முரட்டு முட்டு கருணாஸ்
சமீபத்தில் நடிகர் கருணாஸ் அவர்கள் நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் வருமானத்தை விட்டு விட்டு அரசியலுக்கு வருவது சேவை செய்ய அல்ல இரண்டு லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என்று எண்ணத்தோடு வருகிறார் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
திரு கருணாநிதி அவர்களும் தற்போது அரசியல்வாதியாகவும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதன்படி பார்த்தால் அவர் கூறுவது எல்லா அரசியல்வாதிகளும் ஊழல் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்வது போல இருக்கிறது. திரு கருணாஸ் அவர்களும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாரா? என்பதை செய்தியாளர்கள் அவரிடம் கேட்க வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக உள்ளது.
தன் சுயநலத்திற்காக எதையும் செய்யக்கூடிய திரு கருணாஸ் அவர்கள் இப்படி பேசுவதில் வியப்பொன்றுமில்லை என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நடிகர் விஜய் பொருத்தவரை அவருக்கு அரசியல் அனுபவம் அரசியல் பற்றிய போதுமான தெளிவும் இல்லாமல் தனக்கு இருக்கும் சினிமா புகழ் பயன்படுத்தி எப்படியாவது முதலமைச்சராகி விட வேண்டும் என்ற புகழ் பதவி ஆசையிலேயே செயல்படுகிறார். அவரும் தமிழகத்திற்கு எந்தவிதமான நன்மையும் செய்ய வாய்ப்பில்லை என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.






Comments
Post a Comment