நடிகர் விஜயின் ஊமைக்குத்து அரசியல்


 

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் நீட் விளக்கு, சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் போன்றவற்றை வைத்து அரசியல் செய்து வந்தார்.

 ஆனால் தமிழக அரசின் நிர்வாக திறமையின்மை, அந்நிய முதலீடு இருப்பதில் நடந்த குளறுபடிகள், தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் பாலியல் வன்கொடுமைகள், வேங்கை வெயில் பிரச்சனை, கனிம வள கொள்ளை போன்ற எந்த பிரச்சனையைப் பற்றி பேசாமல் திமுகவுக்கு முட்டுக்கொடுத்து அரசியல் செய்து வரும் நடிகர் விஜய் தற்போது சிறுபான்மை வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்தி வருவதால் தற்போது வெகுவாக பேசப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் பிரச்சினையும் தனது கருத்தை சொல்ல வக்கில்லாமல் திராணியில்லாமல் அமைதியாக பனையூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது.

 இவரை களம் இறக்கீடு கிறிஸ்தவ மிஷனரி சிறுபான்மை மக்களும் பின்னாலிருந்து செயல்படுவதால் திருப்பரங்குன்றத்தில் நடந்த அநீதியை பற்றி பேசினால் இவரது அரசியல் முடிவு வந்துவிடும்  என்று அஞ்சி நடுங்கி பேசாமல் இருக்கிறார்.



 மேலும் தற்போது சிறுபான்மை மக்களை பொருத்தவரை ஸ்டாலினின் திறமை என்ன என்பதும் திமுகவின் அரசியலின் எடுபடாது என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிந்து விட்ட படியால் அவருக்கு பதிலாக புதிதாக ஒருவரை களம் இறக்கி எப்படியாவது தங்களுக்கு சாதகமாக செயல்படும் ஒரு அரசை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தில் நடிகர் விஜயை களம் இறக்கி உள்ளனர்.

 ஆனால் விஜயும் இன்னொரு ஸ்டாலின் என்பது அவர் அரசியலில் வெற்றி பெற்று ஒரு வேளை முதலமைச்சரான பின் தான் அவர்களுக்குப் புரியும். எந்த ஒரு அரசியல் அறிவும் நிர்வாக திறமையும் இல்லாத விஜய் என்ற மண்குதிரையை நம்பி சவாரி செய்யும் மக்களுக்கு உண்மை நிலை விரைவில் புரியவரும்.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்