கும்பகோணத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம். வாலிபர் கைது.

 


"Class room-ஐ விட்டு வெளியே வா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"- தனது நண்பரை நம்பி கல்லூரியை விட்டு வெளியேறிய மாணவி; பேசிக்கொண்டிருந்த போதே தாலி கட்ட முயற்சி; அடுத்து நடந்த பகீர் சம்பவம்..!


வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை நைசாக அழைத்துச் சென்று, மானவர் கட்டாய தாலி கட்ட முயன்ற சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்..


தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் கும்பகோணம் அரசு பெண்கள் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். 


கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி என்ற ஊரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 21). இவர் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் படித்து வருகிறார்.


பாலகிருஷ்ணனும், அந்த கல்லூரி மாணவையும் பள்ளியில் ஒன்றாக படித்த போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 


இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு, மாணவிக்கு திருமணம் செய்து வைக்க அந்த மாணவியின் பெற்றோர் முடிவு செய்தனர். 


அதன்படி அண்மையில் தங்களது உறவுக்கார பையன் ஒருவருக்கும் தங்களது மகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்து முடித்துள்ளனர்.

திருமணம் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு அந்த மாணவி கல்லூரிக்கு சென்று வந்தார். 


இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த மாணவி படிக்கும் மகளிர் கல்லூரிக்கு தனது தாயார் உடன் சென்ற பாலகிருஷ்ணன், கல்லூரி வாசலில் நின்று கொண்டு மாணவியை செல்போன் மூலம் அழைத்து அவரை கல்லூரிக்கு வெளியே வருமாறு அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று அந்தக் கல்லூரி மாணவியும் வகுப்பறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.


கல்லூரிக்கு வெளியே வந்த மாணவியிடம், தனியாக பேச வேண்டும் எனக் கூறி கும்பகோணம் மகாமக குளத்தின அருகே உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார். 


இருவரும் அங்கு சென்று பேசிக்கொண்டு இருந்தபோது எதிர்பாராத நேரத்தில் பாலகிருஷ்ணன் தன்னிடம் இருந்து தாலியை எடுத்து கல்லூரி மாணவியின் கழுத்தில் வலுக்கட்டாயமாக கட்ட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மாணவி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன், அந்த கல்லூரி மாணவியை தா*க்கியதாக கூறப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து அந்த கல்லூரி மாணவி தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அங்கு வந்த கல்லூரி மாணவியின் உறவினர்கள் மாணவியை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 


பின்னர் இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 


பின்னர் கல்லூரி மாணவரான பாலகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ஒரு பெண்ணுக்கு விருப்பம் இல்லை என்றால் கட்டாயப்படுத்த கூடாது.


இது பற்றிய உங்க கருத்து என்ன?

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்