மருத்துவத்துறை மாஃபியாக்களை தோலுரித்த பெண் எம்பி
"இந்திய மருத்துவ துறை மிக மோசமான நிலையில் இருக்கிறது. பெரிய தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் படுக்கை கட்டணங்கள், 5 நட்சத்திர ஓட்டல் கட்டணங்களை விட அதிகமாக இருக்கிறது.
தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் இன்ஷுரன்ஸ் இருக்கிறதா என்றுதான் முதலில் கேட்கிறார்கள். இருக்கிறது என்று சொல்லி விட்டால் நீங்கள் காலி! அடுத்த நொடியே பில்லிங் மீட்டர் ஓட ஆரம்பித்து விடும். தேவையே இல்லாத காஸ்ட்லியான மருந்துகளை கொடுக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத மருத்துவ பரிசோதனைகளை எடுக்கிறார்கள். போலி பில்களை தயாரிக்கிறார்கள்.
5 நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட வேண்டிய நோயாளியை 15 நாள் கழித்துதான் அனுப்புகிறார்கள். இனியும் இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காமல், ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!!"
--- ராஜ்ய சபாவில் கர்ஜித்த ஆம் ஆத்மி கட்சி
பெண் எம்பி
ஸ்வாதி மாலிவால்
.


Comments
Post a Comment