மத்திய பிரதேசத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கூட்டு பாலியல் வன்கொடுமை

 


மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம்பெண் ஒருவரை வரவழைத்து, மது புகட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வேலை தேடித்தருவதாக ஆசை வார்த்தை கூறி, இரண்டு இளம்பெண்கள் அவரை போபாலுக்கு வரவழைத்துள்ளனர்.


அங்கு அந்தப் பெண்கள் தங்கியிருந்த அறைக்குச் சென்றபோது, பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக பீயர் குடிக்க வைத்துள்ளனர். அவர் நிலைகுலைந்த தருணத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்த இரண்டு இளைஞர்களுக்கு அந்தப் பெண்ணை இரையாக்கியுள்ளனர். அந்த காமக் கொடூரன்கள் சுமார் 6 மணி நேரம் அந்தப் பெண்ணை மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

   

தொடர் சித்திரவதையால் அந்தப் பெண் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, குற்றவாளிகள் அவரை அங்கேயே கைவிட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, விரைந்து செயல்பட்ட போபால் போலீசார், சதித் திட்டம் தீட்டிய இரண்டு பெண்கள் மற்றும் வன்கொடுமையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் என மொத்தம் நான்கு பேரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நடுங்க வைக்கும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


#fblifestyle #fbpost #politics #post #BreakingNews #news #TamilNews #trendingnow #viral #viralpost

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்