Posts

இன்றைய18/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Image
  அகமதாபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் சுமார் 11 மாதங்களாக விற்பனையாளராகப் பணியாற்றி வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்பவர், தன் முதலாளியின் நம்பிக்கையைச் சிதைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில், உரிமையாளர் தனக்கு அவசர வேலை நிமித்தமாக விடுப்பு அளித்துள்ளதாக சக ஊழியர்களிடம் பொய் கூறிவிட்டு அவர் கடையிலிருந்து வெளியேறியுள்ளார். அன்று மாலை வழக்கமான கணக்கெடுப்பின் போது ஒரு தங்க பிரேஸ்லெட் காணாமல் போனதைக் கவனித்த ஊழியர்கள், உரிமையாளர் தர்ஷன்பாயிடம் இதுகுறித்து விசாரித்தபோதுதான் ஹர்ஷிதா யாரிடமும் சொல்லாமல் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் இருந்த நகைகளை முழுமையாகச் சோதனை செய்தபோது, சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், தாலிகள், பதக்கங்கள், காதணிகள் மற்றும் கைக்கடிகாரங்கள் எனப் பெருமளவிலான ஆபரணங்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உடனடியாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹர்ஷிதா நைசாக நகைகளைத் தனது சீருடைக்குள் மற...

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

Image
  நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் 2026 இல் திமுக தனது ஆட்சியை தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியிடம்  இழந்து விட்டது.  அது மட்டுமல்லாமல் திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியிலேயே தோல்வியை தழுவினார். மேலும் பல முக்கிய அமைச்சர்களும் தோல்வியை தழுவினர்.  இது போன்ற ஒரு பெரிய பின்னடைவுக்கு காரணம்  1 திமுக தனது ஆட்சிக்காலத்தில் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு பொற்கால ஆட்சியை கொடுத்தது போல மாய உலகத்தில் இருந்தது. 2 தனது ஆட்சியைப் பற்றிய விமர்சனங்கள் அல்லது எதிர் கருத்துக்கள் யார் கூறினாலும் கூறினாலும் அல்லது சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வந்தாலும் அவர்கள் மீது வழக்கு தொடுத்தல் அவர்களுக்கு இடையூறு செய்தல் போன்ற வேலைகளிலேயே ஈடுபட்டு வந்தது. மாறாக அவர்கள் கூறும் குறைகளை சரி செய்யும் முயற்சியில் ஈடுபடவே இல்லை. 3 மேலும் திமுகவில் உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் வரை வாக்களித்த மக்களை துளியும் மதிக்காமல் மரியாதைக்குரியுடனும் ஏளனத்துடனும் ஒரு மன்னர் மனநிலையிலேயே அணுகி வந்தனர். 4 த...

இன்றைய11/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

இன்றைய10/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

Image
  நடந்து முடிந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பலரும் எதிர்பார்க்காத ஆச்சரியமான முடிவுகளை மக்கள் கொடுத்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் போது முன்னாள் அரசு கொடுத்த உதவித்தொகை இலவசங்கள் போன்ற எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும், மேலும் வாக்குக்கு பணம் பெற்றுக் கொண்டு பலரும் மாற்றி வாக்களித்துள்ளதையும் உறுதிப்படுத்துகிறது.  இதன் மூலம் அரசியல்வாதிகள் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இனி வரும் காலங்களில் நீங்கள் வாக்குச் செலுத்த பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது என்பதை தெரிவித்துள்ளனர்.  அது மட்டுமல்லாமல் ஆட்சி முடியும் தருவாயில் நீங்கள் மக்களை ஏமாற்ற கொடுக்கும் சிறப்பு உதவித்தொகைகள், விழாக்கால தொகுப்புகள், மற்றும் உதவித்தொகைகள் போன்ற எதுவும் வாக்குகளைப் பெற்றுத் தராது என்பதை நிரூபித்துள்ளனர்.  அதற்கு பதிலாக ஐந்தாண்டுகளும் சிறப்பான சட்டம் ஒழுங்குடன், தரமான உட்கட்டமைப்பு, ஊழலற்ற ஆட்சி, சிறந்த மருத்துவ வசதி, சிறந்த பொதுப் போக்குவரத்து, சிறப்பான தரமான கல்வி முறை இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்தால...

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

Image
  இனி எங்கும் இப்படிதான்  ரொம்ப குஷ்டம் 😀😀 ராமநாதபுரம் அரண்மனைப் பகுதியில் இருந்து **இன்னோவா (Innova)** காரில் ஊர்வலமாகப் புறப்பட்ட 12 விஜய் ரசிகர்கள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர்.  நீதிமன்றம்** மற்றும் **மாவட்ட ஆட்சியர் அலுவலகம்** போன்ற முக்கிய அரசு அலுவலகங்கள் முன்பாகக் கத்திக் கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.  * அனுமதியின்றி ஊர்வலம் சென்றது மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தது போன்ற காரணங்களால் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரகளையில் ஈடுபட்ட 12 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். தற்போது அவர்கள் **கேணிக்கரை காவல் நிலையத்தில்** வைக்கப்பட்டு, விசாரணை  வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. > **குறிப்பு:** பொது இடங்களில் இது போன்ற செயல்பாடுகள் சட்டப்படி குற்றமாகும். குறிப்பாக நீதிமன்றம் மற்றும் கலெக்டர் அலுவலகம் போன்ற 'அமைதி மண்டலங்களில்' (Silence Zones) ரகளை செய்வது கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு வழ...

அதிமுக திமுக கூட்டணி பற்றி ஆலோசனை. உதயநிதி காரணமா?

Image
  தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் 2026ல் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால் அரசியல் சூழ்நிலையில் பெரும் குழப்பங்கள் நிலவி வருகிறது.  தமிழக வெற்றி கழகம் 107 இடங்களில் இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் அவர்களிடம் இல்லாத காரணத்தினால் அவர்களால் அரசு அமைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மேலும் அவர்களிடம் கூட்டணி சேரவும் அனைத்து கட்சிகளும் தயக்கம் காட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே அவர்களுக்கு ஆதரவளித்துள்ளது.  இந்த நிலையில் வெட்டிக் கழகத்தின் தலைவர் திரு விஜய் அவர்கள் ஆட்சி அமைத்தால் அது திமுகவில் வளர்ந்து வரும் உதயநிதிக்கு பின்னாலில் பெரும் சவாலாக அமையும். விஜய் தனது கட்சியையும், அரசியல் இருப்பையும் பலப்படுத்திக் கொண்டால் உதயநிதிக்கு பின்னடைவாக அமையும் என்பதால் திமுக ஒரு புதிய ராஜதந்திரத்தை கையாள முடிவு செய்துள்ளது.  விஜய் ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த அதிமுக ஆட்சியை அமைத்து விட்டால் விஜயின் வளர்ச்சியை தடுத்து விடலாம் என்று கணக்குப் போட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  இதன் மூல...

புதிய தமிழக அரசு சந்திக்கப் போகும் சவால்கள்

Image
  தற்போது 2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் உள்ளது.  இந்த நிலையில் புதிய தமிழக அரசு அமைந்த உடன் அந்த அரசு சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? என்பது பற்றி பார்ப்போம். 1 தமிழக அரசு தற்போது 10 லட்சம் கோடி வரை கடன் சுமையில் சிக்கித் தவித்து வருவது முதல் பிரச்சனையாக இருக்கும். 2 தற்போதைய புதிய அரசு அமைக்கவிருக்கும் தமிழக வெற்றி கழகம் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரம் என்பது அரசிடம் தற்போது இல்லாததால் பல வகையில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதற்கும். 3 தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தில் மூலம் மது விற்பனை நடைபெறுவதில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் அதிகமாக விற்பதாக தற்போது முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் திரு விஜய் அவர்களே கூறியுள்ள நிலையில் அதனை சரி செய்வதும் சவாலானதாக இருக்கும். 4 தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் போதை பழக்கங்களையும் அதனால் ஏற்படும் வன்முறைகள் பாலியல் குற்றங்கள் போன்றவற்றை தடுப்பதும் மிகுந்த சவாலானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. 5 இது எல்லாம் விட முக்கியமானது தமிழக வெற்றி கழகத்தின் தொண...

போலி அடையாளத்துடன் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்

Image
  அதாவது மக்களே…! குஜராத்தின் அகமதாபாத்தில், வந்தே பாரத் ரயிலில் ஒரு மடிக்கணினி (laptop) திருடப்பட்டது…! ரயில்வே போலீசார் விசாரணையைத் தொடங்கியபோது, ​​மடிக்கணினி பையை எடுத்துக்கொண்டு ஒருவன் நடந்து செல்வது சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவாகியிருந்தது…! சீட் முன்பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட கைபேசி எண்ணை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். விரைவில், அந்தச் சந்தேக பேர்வழி இருப்பிடம் டெல்லியில் இருப்பது கண்டறியப்பட்டது…! ஒரு போலீஸ் குழு உடனடியாக டெல்லிக்கு விரைந்தது; அங்குள்ள உள்ளூர் போலீசாரின் உதவியுடன், 'ஹர்ஷித் சௌத்ரி' என்ற பெயரில் ஒருவன் மது அருந்திக்கொண்டிருந்த ஒரு விடுதியை (hotel) அவர்கள் அடைந்தனர்…! போலீசார் அவனைக் கைது செய்ய முயன்றபோது, ​​தான் ராணுவத்தில் 'மேஜர்' (Major) அந்தஸ்தில் இருப்பதாகவும், அந்தப் பை தவறுதலாகத் தன்னிடம் வந்துவிட்டதாகவும் அவன் கூறினான்…! இதைக் கேட்டதும் போலீசார் ஒரு கணம் தயங்கினர்; ஆனால், சிசிடிவி காட்சிகளில் அவர் திருட்டில் ஈடுபட்டது தெளிவாகத் தெரிந்தது. விசாரணையின்போது, ​​அவன் ஒரு போலி ராணுவ அடையாள அட்டையைச் சமர்ப்பித்ததுடன், ...

தமிழக வெற்றிக்கழக வெற்றியாளர்கள் கவனத்திற்கு

Image
  தமிழக வெற்றிக்கழக வெற்றியாளர்கள் கவனத்திற்கு  தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் ஏகோபித்த வரவேற்பு பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றம் என்பது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதில் சந்தேகம் இல்லை. இந்தத் தேர்தலின் மூலம் பொதுமக்கள் அனைவரும் உணர்த்துவது என்னவென்றால் ஊழல் இல்லாத, போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத, சிறப்பான சட்டம் ஒழுங்குடன் கூடிய ஒரு நல்ல ஆட்சியை எதிர்பார்த்தே மக்கள் மாற்றத்தை விரும்பி திராவிட சித்தாந்தம் கொண்ட இரு பெரும் அரசியல் இயக்கங்கள் மீது இல்லாத ஒரு நம்பிக்கையை தமிழக வெற்றி கழகத்தின் மீது வைத்து தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.  மேலும் இலவசங்கள், வாக்கு செலுத்த பணம் போன்ற பல மக்களை வாக்களிக்க தூண்டும் தூண்டில்களில் எதுவும் சிக்காமல் நல்லாட்சி ஒன்றே நமக்குத் தேவை என்பதை உணர்ந்து பெருவாரியான மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது இந்த தேர்தலில்  தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. ...

ஓட்டு போட வந்தவர் மாயம்

Image
  தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுபலட்சுமி கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 22ம் தேதி ஓட்டுப்போடுவதற்காக சொந்த ஊரான கண்டமனூருக்கு வந்தார. அவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் எங்கு போனார் என்றே தெரியவில்லை.. தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே நடந்த இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. மாயமான இளம்பெண் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்ட செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பணியாற்றி வந்த சுபலட்சுமி, தேர்தல் வாக்களிப்பதற்காக ஊருக்கு வந்த நிலையில், ஏப்ரல் 22-ம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தேடுதல் வேட்டையின் முடிவில், கண்டமனூர் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சுபலட்சுமி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதி, போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் ந...

இன்றைய03/05/2026 செய்தி துணுக்குகள்

Image
 

கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் - ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம்

Image
  *கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் - ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம்*  கோவையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மூப்பன்பட்டி விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது  சாலையில் நின்று கொண்டிருந்த  சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பெயரின் முகப்பு பகுதி முழுவதுமாக சிதைந்து சேதமடைந்தது. இதில் ஆம்னி டிரைவர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன், எட்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.  காயமடைந்த ஆம்னி பேருந்து டிரைவர் பேருந்து முன் பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தார். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று  சிக்கி தவித்த டிரைவரை மீட்டனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ...

போதை பொருள் விற்பனை வட மாநில இளம்பெண் கைது

Image
  போதை பொருள் விற்பனை  வட மாநில இளம்பெண் கைது ♦️ #கேரளம் மாநிலம் கொச்சிக்கு வந்த தாஷ்மி, இளைஞர்களையும் கல்லூரி மாணவர்களையும் குறிவைத்தார். செட்டிகண்டம் பகுதியில் பிரவம் கலால் வரிச் சரகக் குழுவினர் நடத்திய சோதனையின் போது, விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட 9.11 கிராம் எம்.டி.எம்.ஏ என்ற கொடிய போதைப்பொருளுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்டின் பானே தாலுக்காவைச் சேர்ந்த மஹ்தோ முண்டா தாஷ்மி நாகினேயா (23/26) என்பவர், பிரவம் சரக ஆய்வாளர் விஜயராஷ்மி வி. தலைமையில் கைது செய்யப்பட்டார். ♦️கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதால், கல்லூரி வளாகத்தில் இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக போதைப் பொருளைக் கொண்டு வந்ததாக விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டதாக கலால் வரி அதிகாரிகள் தெரிவித்தனர். 5 கிராம் கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு கைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்

Image
  தங்கப்பதக்கம் வாங்கிய பெண்ணுடன் நிச்சயதார்த்தம்..   கடைசியில் "அதை" சொன்ன மாப்பிள்ளை!  ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம், சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது படிப்பு, அந்தஸ்து என அனைத்தும் இருந்தும், ஒரு நபரின் பொறுப்பற்ற வார்த்தைகளால் ஒரு உயர்கல்வி மாணவி தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. அப்படி என்னதான் நடந்தது? இங்கே சுருக்கமாக பார்ப்போம். கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான ரெஹானா.. நன்றாக படிக்கக்கூடியவர்.. முதுகலைப் படிப்பில் தங்கப் பதக்கம் வென்று, ஆளுநரின் கைகளாலேயே கௌரவிக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவருக்கும், பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றி வரும் ஷாஜகான் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கைநிறையச் சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை, தங்கப் பதக்கம் வென்ற மணமகள் என 12 வீட்டாருமே இந்தத் திருமணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கி இருந்தனர். நிச்சயதார்த்தமும் முடிந்தது.. இதனால் ஆரம்ப நாட்க...

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Image
 🚨 கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஸ்பாவில் வேலை பார்த்து வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ருமா சர்ணாபா (21), ரிமா ஷேக் (21) ஆகிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டபூர்வமான பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கி, மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் போல போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தி வேலை பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல… ⚠️ இது நம் நாட்டின் பாதுகாப்புக்கும், சட்ட அமைப்புக்கும் நேரடியான சவால்! 👉 சட்டவிரோத குடியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தால்: - வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் - உள்ளூர் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் - நாட்டின் பொருளாதாரத்திற்கே கேடு விளையும் அரசாங்கம் இதை மிகக் கடுமையாக எடுத்துக்கொண்டு, சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 🇮🇳 நம் நாட்டின் பாதுகாப்பு முதன்மை! சட்டம் எல்லோருக்கும் ஒன்றே — அதை மீறினால் தண்டனை உறுதி. ✍️ #Sivakpm  #IllegalImmigration #Kerala #LawAndOrder #IndiaFirst

இந்தியாவில் இருந்து கொண்டு முக்கிய தலைவர்களை கொ*ல்ல பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இரு துரோகிகள் போலீசாரால் கைது..!

Image
 இந்தியாவில் இருந்து கொண்டு முக்கிய தலைவர்களை கொ*ல்ல பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இரு துரோகிகள் போலீசாரால் கைது..! உத்தர பிரதேசத்தில், பாகிஸ்தான் உளவு அமைப்பிற்காக வேலை செய்ததாக மீரட்டைச் சேர்ந்த துஷார் சௌஹான் என்ற ஹிஸ்புல்லா அலி கான் மற்றும் டெல்லியைச் சேர்ந்த சமீர் கான் என்ற இருவரை ப*யங்கரவா*த எதிர்ப்புப் படை (ATS) கைது செய்தது துஷார் மற்றும் சமீரும், பாகிஸ்தான் தீ*விரவா*த இயக்கத்தை சேர்ந்த ஷாசாத் பட்டி மற்றும் அபித் ஆகியோருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இளைஞர்களைத் தங்கள் வலையமைப்பில் சேர்ப்பதற்காக ஈர்க்கும் பணி அந்த இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டதாகவும், இதற்காக அவர்களுக்குப் பெரும் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் தங்களது பணிகள் முடிந்த பிறகு, ஒரு வளைகுடா நாடு வழியாக பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் துஷார் மற்றும் சமீருக்கு உறுதியளிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​முக்கிய இந்துத் தலைவர்களை ஒழிக்கும் நோக்கத்துடனும், மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் நோக்க...

சவுதிக்கு தப்பிச் சென்ற தீவிரவாதியை பிடிக்க முயற்சி

Image
 சவுதிக்கு தப்பிச் சென்ற தீவிரவாதியை பிடிக்க முயற்சி!! பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியைச் சேர்ந்த உமர் ஹாரிஸ், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் முக்கிய நபராக கருதப்படுகிறார் 2012-ல் ஜம்மு காஷ்மீருக்குள் ஊடுருவிய இவர், லஷ்கர் அமைப்புக்கு ஆள் சேர்த்தது, நிதி திரட்டி வந்தார். இது தொடர்பாக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், காவல் துறையினரின் பிடியில் சிக்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் செல்வதால் இவருக்கு கர்கோஷ் (முயல்) என்ற புனைப் பெயர் உள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் தான் அவர் போலி பாஸ்போர்ட் மூலம் சவுதி அரேபியா சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை இந்தியாவுக்கு அழைத்துவர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காஷ்மீரில் வசித்த உமர், லஷ்கர் அமைப்பின் ஆதரவாளர் ஒருவரின் மகளை, சஜ்ஜாத் என்ற போலி அடையாளத்துடன் ஜெய்ப்பூரில் திருமணம் செய்துள்ளார். இந்தத் திருமண ஆவணங்களை வைத்து போலியாக இந்திய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். ஸ்ரீநகர் போலீஸார் நடத்திய விசாரணை தகவல்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் பகிரப்பட்டுள்ளன. இது குற...

தென்காசியில் காணாமல் போன நிட்சேப நதி

Image
  தென்காசியில் காந்தியின் அஸ்தியை கரைத்த நிட்சேப நதி காணாமல் போன அவலம்- சமூக பொதுநல இயக்கம் குற்றச்சாட்டு- சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது- தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் நிட்சேப நதி தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 11/2 லட்சத்திற்கும் மேலான விவசாய விளைநிலங்கள் செழிக்க உதவியது. கரிவலம் வந்தநல்லூர் வழியாக வைப்பாறை அடைந்து கடலில் கலக்கும் இந்நதி கங்கை நதியினைப் போல புனித நதியாக கருதப்படுகிறது. இதனால் மகாத்மா காந்தியின் அஸ்தியை 7 இடங்களில் கரைக்கப்பட்ட நிலையில் நிட்சேப நதியிலும் கரைக்கப்பட்டது. இந்நதியில் காந்தியின் அஸ்தி 12.2.1948ல் கரைக்கப்பட்டது. இதற்கான நினைவு கல்வெட்டு வினோபாஜி அவர்களால் 4.4.1957 ல் இங்கு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள செண்பகவல்லி அணைக்கட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக உடைந்தது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் குறிப்பிட்ட அணை சீர்செய்யப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் பாதிக்கப்பட்டது. இதன் பின் இதுவரையில் சீரமைப்பு பணிகள்...