வயது முதிர்ந்த ஆட்டோ டிரைவருக்கு இடையே நடந்த இந்த சர்ச்சை, தற்போது கேரள சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் தற்போதைய நிலவரம் இதோ: ஃபாஸ்மினா ஒரு நாள் இரவு நேரத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி, டாடாவின் பிரபல துணிக்கடையான **"ஜூடியோ" (Zudio)** ஷோரூமிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் வயது முதிர்ந்த நபர் என்பதால், அவருக்கு 'ஜூடியோ' என்ற பெயர் சரியாகப் புரியவில்லை. அவர் அதை 'ஸ்டுடியோ' (Studio)என்று தவறாகப் புரிந்து கொண்டார். அதனால் அந்த ஆட்டோ ஓட்டுநர், "இங்கே நிறைய போட்டோ ஸ்டுடியோக்கள் இருக்கின்றன, உங்களுக்கு எந்த ஸ்டுடியோவிற்கு போக வேண்டும்?" என்று சாதாரணக் கேள்வியைத் திருப்பிக் கேட்டுள்ளார். ஃபாஸ்மினாவின் வீடியோவும் சர்ச்சையும் ஆட்டோ ஓட்டுநர் கேட்ட கேள்வியை தவறான நோக்கத்தில் எடுத்துக்கொண்ட ஃபாஸ்மினா, உடனே தனது மொபைலை எடுத்து அவரை வீடியோ செய்யத் தொடங்கினார். மேலும், அந்த ஆட்டோ ஓட்டுநர் **மது...

காதல் மனைவியின் நம்பிக்கை துரோகம்

Image
  புதிய வாகனம் ஒன்றை வாங்கிய பிறகு, அதைத் தனது பெற்றோரிடம் காட்டும் வரை எந்த இளைஞருக்கும் அளவிட முடியாத உற்சாகம் இருக்கும். குஜராத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான ரவி தீரஜ்லால் மர்கானாவும் அப்படித்தான் மகிழ்ச்சியில் இருந்தார். 2025 ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் அவர் தனது கனவு வாகனமான புதிய ராயல் என்ஃபீல்டு புல்லெட்டை வாங்கியிருந்தார். புதிய பைக்கில் பெருமிதத்துடன் பெற்றோரைக் காணச் செல்ல அவசரப்பட்ட அவர், அந்தப் பயணம் தனது வாழ்க்கையின் கடைசி பயணமாக மாறும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ரவியின் வாழ்க்கைக் கதை ஒரு திரைப்படத்தை நினைவுபடுத்தும் வகையிலானது. கடன் மதிப்பீட்டாளராக பணியாற்றிய அவர், இருபது வயதின் தொடக்கத்தில் ரிங்கிள் வகாசியா என்ற இளம்பெண்ணை காதலித்தார். குடும்பத்தினரின் எதிர்ப்புகளை மீறி, உலகத்தையே எதிர்த்து அவர்கள் தங்களது காதலை வெற்றியடையச் செய்தனர். இறுதியில் உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர். 2017-ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐந்து வயது மகனும் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு சில காலம் பெற்றோருடன் வசித்த அவர்கள், பின்னர் அருகிலுள்ள ர...

திண்டுக்கல் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற மர்ம நபர் நபர் கைது

Image
 #_திண்டுக்கல்லில் மெடிக்கல் கடையில் வைத்து போதை மருந்து,  போதை ஊசி, போதை மாத்திரைகள் விற்பனை செய்த வாலிபர் கைது - 15,000 போதை மருந்துகள், போதை மாத்திரைகள் பறிமுதல்* திண்டுக்கல் நகர் பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து நகர் DSP.கார்த்திக் தலைமையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர்கள் சூரியகலா, பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது கிழக்கு ரத வீதியில் சிட்டி மெடிக்கல் என்ற மருந்து கடையில் சட்டவிரோதமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து அதிக போதை தரக்கூடிய போதை மாத்திரைகள், போதை ஊசிகள், போதை மருந்துகள் ஆகியவற்றை விற்பனை செய்த திண்டுக்கல், நத்தர்ஷா தெரு பகுதியை சேர்ந்த ஆரிப்அகமது(32) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 15,000 போதை ஊசிகள், போதை மருந்துகள், போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்றைய18/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Image
  அகமதாபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் சுமார் 11 மாதங்களாக விற்பனையாளராகப் பணியாற்றி வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்பவர், தன் முதலாளியின் நம்பிக்கையைச் சிதைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில், உரிமையாளர் தனக்கு அவசர வேலை நிமித்தமாக விடுப்பு அளித்துள்ளதாக சக ஊழியர்களிடம் பொய் கூறிவிட்டு அவர் கடையிலிருந்து வெளியேறியுள்ளார். அன்று மாலை வழக்கமான கணக்கெடுப்பின் போது ஒரு தங்க பிரேஸ்லெட் காணாமல் போனதைக் கவனித்த ஊழியர்கள், உரிமையாளர் தர்ஷன்பாயிடம் இதுகுறித்து விசாரித்தபோதுதான் ஹர்ஷிதா யாரிடமும் சொல்லாமல் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் இருந்த நகைகளை முழுமையாகச் சோதனை செய்தபோது, சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், தாலிகள், பதக்கங்கள், காதணிகள் மற்றும் கைக்கடிகாரங்கள் எனப் பெருமளவிலான ஆபரணங்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உடனடியாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹர்ஷிதா நைசாக நகைகளைத் தனது சீருடைக்குள் மற...

இன்றைய11/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

இன்றைய10/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

Image
  நடந்து முடிந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பலரும் எதிர்பார்க்காத ஆச்சரியமான முடிவுகளை மக்கள் கொடுத்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் போது முன்னாள் அரசு கொடுத்த உதவித்தொகை இலவசங்கள் போன்ற எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும், மேலும் வாக்குக்கு பணம் பெற்றுக் கொண்டு பலரும் மாற்றி வாக்களித்துள்ளதையும் உறுதிப்படுத்துகிறது.  இதன் மூலம் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இனி வரும் காலங்களில் நீங்கள் வாக்குச் செலுத்த பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என்பதை தெரிவித்துள்ளனர்.  அது மட்டுமல்லாமல் ஆட்சி முடியும் தருவாயில் நீங்கள் மக்களை ஏமாற்ற கொடுக்கும் சிறப்பு உதவித்தொகைகள், விழாக்கால தொகுப்புகள், மற்றும் உதவித்தொகைகள் போன்ற எதுவும் வாக்குகளைப் பெற்றுத் தராது என்பதை நிரூபித்துள்ளனர்.  அதற்கு பதிலாக ஐந்தாண்டுகளும் சிறப்பான சட்டம் ஒழுங்குடன், தரமான உட்கட்டமைப்பு, ஊழலற்ற ஆட்சி, சிறந்த மருத்துவ வசதி, சிறந்த பொதுப் போக்குவரத்து, சிறப்பான தரமான கல்வி முறை இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தால...

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

Image
  இனி எங்கும் இப்படிதான்  ரொம்ப குஷ்டம் 😀😀 ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் இருந்து **இன்னோவா (Innova)** காரில் ஊர்வலமாகப் புறப்பட்ட 12 விஜய் ரசிகர்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.  நீதிமன்றம்** மற்றும் **மாவட்ட ஆட்சியர் அலுவலகம்** போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் முன்பாகக் கத்திக் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.  * அனுமதியின்றி ஊர்வலம் சென்றது மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது போன்ற காரணங்களால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட 12 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். தற்போது அவர்கள் **கேணிக்கரை காவல் நிலையத்தில்** வைக்கப்பட்டு, விசாரணை  வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. > **குறிப்பு:** பொது இடங்களில் இது போன்ற செயல்பாடுகள் சட்டப்படி குற்றமாகும். குறிப்பாக நீதிமன்றம் மற்றும் கலெக்டர் அலுவலகம் போன்ற 'அமைதி மண்டலங்களில்' (Silence Zones) ரகளை செய்வது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு வழ...

அதிமுக திமுக கூட்டணி பற்றி ஆலோசனை. உதயநிதி காரணமா?

Image
  தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் 2026ல் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால் அரசியல் சூழ்நிலையில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது.  தமிழக வெற்றி கழகம் 107 இடங்களில் இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் அவர்களால் அரசு அமைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அவர்களிடம் கூட்டணி சேரவும் அனைத்து கட்சிகளும் தயக்கம் காட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அவர்களுக்கு ஆதரவளித்துள்ளது.  இந்த நிலையில் வெட்டிக் கழகத்தின் தலைவர் திரு விஜய் அவர்கள் ஆட்சி அமைத்தால் அது திமுகவில் வளர்ந்து வரும் உதயநிதிக்கு பின்னாலில் பெரும் சவாலாக அமையும். விஜய் தனது கட்சியையும், அரசியல் இருப்பையும் பலப்படுத்திக் கொண்டால் உதயநிதிக்கு பின்னடைவாக அமையும் என்பதால் திமுக ஒரு புதிய ராஜதந்திரத்தை கையாள முடிவு செய்துள்ளது.  விஜய் ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக ஆட்சியை அமைத்து விட்டால் விஜயின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று கணக்குப் போட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  இதன் மூல...

புதிய தமிழக அரசு சந்திக்கப் போகும் சவால்கள்

Image
  தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் உள்ளது.  இந்த நிலையில் புதிய தமிழக அரசு அமைந்த உடன் அந்த அரசு சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? என்பது பற்றி பார்ப்போம். 1 தமிழக அரசு தற்போது 10 லட்சம் கோடி வரை கடன் சுமையில் சிக்கித் தவித்து வருவது முதல் பிரச்சனையாக இருக்கும். 2 தற்போதைய புதிய அரசு அமைக்கவிருக்கும் தமிழக வெற்றி கழகம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரம் என்பது அரசிடம் தற்போது இல்லாததால் பல வகையில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதற்கும். 3 தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தில் மூலம் மது விற்பனை நடைபெறுவதில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்பதாக தற்போது முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திரு விஜய் அவர்களே கூறியுள்ள நிலையில் அதனை சரி செய்வதும் சவாலானதாக இருக்கும். 4 தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் போதை பழக்கங்களையும் அதனால் ஏற்படும் வன்முறைகள் பாலியல் குற்றங்கள் போன்றவற்றை தடுப்பதும் மிகுந்த சவாலானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 5 இது எல்லாம் விட முக்கியமானது தமிழக வெற்றி கழகத்தின் தொண...

போலி அடையாளத்துடன் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்

Image
  அதாவது மக்களே…! குஜராத்தின் அகமதாபாத்தில், வந்தே பாரத் ரயிலில் ஒரு மடிக்கணினி (laptop) திருடப்பட்டது…! ரயில்வே போலீசார் விசாரணையைத் தொடங்கியபோது, ​​மடிக்கணினி பையை எடுத்துக்கொண்டு ஒருவன் நடந்து செல்வது சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியிருந்தது…! சீட் முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட கைபேசி எண்ணை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். விரைவில், அந்தச் சந்தேக பேர்வழி இருப்பிடம் டெல்லியில் இருப்பது கண்டறியப்பட்டது…! ஒரு போலீஸ் குழு உடனடியாக டெல்லிக்கு விரைந்தது; அங்குள்ள உள்ளூர் போலீசாரின் உதவியுடன், 'ஹர்ஷித் சௌத்ரி' என்ற பெயரில் ஒருவன் மது அருந்திக்கொண்டிருந்த ஒரு விடுதியை (hotel) அவர்கள் அடைந்தனர்…! போலீசார் அவனைக் கைது செய்ய முயன்றபோது, ​​தான் ராணுவத்தில் 'மேஜர்' (Major) அந்தஸ்தில் இருப்பதாகவும், அந்தப் பை தவறுதலாகத் தன்னிடம் வந்துவிட்டதாகவும் அவன் கூறினான்…! இதைக் கேட்டதும் போலீசார் ஒரு கணம் தயங்கினர்; ஆனால், சிசிடிவி காட்சிகளில் அவர் திருட்டில் ஈடுபட்டது தெளிவாகத் தெரிந்தது. விசாரணையின்போது, ​​அவன் ஒரு போலி ராணுவ அடையாள அட்டையைச் சமர்ப்பித்ததுடன், ...

தமிழக வெற்றிக்கழக வெற்றியாளர்கள் கவனத்திற்கு

Image
  தமிழக வெற்றிக்கழக வெற்றியாளர்கள் கவனத்திற்கு  தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றம் என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தத் தேர்தலின் மூலம் பொதுமக்கள் அனைவரும் உணர்த்துவது என்னவென்றால் ஊழல் இல்லாத, போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத, சிறப்பான சட்டம் ஒழுங்குடன் கூடிய ஒரு நல்ல ஆட்சியை எதிர்பார்த்தே மக்கள் மாற்றத்தை விரும்பி திராவிட சித்தாந்தம் கொண்ட இரு பெரும் அரசியல் இயக்கங்கள் மீது இல்லாத ஒரு நம்பிக்கையை தமிழக வெற்றி கழகத்தின் மீது வைத்து தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.  மேலும் இலவசங்கள், வாக்கு செலுத்த பணம் போன்ற பல மக்களை வாக்களிக்க தூண்டும் தூண்டில்களில் எதுவும் சிக்காமல் நல்லாட்சி ஒன்றே நமக்குத் தேவை என்பதை உணர்ந்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது இந்த தேர்தலில்  தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. ...

ஓட்டு போட வந்தவர் மாயம்

Image
  தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுபலட்சுமி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 22ம் தேதி ஓட்டுப்போடுவதற்காக சொந்த ஊரான கண்டமனூருக்கு வந்தார. அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.. தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே நடந்த இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. மாயமான இளம்பெண் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்ட செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பணியாற்றி வந்த சுபலட்சுமி, தேர்தல் வாக்களிப்பதற்காக ஊருக்கு வந்த நிலையில், ஏப்ரல் 22-ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேடுதல் வேட்டையின் முடிவில், கண்டமனூர் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதி, போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் ந...

இன்றைய03/05/2026 செய்தி துணுக்குகள்

Image