இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து. இளைஞர் பலி.

 





திருநெல்வேலி மாவட்டம் பணகுடிபிரதான சாலையில் நேற்று(04/02/26) இரவுபுனித மாதா ஆலயம் அருகில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்து. பணகுடி கோரி காலனி சேர்ந்த பிரவீன் பணகுடி தளவாய்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்று இரு வாலிபர்கள் தூக்கி வீசப்பட்டுபடுகாயம் . இரவு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ரகுராமன் அந்த வழியாக வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு மணிமற்றும் காவலர் திரு ஜெகதீசன்ஆகியோர் விரைந்து மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கோரிகாலனியை சேர்ந்த பிரவீன் (17) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றிஇறந்துவிட்டார். ராஜ்குமார் என்பவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிகழ்வு பணகுடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பணகுடி காவல் ஆய்வாளர் திரு A.T.ராஜாராம் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள...



Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

ஓட்டு போட வந்தவர் மாயம்

கனவு கலைந்தது. கருத்து தெரிந்தது.

திராவிடம் 2.0 ஆக மாறுகிறதா? தவெக