தென்காசியில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கஞ்சா குற்றவாளிகள் கைது
கஞ்சா வழக்கின் குற்றவாளிகள் மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய கஞ்சா மற்றும் ஆயுத சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான வீராணம் மெயின்ரோடு மாடசாமி என்பவரின் மகன் சசிகுமார்(46) , கடையம் கல்யாணிபுரம் மாடசாமி என்பவரின் மகன்களான பாலமுருகன் (35) மற்றும் மகேஷ்(22) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு G.S.மாதவன் T.P.S., அவர்கள் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி மூன்று குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்..
#TenkasiDistrictPolice #SouthZoneTNpol #TamilNaduPolice #Goondas



Comments
Post a Comment