பெண்ணை ஏமாற்றிய போலீஸ்காரர் தலைமறைவு

 


விருதுநகரில் போலீஸ்காரர் ஒருவர், கைம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவலரே, ஒரு பெண்ணின் வாழ்வைச் சீரழித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பாதிக்கப்பட்ட பெண் விருதுநகரில் தையல் கடை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த இவருக்கு, ஆமத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சுந்தர்ராஜ் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுந்தர்ராஜ், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் பழகியுள்ளார். அவ்வாறு பழகும்போது அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.


   

இதனைத் தொடர்ந்து, தன்னிடம் உள்ள ஆபாச வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து பல்வேறு கட்டங்களாக சுந்தர்ராஜ் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணின் மகளை மருத்துவப் படிப்பில் சேர்த்து விடுவதாகக் கூறியும் அவர் பெரும் தொகையை வாங்கியதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது, சுந்தர்ராஜ் அந்தப் பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததோடு, சமூக வலைதளங்களில் வீடியோவை வெளியிடுவேன் என மீண்டும் மிரட்டியுள்ளார்.


   

தாளமுடியாத துன்பத்திற்கு ஆளான அந்தப் பெண், விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரை விசாரித்த போலீஸார், சுந்தர்ராஜ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் இதே விவகாரம் தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் சுந்தர்ராஜ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


#fblifestyle #socialmedia #news

Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்