Posts

Showing posts from December, 2023

தென்காசியில் தொடரும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள்

  சென்னை போன்ற பெரு நகரங்களில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில் மக்கள் வெள்ளத்தால் அவதிப்படுவது தொடர்கதை ஆகி வரும் சூழ்நிலையில் நமது தென்காசி பகுதியில் தொடர்ந்து நீர்நிலைகள் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படுவது மட்டுமின்றி பல இடங்களில் குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் சென்னை போன்று தென்காசியும் வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். ஏனெனில் தென்காசி பகுதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் அதிக மழை பொழிவும் பல நீர்வீழ்ச்சிகளும் உள்ளதால் இங்கு மழைக்காலங்களில் அளவுக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்பு உள்ளது. அந்த சமயங்களில் நீர் வழித்தடங்கள் மற்றும் குளங்கள் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் மழை வெள்ளமானது சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் புக வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகங்களும் பொதுப்பணித்துறை நீர்வளத்துறை போன்ற அனைத்து துறைகளும் நீர் வழித்தடத்தையும் நீர்நிலைகளையும் யாரும் ஆக்கிரமிக்க விடாமல் முறையாக தூர்வாரி பராமரித்து நமது பகுதியில் விவசாயத்தையும் மக்களின்...

சென்னை வெள்ளத்தில் தத்தளிக்க பொதுமக்களும் காரணம் ஏன்?

Image
 கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பெய்த கன மழை நாள் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதற்கு நீர் வழிப்பாதைகள் அடைக்கப்பட்டதும், ஆக்கிரமிக்கப்பட்டதும், ஏரி குளங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்ததும் காரணமாக கூறப்பட்டது. அவற்றை முற்றிலும் உன்னை என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் பல காரணங்கள் இந்த வெள்ளத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் கடை நடத்துபவர்களும் பொது மக்களும் தங்கள் குப்பைகளை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நேரடியாக மழை நீர் செல்லும் கால்வாய்களில் பொறுப்பில்லாமல் போட்டு விட்டு செல்கின்றனர். மேலும் சாலைகளிலும் கண்ட இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகளையும் குப்பைகளையும் எதை பற்றியும் சிந்திக்காமல் வீசிவிட்டுச் செல்லும் பொறுப்பற்ற நமது செயல்களினாலேயே மழைக்காலங்களில் ஓரளவுக்கு நீர் செல்லக்கூடிய நீர் வழிப் பாதைகளும் அடைபட்டு வெள்ளம் எங்கும் செல்ல முடியாமல் தேங்கி சாலைகளிலும் வீடுகளுக்குள்ளும் வர காரணமாகிறது. இது போன்ற நேரங்களில் ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொண்டு இனியாவது சென்னை மக்கள் மட்டுமல்லாது நாட்டில் உ...

பொங்கிய போராளிகள் எங்கே

Image
 கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசால் நடத்தப்படும் ஆவின் பால் நிறுவனத்தின் 4.5% கொழுப்பு உள்ள பச்சை நிற பால் பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக 3.5% கொழுப்பு உள்ள புதிய பால் பாக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு #தந்தி தொலைக்காட்சி பால்வளத்துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் அவர்களிடம் ஒரு நேர்காணல் நடத்தும் போது பச்சை நிற பாக்கெட்டுகள் நிறுத்தப்பட்ட தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் மிகுந்த திமிருடன் கொழுப்பு கூட இருந்தா நல்லா இருக்கும் என்று பதில் அளித்தார். அதுமட்டுமல்லாமல் குறைந்த கொழுப்பு சதவீதம் உள்ள பால் மக்களுக்கு நல்லது எனது மக்களுக்கு எது நல்லது என்று சொல்ல எனக்கு உரிமை இல்லையா என்பது போன்று பதில் அளித்து இருந்தார். இதேபோன்று வடமாநிலங்களில் மாட்டுக்கறி விவகாரத்தில் பதிலளித்த போது இங்கே உள்ள போராளிகளும் திமுகவைச் சேர்ந்த அரசியல் பிரபலங்களும் குறிப்பாக கனிமொழி போன்றவர்களும் என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்று அவர்கள் எப்படி முடிவு செய்யலாம். #என்உணவுஎன்உரிமை என்பது போன்ற ஹேஷ்டேக்குகளுடன் கருத்து தெரிவித்திருந்த...