மகனை இழந்தும் பிறரை வாழ வைத்த தந்தை
நாகர்கோவில் பக்கத்தில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென இடையில் வந்த பெரியவர் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியதில் நடந்த விபத்தில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது பெற்றோர்கள் விஷாலின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
இதன் மூலம் தன் பிள்ளை 12 பேருக்கு உதவ முடியும் என்ற நோக்கில் இதை செய்ததாகவும் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதால் பலரது வாழ்வில் மாற்றம் ஏற்படும் எனவும் விஷாலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments
Post a Comment