7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 8 வயது சிறுமி.🙏🙏
7 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 8 வயது சிறுமி.🙏🙏
கோவையில் மூளைச்சாவு அடைந்த 8 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்🙏
கோவையைச் சேர்ந்த திரு. சந்தோஷ் (78வது வார்டு கவுன்சிலர்) & திருமதி:சுகன்யா தம்பதியின் மகளான வெண்பா, கடந்த 23ம்தேதி மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். 😭😭
நெஞ்சம் தாங்கா துயரத்திலும், மகளின் உடல்உறுப்புகளை (சிறுநீரகம், கல்லீரல், தோல், கண்கள்) தானம் செய்ய பெற்றோர் முன்வந்த நிலையில், 7 பேருக்கு அவர் மறுவாழ்வு கொடுத்துள்ளார். 🙏🙏😭♥️
சிறுமியின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.🙏🙏🙏
"எல்லாம்வல்ல இறைவன் அக்குடும்பத்தினருக்கு இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையையும், மன அமைதியையும் அருள்புரிவானாக. அவர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம். 🙏✨"
அவர்களுக்காக பிராத்திப்போம்🙏🙏

Comments
Post a Comment