ஆம்னி பேருந்தில் தீ விபத்து
திருநெல்வேலியில் இருந்து நேற்று இரவு 36 பயணிகளுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஒரு ஆம்னி பஸ் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் இளைப்பாற நிறுத்தப்பட்டுள்ளது.
அப்போ எதிர்பாராத விதமாக அந்த ஆம்னி பஸ் உடைய பின் டயர் வெடித்து பஸ் தீப்பிடித்து எறிய தொடங்கியது.😪😪😪
இதைப் பார்க்க அதிர்ச்சி அடைந்த பஸ் ஓட்டுநர் உள்ளே இருந்த பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினார்.
பயணிகள் அனைவரும் பஸ்ல இருந்து இறங்குனதும் பஸ் முழுக்க தீப்பரவி எரிய ஆரம்பிச்சிருக்கு.😪😪😪
இதை அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 20 நிமிடங்கள் போராடி அந்த தீயை அணைத்துள்ளனர்.
சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments
Post a Comment