Posts

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதியை பொருத்தவரை பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களும் கூலி தொழிலாளர்களுக்கும் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த பகுதியை பொருத்தவரை பல ஆண்டுகளாக பெரிய வளர்ச்சிகள் ஏதும் இல்லாத பகுதி ஆகும்.  இந்த தொகுதியில் நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் இழுப்பதி நிலையே காணப்பட்டது. எந்தக் கட்சி இங்கு வெற்றி பெறும் என்ற வாய்ப்பு தெளிவாக தெரியவில்லை. இருந்தாலும் நமது கருத்துக்கணிப்பின் கணக்குகளின் படி தி மு க கூட்டணி சிறிய அளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக முடிவுகள் வந்துள்ளது.  இந்த கருத்துக்கணிப்பு வேட்பாளர் தேர்வுகள் நடைபெறுவதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்பதால் அந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் பலத்தைப் பொறுத்து வாக்குகள் மாறவும் வாய்ப்பு உள்ளது.  இங்கு தமிழக வெற்றி கழகத்தின் வாக்குகள் 10 சதவீதம் அளவிற்கு நமது கருத்துக்கணிப்பில் உள்ளதாக தெரி...

நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்

Image
  நெல்லை 'பியூட்டி பார்லில் தப்பான வேலை'.. பணம் கறந்த காவலர்கள்.. பின்னாடியே நடந்த ட்விஸ்ட் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பல்வேறு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான பணிகளுக்கு பதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படித்தான் மணிமுத்தாறு பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நெல்லை மாநகரில் அழகு நிலையத்துக்குள் புகுந்து அத்துமீறி பெண்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் ஒரு மகளிர் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 26ம் தேதி மாலையில் வழக்கம்போல் பெண் ஊழியர்கள் சிலர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காவல் சீருடையில் வந்த 2 பேர் அழகு நிலையம் முன்பு நின்றுள்ளார்கள்.. அவர்களில் ஒருவர் திடீரென அழகு நிலையத்துக்குள் சென்று, அங்கிருந்த பெண் ஊழியர்களிடம், "இங்கு சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டுமெனில் ரூ.10 ஆயிரம் தர வேண...

புளியங்குடியில் மனதை வேதனை பட வைக்கும் சோக சம்பவம்

Image
  புளியங்குடியில் பள்ளி மாணவிகளின் மீது பள்ளிக்குள் விரைந்து வந்த கார் மோதியதில் சம்பவ இடத்தில் உயிர் இழப்பு பெற்றோர்கள் கொதிப்பு 5 மணி நேரம் சாலை மறியல்  பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரசு அதிகாரிகள் வராததால் சம்பவம் நடந்த பள்ளிக்கு திடீரென திரண்டு பள்ளியின் மீது கற்கள் வீசி பரபரப்பு தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிந்தாமணியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் புளியங்குடி அருகே உள்ள   நெல்கட்டும்செவல் கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி வேல்மகில் தம்பதியரின்  ஒரே மகள்   சிவயாழினி  (4) பள்ளியில் யுகேஜி  படித்து வந்தார் மாலை வீட்டிற்கு செல்வதற்கு பள்ளி மைதானத்தில் மாணவி நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த ஒரு கார் மாணவியின் மீது மோதியதாக கூறப்படுகிறது இதில் படுகாயம் அடைந்த மாணவி சிவ யாழினி உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அங்கு சிவ யாழினி பரிதாபமாக இறந்து போனார்  இந்நிலையில் மாலை நேரத்தில் பள்ளியில் பஸ்ஸில் மாணவி...

வேலை கொடுத்த முதலாளியே கொலை செய்த தொழிலாளி

Image
  ஊழியரை பணிநீக்கியதால் ஏற்பட்ட கோபத்தின் விளைவு என்ன? திருநெல்வேலி மாவட்டம் - அம்பாசமுத்திரம் அருகே இரும்புக் கம்பியால் தாக்கியதில் கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வேலையை விட்டு நீக்கிய ஆத்திரத்தில் முதலாளிக்கு எமனாக தொழிலாளி மாறியதன் பின்னணி என்ன? திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வனராஜ். 60 வயதான இவர் அதே பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வந்தார். இவரது கடையில் 26 வயதான மாயாண்டி என்பவர் ஓட்டுநராக பணியாற்றினார். மேலும், இரும்பு தரம் பிரிக்கும் வேலையிலும் மாயாண்டி ஈடுபட்டுள்ளார். அண்மைக் காலமாக ஓட்டுநரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, இவர் தனக்கு ஒத்துவர மாட்டார் என கருதிய வனராஜ் திடீரென மாயாண்டியை வேலையை விட்டு நீக்கியுள்ளார். திடீரென வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறியதால் கடை உரிமையாளர் மீது இளைஞர் கடும் கோபம் கொண்டுள்ளார். அதே கோபத்துடன் ஊருக்குள் சுத்தியவர் வனராஜைப் பார்க்கும் போதெல்லாம் அடிப்பது போன்றே முறைத்துப் பார்த்துள்ளார். திடீரென வேலையை விட்டு தூக்கியதால் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்து ச...

மனைவியை கவனிக்காத மனித மிருகம்

Image
  7-வது முறையாக கர்ப்பமான மனைவி; உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காத கணவன்; முதுகில் இருந்த காயம் புழுவிட்டு அழுகிய நிலையில், க*ருப்பையில் தொற்று பரவி பரிதாபமாக உ*யிரிழந்த சோகம்..! கேரள மாநிலம் சாவக்காடு அருகே உள்ள எடக்காழியூரில் உள்ள அவர்களது வீட்டில், பி*ரசவத்திற்குப் பிறகு ஏற்பட்ட உ*டல்நலக் குறைபாடுகளால் மனைவி உ*யிரிழந்தது தொடர்பாக, ஒரு அக்குபஞ்சர் நிபுணரை சனிக்கிழமை அன்று காவல்துறை கைது செய்தது. அவர் தனது மனைவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டதாக அப்பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். முஹ்சினா (37) என்பவரின் மரணம் தொடர்பாக கல்லுவலப்பில் இப்ராஹிம் (43) என்பவர் கைது செய்யப்பட்டார். சாவக்காடு காவல் நிலைய ஆய்வாளர் ராஜீவ் என்.எஸ்., குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து, அவர் மீது கொ*லை வழக்குப் பதிவு செய்தார். பிரசவத்திற்குப் பிந்தைய கவனிப்பின்மையே அப்பெண்ணின் மரணத்திற்குக் காரணம் என பி*ரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அப்பெண்ணின் க*ருப்பையிலிருந்து தொடங்கி உடல் முழுவதும் தொற்று ஏற்பட்டிருந்தது. அவரது முதுகில் இருந்த கா*யத்தில் புழுக்கள் நிறைந்திருந்தன. முஹ்சினா,...

அமெரிக்க வல்லரசு வீழ்ச்சியை நோக்கி செல்கிறதா?

Image
உலக நாடுகள் அனைத்தும் வல்லரசு என்று அழைக்கும் நாடு அமெரிக்கா.  அமெரிக்க நாட்டின் டாலர் மூலம் வர்த்தகம் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் அமெரிக்கா பல நாடுகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது என்றே சொல்லலாம்.  தற்போது அமெரிக்கன் அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் அவர்களின் சில தவறான நடவடிக்கைகளின் காரணமாக உலக நாடுகளின் மத்தியில் அமெரிக்காவுக்கு உள்ள மதிப்பு சற்று குறைந்து வருவதாகவே பரவலான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் அதீத ஆசையின் காரணமாக முதலில் வெனிசுலாவை கைப்பற்றினார். தற்போது இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில் ஈரானுடன் போரில் ஈடுபட்டு வருகிறார்.  ஏற்கனவே இவர் அறிவித்த டாரிஃப் கோளாறு படிகளால் அனைத்து நாடுகளும் அமெரிக்காவின் மீது வெறுப்பில் இருக்கும் நிலையில் ஈரான் மீது போர் தொடுத்து நினைத்தது போல் சுலபமாக போர் முடியாமல் ஈரானின் போர் தந்திரங்களால் தற்போது வசமாக சிக்கிக் கொண்டுள்ள டிரம்ப் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தினம் ஒரு முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்து வருகிறார்.  ஈரான் அ...

ஆலங்குளம் சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அதிகபட்ச கிராமங்களும் விவசாய தொழில்களும் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இத்தொகுதியை பொருத்தவரை பி எச் மனோஜ் பாண்டியன் அவர்கள் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு கட்சித் தாவியது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் திமுக கட்சியிலும் உட்கட்சி பூசல்களுக்கு வழி வகுத்துள்ளது. நீங்க திமுகவில் ஏற்கனவே பூங்கோதை ஆலடி அருணா போன்ற பிரபல வேட்பாளர்கள் உள்ள நிலையில் திரு பி எச் பாண்டியனின் திமுக வருகை என்பது அவர்களுக்கு போட்டியாக உருவாகும் என்பதில் உட்க்கட்சியின் மேலே பூசல்களை அதிகரித்துள்ளது. இதனால் திமுகவில் இந்த முறை யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக உட்க கட்சியினரை செயல்படக்கூடிய சூழ்நிலை உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் திமுகவின் மீது உள்ள அதிருப்தி மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு கனிம வள கடத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் திமுக தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறத...

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்  சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு ராஜா அவர்களுக்கு உட்க் கட்சிக்குள்ளேயே கோஷ்டி பூசல்கள் உள்ளது. ஆனாலும் சங்கரன்கோவில் பொறுத்தவரை திமுக வலுவான நிலையில் உள்ளது. ஆனாலும் இந்த சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை இரு கட்சிகளிலும் நிற்கும் வேட்பாளர்களின் பலமே முக்கியமானது. அது மட்டுமல்லாது கடைசி நேர தேர்தல் யுக்திகளும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்ற நிலையில் உள்ளது.  இத்தொகுதியைப் பொறுத்தவரை யார் வெற்றி பெற்றாலும் பெரிய அளவில் வாக்கு வித்தியாசம் இல்லாமல் இழுபறி நிலையில் இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.  தற்போதைய சூழ்நிலையில் இத்தொகுதியில் திமுக வலுவான நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.

கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி கருத்துக்கணிப்பு

Image
  நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்  கடையநல்லூர் தொகுதியை பொருத்தவரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் திரு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிற்கு நல்ல  பெயர் உள்ளது. இவர் தொகுதி மக்கள் அனைவரையும் அரவணைத்து செல்லும் விதமாக செயல்படுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் இவரால் சில வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் மக்கள் அரசியல் காரணங்களால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை என்பதை புரிந்து கொண்டுள்ளனர். மேலும் கனிம வளம் கொள்ளைக்கு எதிராக இவர் குரல் கொடுத்ததும் போராடியதும் மக்கள் ஆதரவு இவர் பக்கம் வந்துள்ளது.  கடையநல்லூர் தொகுதி இஸ்லாமிய பெரும்பான்மையாக வாழும் பகுதியாக இருந்தாலும் திமுக இஸ்லாமியர்களுக்கு ஆன அரசியல் சக்தி என்று பிரச்சாரங்கள் வைக்கப்பட்டாலும் இந்த தொகுதியை பொருத்தவரை திரு கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பாவிற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக...

தென்காசி சட்டமன்றத் தொகுதி கருத்துக்கணிப்பு முடிவுகள்

Image
         நமது பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் பாரத் கல்விக் குழுமத்துடனும் நங்கூரம் மாத இதழ்டனும் இணைந்து நடத்திய சட்டமன்றத் தேர்தல் 2026 கருத்துக்கணிப்பு முடிவுகள்      பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் சார்பாக நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தல் 2026 தென்காசி மாவட்டத்திற்கான கருத்துக்கணிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவுகளில் முதல் தொகுதியாக தென்காசி தொகுதி முடிவு வெளியிடப்படுகிறது. தென்காசி பகுதியில் பொறுத்த வரை தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு பழனி நாடார் அவர்களுக்கு மக்கள் மத்தியில் சிறிய அளவில் அதிருப்திகள் உள்ளது தெரிய வருகிறது. சில இடங்களில் அவரிடமே நேரடியாக எதிர்ப்புகளை தெரிவித்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. தென்காசி பெரும்பாலும் அதிமுக திமுக கட்சிகள் இருவராலும் பலமுறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியாகவே இருந்துள்ளது.  தற்போது இந்த தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவிற்கு அல்லது வேறு ஏதேனும் கூட்டணி கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படலாம் என்று பரவலாக கருத்த...

இதற்கெல்லாம் கூட தற்கொலை

Image
மூன்று நாள் ஆன சாம்பாரை கணவனுக்கு பரிமாறிய மனைவி; கோபத்தில் கணவர் திட்டியதால் மனைவி எடுத்த விபரீத முடிவு..!  இ*றந்தவர் காவ்யா, ஒரு இல்லத்தரசி மற்றும் நான்கு வயது மகனின் தாய். அவர் நெலமங்கலா அருகே உள்ள ஜெனசனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ரங்கசாமியுடன் 5 ஆண்டுகளுக்கு முன் மணந்தார். சம்பவம் நடந்த அன்று மூன்று நாட்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்ட சாம்பாரை காவ்யா தனது கணவருக்கு பரிமாறியதால் தம்பதியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  முதல் இரண்டு நாட்களில் அதே சாம்பார் பரிமாறப்பட்டபோது ரங்கசாமி ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றாலும், மூன்றாவது நாளில் புதிய உணவு தயாரிக்காததற்காக அவரைத் திட்டினார், இதனால் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கலக்கமடைந்த காவ்யா மார்ச் 3 ஆம் தேதி மாத்திரையை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் அவளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,  பின்னர் அன்றிரவு மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மருத்துவ முயற்சிகள் இருந்தபோதிலும், சிகிச்...

பேருந்து ஆட்டோ மோதல். கர்ப்பிணி பலி

Image
  நெல்லை; தருவை அருகே அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 மாத கர்ப்பிணி பெண் சையது அலி பாத்திமா உயிரிழப்பு படுகாயமடைந்த அவரது கணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அரசு மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை #Nellai #Accident #Auto #Bus #ThanthiTV

தென்காசி காய்கறி மார்க்கெட் புது பொலிவுடன்

Image
  தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாய்க்கால் பாலம் அருகில் உள்ள தென்காசி தினசரி காய்கறி மார்க்கெட் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்து புதிய தென்காசி காய்கறி மார்க்கெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. #தென்காசி #காய்கறிமார்க்கெட் 

பெற்ற மகனை கொன்ற தந்தை

Image
 பைக் பழுதுநீக்க ரூ.70,000 கேட்டு மிரட்டிய மகன்... கிரைண்டர் கல்லை தலையில் போட்டு கொன்ற தந்தை... Tuticorin - பைக் பழுது நீக்க 70 ஆயிரம் ரூபாய் கேட்டு பெற்றோரை அடித்து தாக்கிய இளைஞரின் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இந்த தம்பதிக்கு 22 வயதில் கனகராஜ் மற்றும் பாலபாரதி என்ற இரண்டு மகன்கள். பாலச்சந்திரன் தொழில் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு, சென்னை பூந்தமல்லி அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு மிக்சர் பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் கனகராஜ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளார். போதையில் அடிக்கடி சண்டை போட்டு ஊர் வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். இதனால், அவரை சொந்த ஊரான படர்ந்தபுளி கிராமத்திற்கே குடும்பத்தினர் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு, தந்தை வழி பாட்டியான மாடத்தி அம்மாளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 13ஆம் தேதி தனது பைக்கை பழுது நீக்க பணம் கேட்டு பாட்டியி...

மருத்துவரின் மட்டமான சபல புத்தி

Image
  "ஹோட்டலில் ரூம் எடுத்து பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்" - நான்காம் ஆண்டு மாணவிக்கு நடந்த சோகம். நீலகிரியில் பரபரப்பு! நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் 45 வயதுடைய ஓம்பிரகாஷ். இவர் பணியாற்றும் மருத்துவமனையில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவ படிப்பு பயின்று வரும் நிலையில் இவரிடம் பயிற்சி எடுக்கும் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் குறைந்த மதிப்பெண்கள் பெற்று வந்திருக்கிறார். இதனை கவனித்த ஓம்பிரகாஷ் மாணவியிடம் இது குறித்து கேட்டு கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது மாணவி தன்னால் படிப்பில் ஆர்வம் செலுத்த முடியவில்லை என்றும் தனக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த ஓம்பிரகாஷ் மாணவியிடம் அவரது செல்போன் எண்ணை பெற்று தினமும் மாணவியிடம் அவரது மன அழுத்தத்திற்கு சிகிச்சைஅளிப்பதாக கூறி பேசி வந்திருக்கிறார். பின்னர் மாணவிக்கு உனக்கு கவுன்சிலிங் செய்ய உள்ளதாகவும், அதற்கு மேலும் மூன்று மருத்துவர்கள் உதக...