ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி
ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பயன்படுத்தி பயன்படுத்தி வருவது ஆன்லைன் வர்த்தகத்தை தான். இது வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களை தொலைபேசி வாயிலாக கண்டறிந்து அவற்றின் தரம் குறித்த விபரங்களை ரிவ்யூகள் மூலமாக அறிந்து கொண்டு ஆர்டர் செய்ய வசதியாக உள்ளது. மேலும் பல பொருட்கள் சந்தை விலையை விட குறைவாக கிடைக்கிறது. பொருட்களை வாங்க பல கடைகளுக்கு அணிந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற காரணங்களால் மக்கள் அதிகம் பயன்படுத்துவது ஆன்லைன் வர்த்தக தளங்களாக மாறி வருகிறது. இப்போது இந்தியாவில் நடக்கும் ஆன்லைன் வர்த்தகம் பல பில்லியன் டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் பல பொருட்கள் சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விற்பனைக்கு வருகிறது. இதனால் நமது நாட்டில் நடக்கும் வர்த்தகத்தில் ஒரு பெரும் பகுதி தொகை மற்றும் லாபம் அனைத்தும் வெளிநாடுகளுக்கு செல்கிறது. இதனால் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு ந...