பரமக்குடி அருகே போதைப் பொருட்கள் பறிமுதல்
பரமக்குடி தரைப்பாலம் அருகே இன்று காவல்துறையினர் நடத்திய சோதனையில், ஷேர் ஆட்டோவில் கடத்தப்பட்ட 8 மூடை உயர்தர போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் வெளிவந்துள்ள உண்மைகள் அதிர்ச்சியளிக்கின்றன
கைதான நபர் பரமக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் எனத் தெரியவந்துள்ளது.
ஆளுங்கட்சிப் பதவியில் இருப்பவர் என்பதால், சட்டத்தின் பிடியிலிருந்து அவரை விடுவிக்கத் திரைமறைவு வேலைகள் நடப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.
காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுகிறதா? அல்லது "திராவிட மாடல்" அரசின் அழுத்தம் சட்டத்தை வளைக்கிறதா?
தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்திற்கு, ஆளுங்கட்சியினரே உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டம் தன் கடமையைச் செய்யத் தவறினால் அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி நடந்தால், All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) மக்கள் நலன் காக்க மாபெரும் போராட்டங்களை முன்னெடுக்கும்.
நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! போதைப்பொருள் இல்லா தமிழகம் அமைய வேண்டும்!
கவனத்திற்கு:
Ramanathapuram Collector
Ramanathapuram District Police

Comments
Post a Comment