Posts

Showing posts from June, 2026

மினி பேருந்து ஆட்டோ விபத்து இருவர் பலி

Image
  மினி பேருந்தும் லோடுஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் பலி! 5 படுகாயம் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே ஆய்க்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கம்பிளி கிராமம் விந்தன் கோட்டை விளக்கிற்கு கீழ்ப்புறம்  சுரண்டை சாலையில் கார், லோடு ஆட்டோ,  மினி பேருந்து, விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த டிரைவர், விவசாயி என இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிர் இழந்தனர் பஸ்ஸில் பயணம் செய்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர் இலத்தூர் அருகே சீவநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாதவன் வயது (39) இவர் லோடு ஆட்டோ  ஓட்டுகிறார்  மாலை 6 மணி அளவில் இலத்தூர் சங்கர் தெருவை சேர்ந்த தங்கையா தேவர் மகன் அண்ணாமலை வயது ( 65 ) ஆகியோர் வயலில் காய்கறிகளை   ஏற்றிக்கொண்டு லோடு ஆட்டோவில் சுரண்டை காய்கறி மார்க்கெட்டுக்கு  சென்று  கொண்டிருந்தனர் அப்பொழுது கம்பிளிக்கு கிழக்கே விந்தக்கோட்டை விளக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது அதே வழியாக சுரண்டையை நோக்கி சென்ற கார் லோடு ஆட்டோவின் மீது பின்னால் மோதியது இதில் ஆட்டோ நிலை தடுமாறி  சென்றது அப்பொழுது சுரண்டையில் இருந...

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

Image
  *20 ஆண்டுகளாக போலி பெயரில் பாஸ்போர்ட் பயன்படுத்தி சவூதியில் வேலை: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது* திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதாக போலி முகவரி மற்றும் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த நபர், சொந்த ஊருக்குத் திரும்பியபோது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உவரி காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பெண் முதல் நிலை காவலர் செல்வகனி, வெளிநாட்டில் இருந்து புதுப்பிப்புக்காக வந்திருந்த ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்தப் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், திருநெல்வேலி மாவட்டம் உவரி, பரதர் உவரி வடக்குத் தெருவைச் சேர்ந்த 'ஜார்ஜ், தந்தை பெயர் போரஸ்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 2-ஆம் தேதி அந்த முகவரியில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த முகவரியில் ஜார்ஜ் என்ற பெயருடைய நபர் உண்மையா...

மனிதநேயத்துடன் உயிரை பணயம் வைத்த இந்தியர்

Image
  ருமேனியா நாட்டில் கட்டிட வேலைக்காக சென்ற விபின் குமார் என்ற இந்தியருக்கு, ருமேனியா குடியுரிமை வழங்கி சிறப்பித்திருக்கிறது அந்த நாட்டு அரசு.  ருமேனியாவில் பனிப்பொழிவுக்காலம் என்பதால் ஏரிகள் அனைத்தும் உறைந்து காணப்படும். அப்படிப்பட்ட ஒரு ஏரியில் இறங்கிய சிறுமி ஒருவர், பனிக்கட்டி உடைந்து நீருக்குள் விழுந்து விட்டார். அப்போது அந்த வழியாக நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த விபின் குமார் சிறிதும் யோசிக்கலாம் சிறுமியை காப்பாற்ற களம் இறங்கினார்.  பனிக்கட்டிகள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும் என்ற ஆபத்து இருந்ததால், கரையிலிருந்து ஊர்ந்து கொண்டே சிறுமி அருகில் சென்று சேர்ந்தார். ஆனால் விபின் குமாரின் எடையை தாங்காமல் பனிக்கட்டிகள் உடைந்து விபின்குமாரும் நீருக்குள் விழுந்தார். ஆனாலும் மனம் தளராமல் சிறுமியை தன் மீது ஏற்றிக்கொண்டு மீட்புக்குழுவினர் வருவதற்காக காத்திருக்க ஆரம்பித்தார்.  தன் உயிரையும் பொருட்படுத்தாமல், கடும் குளிரையும் கண்டு கொள்ளாமல்  20 நிமிடத்துக்கு மேல் குளிர்ந்த நீரில் சிறுமியுடன் காத்திருந்தார் விபின். மீட்புக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு இருவரையும்...

பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய இளைஞர்

Image
 *புளியங்குடியில் காதல் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்வததாகக்கூறி காதல்மனைவி குழந்தையுடன் காதல்கணவரின் வீட்டின் முன்பு தர்ணா- கணவரின் பெற்றோர்கள் பெண்ணை தாக்கி விரட்டும் வீடியோ வைரல்* தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகள் மஞ்சுப்ரியா (எ)தன்ஷிலா (25) இவர் இதே புளியங்குடி பகுதியை சேர்ந்த இளைஞர்  முகமது இத்ரிஸ்(27) என்பவரும்  கடந்து ஐந்து வருடங்களாக காதலித்து வந்த நிலையில் மஞ்சு ப்ரியா (எ) தன்ஷிலா சென்னையில் உள்ள கல்லூரிக்கு படிக்க சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து காதலன் முகமது இத்ரீஸை தனது பெற்றோர்கள் வேலைக்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள  நிலையில் மூன்று மாதங்கள் வெளிநாட்டில் இருந்த இவர் தனது பெற்றோர்களுக்கு தெரியாமல் சென்னையில் படிக்கும் தனது காதலியை சந்திக்கச் சென்ற நிலையில் பின்னர் இருவரும் ஒன்றாக சேர்ந்து வசித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகுவதற்கு முன்பே பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த விபரம்  மஞ்சுப்ரியாவின் பெற்றோருக்கு தெரிய வந்ததை அடுத்து புளியங்குடி  ஜமாத்தார்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற...

youtuberகளின் அட்டகாசம்

Image
   கேரளாவில் சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸரான ஃபாஸ்மினா ஜாக்கீர் (Fazmina Zakir) மற்றும் ஒரு வயது முதிர்ந்த ஆட்டோ டிரைவருக்கு இடையே நடந்த இந்த சர்ச்சை, தற்போது கேரள சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் தற்போதைய நிலவரம் இதோ: ஃபாஸ்மினா ஒரு நாள் இரவு நேரத்தில் ஒரு ஆட்டோவில் ஏறி, டாடாவின் பிரபல துணிக்கடையான **"ஜூடியோ" (Zudio)** ஷோரூமிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் வயது முதிர்ந்த நபர் என்பதால், அவருக்கு 'ஜூடியோ' என்ற பெயர் சரியாகப் புரியவில்லை. அவர் அதை 'ஸ்டுடியோ' (Studio)என்று தவறாகப் புரிந்து கொண்டார். அதனால் அந்த ஆட்டோ ஓட்டுநர், "இங்கே நிறைய போட்டோ ஸ்டுடியோக்கள் இருக்கின்றன, உங்களுக்கு எந்த ஸ்டுடியோவிற்கு போக வேண்டும்?" என்று சாதாரணக் கேள்வியைத் திருப்பிக் கேட்டுள்ளார். ஃபாஸ்மினாவின் வீடியோவும் சர்ச்சையும் ஆட்டோ ஓட்டுநர் கேட்ட கேள்வியை தவறான நோக்கத்தில் எடுத்துக்கொண்ட ஃபாஸ்மினா, உடனே தனது மொபைலை எடுத்து அவரை வீடியோ செய்யத் தொடங்கினார். மேலும், அந்த ஆட்டோ ஓட்டுநர் **மது...

காதல் மனைவியின் நம்பிக்கை துரோகம்

Image
  புதிய வாகனம் ஒன்றை வாங்கிய பிறகு, அதைத் தனது பெற்றோரிடம் காட்டும் வரை எந்த இளைஞருக்கும் அளவிட முடியாத உற்சாகம் இருக்கும். குஜராத்தின் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான ரவி தீரஜ்லால் மர்கானாவும் அப்படித்தான் மகிழ்ச்சியில் இருந்தார். 2025 ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் அவர் தனது கனவு வாகனமான புதிய ராயல் என்ஃபீல்டு புல்லெட்டை வாங்கியிருந்தார். புதிய பைக்கில் பெருமிதத்துடன் பெற்றோரைக் காணச் செல்ல அவசரப்பட்ட அவர், அந்தப் பயணம் தனது வாழ்க்கையின் கடைசி பயணமாக மாறும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ரவியின் வாழ்க்கைக் கதை ஒரு திரைப்படத்தை நினைவுபடுத்தும் வகையிலானது. கடன் மதிப்பீட்டாளராக பணியாற்றிய அவர், இருபது வயதின் தொடக்கத்தில் ரிங்கிள் வகாசியா என்ற இளம்பெண்ணை காதலித்தார். குடும்பத்தினரின் எதிர்ப்புகளை மீறி, உலகத்தையே எதிர்த்து அவர்கள் தங்களது காதலை வெற்றியடையச் செய்தனர். இறுதியில் உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர். 2017-ல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐந்து வயது மகனும் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு சில காலம் பெற்றோருடன் வசித்த அவர்கள், பின்னர் அருகிலுள்ள ர...