அதிசயம் தக்காளியும் உருளைக்கிழங்கும் ஒரே செடியிலா?
விவசாய உலகில் ஒரு பெரிய அதிசயம் நடந்துள்ளது! கோரக்பூர் பல்கலைக்கழகம் (DDU) விஞ்ஞானிகள், கிராஃப்டிங் (Grafting) தொழில்நுட்பம் மூலம் ஒரு ‘சூப்பர் செடி’ உருவாக்கியுள்ளனர். இந்த செடியின் மேல்பகுதியில் தக்காளி காய்க்கும், வேர்பகுதியில் உருளைக்கிழங்கு வளரும். இந்த செடிக்கு விஞ்ஞானிகள் ‘போமேட்டோ’ (Pomato) என்று பெயர் வைத்துள்ளனர். உங்களிடம் நிலம் இல்லையென்றாலும், ஒரு பெரிய தொட்டியில் கூட இந்த இரண்டு காய்கறிகளையும் வளர்க்கலாம்.
இது நகர்ப்புற மக்களுக்கு குறைந்த இடத்தில் அதிக பயிர் பெற ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. எதிர்காலத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் வீட்டு தோட்டப் புரட்சிக்கு இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
#Pomato #AgricultureInnovation #futurefarming #urbangardening #challenge




Comments
Post a Comment