ஐசிசி அதிரடி. வங்கதேசம் அதிர்ச்சி
"விளையாடினா இந்தியாவுலதான் விளையாடணும்.. இல்லன்னா நடையைக் கட்டுங்க – வங்காளதேசத்திற்கு ஐசிசி கொடுத்த 'மரண அடி
👉சமீபகாலமாக இந்தியா - வங்காளதேச கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே ஒரு பனிப்போரே நடந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக, "பாதுகாப்பு சரியில்லை, அதனால நாங்க இந்தியாவுக்கு வரமாட்டோம், எங்களோட உலகக்கோப்பை போட்டிகளை இலங்கைக்கு மாத்துங்க" என பிசிபி (BCB) அடம்பிடித்தது.
👉 ஜெய் ஷா தலைமையிலான ஐசிசி, வங்காளதேசத்தின் கோரிக்கையை அப்படியே குப்பையில் வீசியுள்ளது
☀ஐசிசி-யின் அதிரடி உத்தரவு:
👉 இடமாற்றம் கிடையாது: போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில்தான் நடக்கும்.
👉கொல்கத்தா & மும்பை: வங்காளதேசம் விளையாட வேண்டிய ஈடன் கார்டன்ஸ் மற்றும் வான்கடே மைதானங்களில் எந்த மாற்றமும் இல்லை.
👉புள்ளிகள் காலி: ஒருவேளை பாதுகாப்பு காரணங்களைக் காட்டி வராமல் போனால், அந்தப் போட்டிகளுக்கான புள்ளிகள் எதிரணிக்கு வழங்கப்படும் .
☀முஸ்தபிசூர் ரஹ்மானை ஐபிஎல்-லிருந்து விடுவித்த கோபத்தில், வங்காளதேச விளையாட்டு அமைச்சகம் கொடுத்த அழுத்தத்தால்தான் பிசிபி இப்படி ஒரு கோரிக்கையை வைத்தது. ஆனால், "இங்கே பாதுகாப்புக்கு எந்தக் குறையும் இல்லை, வரணும்னா வாங்க.. இல்லன்னா புள்ளிகளை விட்டுட்டுப் போங்க" என ஐசிசி கறாராகச் சொல்லிவிட்டது.

Comments
Post a Comment