நாளை(19/12/2025) அனுமன் ஜெயந்தி முன்னிட்டு தயாராகும் வடைகள். இந்த வடைகள் நாளை காலை அனுமன் சுவாமிக்கு வடைமாலையாக அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
🇮🇳ஜம்முவில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டதாகத் Touseef என்ற நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 👉ராணுவப் பொதுப் பள்ளியில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு, ராணுவப் பகுதிக்குள் சென்று வர முறையான அனுமதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது செல்போனைப் பரிசோதித்தபோது, பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று நபர்களின் எண்கள் "Chacha Gujjra", "Ahmiii" மற்றும் "Ali bhi" ஆகிய பெயர்களில் சேமிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
*20 ஆண்டுகளாக போலி பெயரில் பாஸ்போர்ட் பயன்படுத்தி சவூதியில் வேலை: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கைது* திருநெல்வேலி மாவட்டம், உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பதாக போலி முகவரி மற்றும் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, கடந்த 20 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்த நபர், சொந்த ஊருக்குத் திரும்பியபோது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். உவரி காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு வரும் பெண் முதல் நிலை காவலர் செல்வகனி, வெளிநாட்டில் இருந்து புதுப்பிப்புக்காக வந்திருந்த ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆய்வு செய்தபோது இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்டிருந்த அந்தப் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், திருநெல்வேலி மாவட்டம் உவரி, பரதர் உவரி வடக்குத் தெருவைச் சேர்ந்த 'ஜார்ஜ், தந்தை பெயர் போரஸ்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 2-ஆம் தேதி அந்த முகவரியில் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அந்த முகவரியில் ஜார்ஜ் என்ற பெயருடைய நபர் உண்மையா...
உளுந்துார்பேட்டை அருகே ஓம்சக்தி பக்தர்கள் சென்ற தனியார் சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஓம்சக்தி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனியார் சொகுசு பஸ்சில் மேல்மருவத்துாருக்கு சென்றனர். நேற்று இரவு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டனர். காலை 8:00 மணிக்கு, உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். தொடர்ந்து, அனைவரும் மாற்று பஸ் மூலம் லால்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது. விபத்து குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். @topfans #idumban #fblifestyles #PothigaiTimes #PothigaiTimesnews
செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு ***************************** செங்கோட்டை நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பாக நகர் மன்ற துணைத் தலைவர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது. சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் அலுவலகம் என்ற முறையிலும் , வாசர்களுக்கு குப்பை தரம் பிரிக்கும் விழிப்புணர்வு முகாம் நடத்திய வகையிலும், பரிசு வழங்கப்பட்டது பரிசுகள் வழங்கிய நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அத்தனை பணியாளர்களுக்கும் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். #Pothigaitimes #Tenkasi #News #Today #Tamil #Senkottai
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு வலியால் துடித்த தனது மகளை கொலை செய்து விட்டு தற்கொலை முயற்சி செய்த முன்னாள் SI கைது விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கோதண்டராமன். 69 வயதாகும் கோதண்டராமன் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு 33 வயதில் ஸ்வேதா என்கிற மகள் இருக்கிறார். நான்காண்டுகளுக்கு முன்பு குரும்பன் கோட்டை பகுதியில் திருமணம் செய்து வைக்கப்பட்ட இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஸ்வேதாவிற்கு தொடர்ச்சியாக சுவாச பிரச்சனை மற்றும் சிறுநீரக பிரச்சனை இருந்ததால் கணவர் சிறிது மாதங்களுக்கு முன்பு ஸ்வேதாவை அவரது தந்தை வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் தொடர்ச்சியாக சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்ட தனது மகளை புதுச்சேரி அரசு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்து உள்ளார் கோதண்டராமன். எவ்வளவு சிகிச்சை அளித்தாலும் மகளுக்கு உடல் உபாதைகள் தொடர்ச்சியாக ஏற்படுவதும், வலியால் மகள் தொடர்ச்சியாக அவதிப்படுவதையும் தாங்க முடியாத கோதண்டராமன் இன்று காலை 6 மணி அளவில் மகளை வீட்டிலிருந்த கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்துள்ள...
தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுபலட்சுமி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 22ம் தேதி ஓட்டுப்போடுவதற்காக சொந்த ஊரான கண்டமனூருக்கு வந்தார. அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.. தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே நடந்த இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. மாயமான இளம்பெண் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்ட செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பணியாற்றி வந்த சுபலட்சுமி, தேர்தல் வாக்களிப்பதற்காக ஊருக்கு வந்த நிலையில், ஏப்ரல் 22-ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேடுதல் வேட்டையின் முடிவில், கண்டமனூர் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதி, போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் ந...
யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காததால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டுக்கு வந்த ஜனாதிபதியின் பிரதிநிதி அதிரடியாக சில முடிவுகள் எடுத்தார். அதில் ஒன்று, அரசு பெயரில் இருக்கும் மொத்த கடனையும் கணக்கிட்டு, அதை பொதுமக்கள் எல்லோருக்கும் சமமாகப் பிரித்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை வந்தது. அதை அரசுக்கு மக்கள்தான் கட்டவேண்டும் என்றதும் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். "உங்களை ஆண்ட முந்தைய ஆட்சியாளர்கள், உங்களுக்கு கொடுத்த இலவசங்களாலும் மானியங்களாலும், பணம், பிரியாணி மற்றும் சரக்கு போன்ற செலவுகளால்தான் இந்த கடன் வந்தது. இலவசங்களையும் பணத்தையும் பிரியாணியையும் கை நீட்டி வாங்கி விட்டு அவர்களுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தது உங்கள் தவறு, நீங்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அதனால் உங்களால் வாங்கப்பட்ட கடனை நீங்கள்தான் அடைக்க வேண்டும். மீறினால், உங்கள் கடன் தொகைக்கு ஏற்ப, உங்கள் வீட்டில் உள்ள பொருட்களோ உங்கள் சொத்துக்களோ ஜப்தி செய்யப்படும்" என்றார். மக்களும் வேறு வழியின்றி கட்டத் தொடங்கினர். கட்ட மறுத்தவர்களின் சொத்துக்கள் ஜப்த...
தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றி கழகம் கூட்டணியோடு ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் அதிமுக திமுக போன்ற திராவிட கட்சிகளில் இருந்து பல முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைய தயாராக இருப்பதாக செய்திகள் வருவதோடு பலரும் ஏற்கனவே திராவிட சித்தாந்தத்தில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மக்கள் புதிய ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து பெரும் நம்பிக்கையுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்துள்ள நிலையில் ஏற்கனவே 50 ஆண்டுகாலம் மாறி மாறி ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளில் இருந்து பல தலைவர்களும் தேவைக்காக இணைந்து வருவது மக்களிடம் அதற்கு ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழக அரசியலில் வாடிக்கையாக நடப்பது என்னவென்றால் திராவிட கட்சிகளில் உள்ள சில புல்லுருவிகள் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால் எந்த கட்சிக்கு வேண்டும் எனும் தாவி தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதோடு அக்கச்சியின் முக்கிய ப...
Comments
Post a Comment