தோவாளை பகுதியில் ஆட்டோ மீது கார் மோதி விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை நான்கு வழி சாலையில் பயணிகள் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் இறந்தவர்கள் அடையாளம் தெரிந்தது. திருநெல்வேலி மாவட்டம்வடக்கன்குளம் அருகே உள்ள கோலியான் குளத்தை சேர்ந்ததாய் கலா, அவரது மகன் ஆகியோர் விபத்தில் பலியானவர்கள். காயமடைந்த ஆட்டோ டிரைவர் அவரது இன்னொரு மகனாவார். அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.அவரது மகன்கள் இருவருடன் ஆட்டோவில் சென்று போது விபத்தில் சிக்கியது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளர் திரு பச்சைமால் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.

Comments
Post a Comment