Posts

தமிழ்நாட்டில் சட்ட விரோத ஊடுருவல்

Image
  "என்ன கொடுமை இது"- சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து போலி பாஸ்போர்ட், ஆதார் அட்டை வாங்கி சென்னை ஆயிரம்விளக்கில் பல ஆண்டுகளாக பிரியாணி கடை நடத்தி வந்த வங்கதேசத்தை சேர்ந்தவன் கைது..! சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி (FRRO) அதிகாரிகள், வங்காளதேச குடிமகனான முகமது ஹருன் மாய் (44) என்பவனை நகர காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.  அவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பெறப்பட்ட இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்து, வங்காளதேச குடியுரிமையை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவன் 1999 ஆம் ஆண்டு திரிபுரா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து, பின்னர் வேலைக்காக இந்தியாவுக்கு அடிக்கடி பயணம் செய்ததாக தெரியவந்தது. 2022 ஆம் ஆண்டில், அவர் தனது வங்காளதேச பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு வந்து, நகரத்தில் உள்ள ஆயிரம் விளக்குகளில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பணிபுரிந்தான்.  தற்போது அவன் அதே பகுதியில் ஒரு பிரியாணி கடைக்கு முதலாளி ஆகிவிட்டான் இறுதியில் தனது வங்காளதேச குடியுரிமையை மறைத்து ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையைப் பெற்றான். மேலும் இந்...

தென்காசியில் வேலை வாய்ப்பு முகாம்

Image
 📢 வேலைவாய்ப்புச் செய்தி: தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு! 💼✨ தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது! 🎯 📍 இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி. 🗓️ தேதி: 13-03-2026 (வெள்ளிக்கிழமை) ⏰ நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை 🎓 கல்வித்தகுதி:  * 10-ஆம் வகுப்பு  * 12-ஆம் வகுப்பு (+2)  * ITI  * டிப்ளமோ (Diploma)  * பட்டப்படிப்பு (Any Degree) ✅ முக்கிய விவரங்கள்: இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். 📢 உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! யாராவது ஒருவருக்கு இந்த வேலைவாய்ப்பு பயனுள்ளதாக இருக்கும். 🙏 #Tenkasi #JobFair #TenkasiJobs #Employment #CareerOpportunity #TamilNaduJobs #PrivateSectorJobs #DistrictEmploymentOffi...

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே விபத்து

Image
 #திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே விபத்து: #மூன்று பேர் உயிரி**ழப்பு: #உடுமலைபேட்டைஅருகே உள்ள தாந்தோணி பகுதியில் நேற்றிரவு (05/02/2026)சுமார் 7.30 மணி அளவில் டூரிஸ்ட் வேனும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விப**த்து ஏற்பட்டது. இதில் தாந்தோணியைச் சார்ந்த துரைசாமி (28), அவரது மனைவி உஷாராணி (25), மகன் துருவன் (5) ஆகியோர் சம்பவ இடத்திலே யே உ**யிரி**ழந்தனர்.😭😭 இ.றந்த*வர்களின் உடல் மீட்கப்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் உடற் கூறு ஆய்விற்காக வைக்கப் பட்டுள்ளது.  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் ஐந்து வயது மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

கேரளாவில் நடந்த சினிமா பானி கொள்ளை

Image
  ஸ்பாவிலிருந்து கொட்டேஷன் கும்பலாக? திருச்சூரை அதிர்ச்சியடையச் செய்த சினிமா பாணி கொள்ளையும், சில மணி நேரத்தில் நடந்த பரபரப்பான கைது! திருச்சூர் கணிமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்த சம்பவங்கள் யாரையும் அதிர்ச்சியடையச் செய்கின்றன. பட்டப்பகலில் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல், 57 வயதான ஸ்பா உரிமையாளரை கட்டிப்போட்டு மற்ற பணியாளர்களை ஒரு அறையில் பூட்டி வைத்தது. பெப்பர் ஸ்ப்ரேயும் ஆயுதங்களும் கொண்டு வந்த இந்த ‘லேடி காங்கில்’ முன்னாள் பணியாளரான ஆஞ்சலீனாவும் இருந்ததாக கூறப்படுகிறது. புல்லட் மோட்டார் சைக்கிளிலும் கர்நாடக பதிவு கொண்ட கருப்பு காரிலும் வந்த இந்த கும்பல் தங்க நகைகள், பணம் மற்றும் மொபைல் போன்களை கொள்ளையடித்தது. அலமாரியில் வைத்திருந்த ₹42,000 பணத்துடன், வீட்டு உரிமையாளரின் Google Pay மூலம் மேலும் ₹20,000 பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பினர். ஆனால் இந்த கும்பலின் தப்பிப்புப் பயணம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை! தகவல் கிடைத்தவுடன் உதவி கமிஷனர் சஷிதரன் தலைமையில் போலீஸ் வலை விரித்தது. மாவட்டம் முழுவதும் ரோந்து மற்றும் வாகன சோதனைகள் கடுமையாக்கப்பட்டதால், திருச்சூர் சிட்டி போல...

பெண்ணை ஏமாற்றிய போலீஸ்காரர் தலைமறைவு

Image
  விருதுநகரில் போலீஸ்காரர் ஒருவர், கைம்பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ள அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய காவலரே, ஒரு பெண்ணின் வாழ்வைச் சீரழித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாதிக்கப்பட்ட பெண் விருதுநகரில் தையல் கடை மற்றும் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த இவருக்கு, ஆமத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சுந்தர்ராஜ் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட சுந்தர்ராஜ், அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவருடன் பழகியுள்ளார். அவ்வாறு பழகும்போது அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.     இதனைத் தொடர்ந்து, தன்னிடம் உள்ள ஆபாச வீடியோக்களை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டி, அந்தப் பெண்ணிடமிருந்து பல்வேறு கட்டங்களாக சுந்தர்ராஜ் சுமார் 8...

நெல்லை தாமிரபரணி ஆற்றின் பரிதாப நிலை

Image
  #தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க மத்திய, மாநில அரசுகளின் கோடிக்கணக்கான நிதியில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஆனால் பாதாள சாக்கடை மூலம் #ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லவேண்டிய சாக்கடை நீர் மாநகராட்சியினரால் நேரடியாக #மணிமூர்த்திஸ்வரம் அருகே தாமிரபரணி ஆற்றில் விடுகின்றனர்.  இது தற்போது எடுக்கப்பட்ட காட்சிகள்..!! அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.!

போலி பாஸ்போர்ட் பெண் கைது

Image
 சென்னை ஏர்போர்ட்டில் நிழல் மனிதன்: பாஸ்போர்ட் பெண்ணை வட்டமிட்ட கழுகு கண்! வெளிச்சத்துக்கு வந்த உண்மை சென்னை ஏர்போர்ட்டில் நேற்று ஒரு அதிரடி சம்பவம் நடந்தது. வெளிநாட்டு நபர்கள் சிலர் தங்களது உண்மையான அடையாளத்தை மறைத்து, போலி ஆவணங்கள் மூலம் இந்தியக் குடியுரிமை பெற முயன்றது அம்பலமானது. இது தொடர்பாக விமான நிலைய அதிகாரி கொடுத்த புகாரை அடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலி பாஸ்போர்ட் தடுப்புப் பிரிவு போலீசார் களத்தில் இறங்கி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்... இதில்தான் அந்த பெண் சிக்கி உள்ளார்..!! சென்னை விமான நிலையத்தில், அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போது இலங்கை செல்லும் விமானத்தில் பயணிக்க சென்னை விமான நிலையத்துக்கு வந்த பெண் ஒருவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள போலி பாஸ்போர்ட் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். அப்போது, அந்த பெண்ணின் பெயர் பேபி லோனா (48). இலங்கை நாட்டுக் குடியுரிமை பெற்றவர். இந்தியரான முஸ்தாக்அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பேபி லோனாவின் பெற்றோர்கள் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள்....

இன்றைய06/03/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

இன்றைய05/03/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

மகனை இழந்தும் பிறரை வாழ வைத்த தந்தை

Image
  நாகர்கோவில் பக்கத்தில் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென இடையில் வந்த பெரியவர் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியதில் நடந்த விபத்தில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரது பெற்றோர்கள் விஷாலின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இதன் மூலம் தன் பிள்ளை 12 பேருக்கு உதவ முடியும் என்ற நோக்கில் இதை செய்ததாகவும் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வதால் பலரது வாழ்வில் மாற்றம் ஏற்படும் எனவும் விஷாலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்றைய04/03/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

தமிழ்நாட்டின் முதல் பெண் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்.

Image
  தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்தில், டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இரு பணிகளுக்கும் தகுதி பெற்றுள்ள முதல் பெண் என்ற பெருமையை ரம்யா (33) பெற்றுள்ளார்.❤️❤️🚍👑 இவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள்: சொந்த ஊர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார்கோவில். பணி அனுபவம்: சென்னையில் தனியார் டிரைவிங் ஸ்கூல் பயிற்றுநர் மற்றும் கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநராக ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தகுதி: 2023-ல் அரசுப் போக்குவரத்துப் பயிற்சிப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற ரம்யா, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பித்துத் தேர்வாகியுள்ளார்.❤️❤️🚍👑 பணி நியமனம்: தற்போது கும்பகோணம் கோட்டத்தில் ஓட்டுநர் பயிற்சி பெற்று வரும் இவர், விரைவில் சீர்காழியில் தனது பணியைத் தொடங்க உள்ளார். சமீபத்தில் கும்பகோணம் எம்.எல்.ஏ. அன்பழகனிடம் வாழ்த்து பெற்ற ரம்யா, இக்கோட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர்-நடத்துனர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

கிணற்றில் விழுந்த கார்

Image
 சென்னையை சேர்ந்த வழக்கறிஞர்கள் திருவண்ணாமலை கிரிவலம் முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அவர்கள் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்திலிருந்த கிணற்றில் விழுந்தது. 😪😪 காரில் வந்த 4 பேரில் மூன்று பேர் உயி#ரிழ*ப்பு. கிணற்றில் விழுந்த காரை மீட்டு போலீசார் விசாரணை.. மற்றொருவரை தேடும் பணி தீவிரம்😪😪😪 #kanchipuram #chennai #advocate #Thiruvannamalai #girivalam #Pournami #PournamiGirivalam

ஆம்னி பேருந்தில் தீ விபத்து

Image
 திருநெல்வேலியில் இருந்து நேற்று இரவு 36 பயணிகளுடன் சென்னைக்கு சென்று கொண்டிருந்த ஒரு ஆம்னி பஸ் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் இளைப்பாற நிறுத்தப்பட்டுள்ளது. அப்போ எதிர்பாராத விதமாக அந்த ஆம்னி பஸ் உடைய பின் டயர் வெடித்து பஸ் தீப்பிடித்து எறிய தொடங்கியது.😪😪😪 இதைப் பார்க்க அதிர்ச்சி அடைந்த பஸ் ஓட்டுநர் உள்ளே இருந்த பயணிகளை அவசர அவசரமாக வெளியேற்றினார். பயணிகள் அனைவரும் பஸ்ல இருந்து இறங்குனதும் பஸ் முழுக்க தீப்பரவி எரிய ஆரம்பிச்சிருக்கு.😪😪😪 இதை அறிந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 20 நிமிடங்கள் போராடி அந்த தீயை அணைத்துள்ளனர். சரியான நேரத்தில் பயணிகள் அனைவரும் வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்டேஷன் மாஸ்டரை தாக்கிய வட மாநில இளைஞர்

Image
 கன்னியாகுமரியில் ரயிலை தவற விட்ட வடமாநில வாலிபர்,ஆத்திரத்தில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அகிலேஷை மதுபோதையில் தாக்கியதால் கைது-கைது செய்யப்பட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுபாஷ் ஜிலாங்கியா வயது ( 31) சிறையில் அடைப்பு-நாகர்கோவில் ரயில்வே போலீசார் நடவடிக்கை.