Posts

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்

Image
 தமிழகத்தில் அதிக அளவில் பத்திரிகைகளும் டிஜிட்டல் ஊடகங்களும் செயல் பட்டு வருகின்றன. அவற்றில் தினசரி செய்திகள் மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.  கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பத்திரிகை ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்தாலே நமக்கு நன்றாக தெரியும். செய்தி ஊடகங்கள் எப்படி செயல்படுகிறது என்பது.  பொதுவாகவே எல்லா தருணங்களிலுமே பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் மற்றவற்றுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிடும். ஏனெனில் இங்குள்ள பல பத்திரிகைகள் அரசியல் கட்சிகளாலும் அல்லது அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாலும் நடத்தப்படுகிறது.  இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் சம்பவம் குறித்து திரு நக்கீரன் கோபால் அவர்கள் ஒரு காணொளி வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த பின் மக்களும் உளவுத்துறை நண்பர்களும் தெரிவித்த கருத்துக்கள் என்னவென்றால் இவரைப் போன்ற ஒரு மட்டமான ஒரு தலைப்பச்சமான பத்திரிக்கையாளரை அரசியல் சொம்பு தூக்கி பார்த்ததில்லை. டிஜிட்டல் ஊடகத்துறையில் எப்படி செந்தில்வேல் மற்றும் குணசேகரன் போன்றவர்கள் அதுபோன்று அச்சு ஊடகத்துறையில் திரு...

கைப்பிடி இல்லாத கத்தி போன்று ஆபத்தானதா? (AI) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

Image
 உலகில் அனைத்து பகுதிகளிலும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பம் எதுவென்றால் அது என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகும். கடந்த சில ஆண்டுகளாக எப்படி கம்ப்யூட்டர் மற்றும் IT என அழைக்கப்படும் தொழில்நுட்பத்துறை உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததோ அதுபோல வருகின்ற சில ஆண்டுகளை AI தொழில்நுட்பம் என்பது தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். AI தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வேலைகளும் எளிதாக செய்ய முடியும் என்பதும் சில வேலைகளை தானே எளிதாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றதாகவும் இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்பது பலன் கருத்தாக உள்ளது. இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன என்பதை இதில் அறியலாம். AI தொழில்நுட்பத்தின் மூலம் பல நிறுவனங்களுக்கு வேலைகளை எளிதாகவும் குறைந்த கால அளவிலும் குறைந்த செலவிலும் முடிக்க முடியும். இதனால் பல பெரிய நிறுவனங்கள் மற்றும் சிறிய நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் உள்ள சிறு குறு தொழில்கள் முன்னேற்றமடைய வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக ஒரே மாதிரி செய்யக்கூடிய ...

தேசிய கூட்டணி தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் இணைந்தால் பலன் கிடைக்குமா?

Image
 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தற்போது தமிழகம் இருக்கும் போது மொத்த அரசியல் கட்சிகளின் கவனமும் தமிழக வெற்றி கழகம் என்ன செய்யப் போகிறது என்று காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக பாஜக போன்ற கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு விஜய் ஆதரித்து எப்படியாவது அவரை நமது கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறது. இது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்று பார்த்தால் விஜய் எப்போதும் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்ததால் இந்தக் கூட்டணி மீது மக்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கும் என்பதை பற்றி ஒரு கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தற்போது ஒரு பெரிய அதிருப்தி நிலவுகிறது. கரூர் சம்பவத்தை முன்வைத்து அரசியலில் அவரை ஓரங்கட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிரான பரப்புரைகள் முறுக்கி விடப்பட்டுள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபடுவது யார் என்பது மக்களுக்கே நன்றாக தெரியும். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இணைந்தாலும் எந்தளவுக்கு தமிழக வெற்...

விஜயின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

Image
 தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் தனது கட்சியின் பிரச்சார பயணத்தின் போது கரூரில் நடைபெற்ற துயரப் சம்பவத்திற்கு பின்னர் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். இந்நிலையில் கரூர் சம்பளத்திற்கு தார்மீக ரீதியில் விஜய் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் அவர் பிரச்சாரக் கூட்டத்திற்கு பல மணி நேரம் தாமதமாக வந்ததும் தகுந்த முன்னேற்பாடுகள் செய்யாததுமே இது போன்றதொரு பேரைச் சம்பவத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அது தவிர மற்ற பல காரணங்கள் இருந்தாலும் இது தமிழக வெற்றி கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி என்பதால் அவர்களுக்கே பொறுப்பு கூடுதல் என்பது அனைவரும் அறிந்தது. இந்த கரூர் சம்பவத்திற்கு பின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலரும் தலைமறைவாக உள்ளனர். அது மட்டுமல்லாது பலர் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இதன்பின் விஜயின் எதிர்காலம் என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.  இனி விஜய் அவர்கள் அரசியலில் வேறு ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணியுடன் போட்டியிட்டால் மட்டுமே ஓரளவு வாக்குகளை பெற முடியும். எனவே அவர் ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவ...

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் கண் துடைப்பா?

Image
 நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் கண் துடைப்பா? தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நமது முதலமைச்சர் ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பகுதியிலும் அரசு மருத்துவர்கள் கொண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் பெருந்தலாக கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர்.  அப்படி மக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட போது அவர்களுக்கு ரத்த பரிசோதனை ஸ்கேன் சோதனை போன்ற பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதற்கான பதிவுகள் செய்யும்பொழுது பயனாளிகளின் ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று பல நாட்கள் கடந்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் (Result) தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேக்கள் பரிசோதனைகள் ஸ்கேன் ரிப்போர்ட்டுகள் எதுவும் வராத பட்சத்தில் அவை கண்துடைப்பாக இருக்குமோ என்று ம...

ஸ்டாலின் சொல்வது உண்மை தான். தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.

Image
  ஸ்டாலின் சொல்வது உண்மை தான். தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று தெரிவித்திருக்கிறார். நாம் தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான். தமிழக அரசு கடன் வாங்குவதில் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.  இந்தியாவில் பல மாநிலங்களை விட தமிழக மலர்ந்த மாநிலமாக இருந்தாலும் நிர்வாக திறனற்ற தன்மையால் தமிழ்நாடு தற்போது கடன் வாங்குவதில் முதலிடம் வகிக்கிறது. மற்ற தமிழக அரசுகளை பார்க்கும் பொழுது ஸ்டாலின் அரசு அவுட் ஆப் கண்ட்ரோலாக கடன் வாங்குவது நன்றாக தெரிய வருகிறது. தமிழக அரசு தொழில் வளர்ச்சியும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.  ஸ்டாலின் தலைமை நான் ஆட்சியில் தமிழக அரசு ஸ்டெர்லைட் போன்ற நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஆலைகளை பலத்தை தங்கள் செயல்வதற்காக மூடிவிட்டு தற்போது புதிய முதலீடுகளுக்காகபல நாடுகளுக்கு வேற எந்த முதலமைச்சரும் செல்லாத அளவிற்கு சென்று முதலீடு பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  திமுக அரசு கொடுத்த வாக்கு உறுதிகளை காப்பாற்றுவதிலும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான். திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆ...

நக்சல் பாதையில் செல்கிறாரா? ஆதவ் அர்ஜுனா

Image
  நக்சல் பாதையில் செல்கிறாரா? ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தமிழகத்தில் கரூரில் நடந்த தமிழக வெற்றிக்கழக கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது அனைவரும் அறிந்ததே.  இந்நிலையில் அதுபற்ற விசாரணை நடந்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பிரிவின் செயலாளர்  திரு ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டு பின்னர் அதை நீக்கி இருக்கிறார். அப்பதிவில் அவர் நேபாளத்தை போன்று பங்களாதேஷ் மற்றும் இலங்கை நாடுகளைப் போன்று கிளர்ச்சியில் ஈடுபட ஜென்சி தலைமுறை தூண்டிவிடும் வகையில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். பின்னர் யாருடைய அறிவுறுத்தலின் பேரிலோ அதனை நீக்கி இருக்கிறார். ஆனாலும் சமூக வலை தலைவாசிகள் அனைவரும் இதைப் பற்றி பேசி அந்த கருத்து பதிவிட்ட ஆக அர்ஜுனாவின் பக்கத்தை ஆதாரமாக காட்டி விவாதித்து வருகின்றனர். ஆதார் அர்ஜுனாவின் இந்த செயல் தேசத்துக்கு எதிரானதாகவும் நக்சல் பின் தொடர்வதாகவும் உள்ளது. இது தேசத்துக்கு எதிரான செயலாகவும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களை தவறாக வழி நடத்தும் முறையாகவும் அனைவராலும் பார்க்கப்படுகிறது. இது போன்ற பதிவிட்டு ஆதார் அர்ஜுனா அவர்களை ம...

அரசியல் அனாதைகளாக தெரியும் தமிழர்கள்.

Image
 அரசியல் அனாதைகளாக தெரியும் தமிழர்கள்.  தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் பிரச்சாரக் கூட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கரூரில் நடத்திய பிரச்சார கூட்டத்தில் 41 உயிர்பலி நடந்துள்ளது.  இதற்கு தமிழக மக்கள் முக்கிய காரணம்.  இன்றைய அரசியல்  சூழ்நிலையில் தமிழக மக்களுக்கு பல அரசியல் தலைவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை. அவர்கள் எதிர்பார்த்தது போல் ஆட்சிகளும் அமையவில்லை. எனவே மக்களின் எதிர்பார்ப்பு ஏதாவது ஒரு தலைவன் வந்து நம்மை காப்பாற்றி தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்க மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். அதனால் புதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் தலைவர்கள் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் சினிமா துறையில் பிரபலமாக இருந்து தற்போது அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் அவர்களுக்கு எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது என்பதை உண்மை.  ஆனால் நம் மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நம் அரசியல் சிந்தனையும் புரிதலும் இன்னும் பல மடங்கு மேம்பட வேண்டி உள்...

கரூர் சம்பவம் யார் யார் காரணம்?

Image
 கரூர் சம்பவம் யார் யார் காரணம்?  நடிகர் விஜய் அவர்கள் தனது அரசியல் ஆசையின் காரணமாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை உருவாக்கி தற்போது தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கரூரில் அவரது பிரச்சார கூட்டத்தில் 41 உயிர்கள் பலியாகி உள்ளது. இதற்கு யார் யார் காரணம் அவர்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.  முதல் தவறு யார் மீது? கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது முதல் தவறு என்பது எனது கருத்து.  காரணம் விஜய் வருவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே அங்கு போய் பலரும் காத்திருந்துள்ளனர். அதிலும் அவரது ரசிகர்களும் தொண்டர்களும் சிறிது கூட பொறுப்பற்றவர்களாகவும் சிந்திக்கும் திறன் அற்றவர்களாகவும் அதுமட்டுமல்லாமல்மற்றவர்கள் சொல்லும் நல்ல அறிவுரைகளை கேட்கும் மனநிலையிலும் இல்லை. அவர்கள் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து செல்வதும் போக்குவரத்துக்கு இடையூறு செய்வதும் மற்றும் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் மின்கம்பங்களில் ஏறுவதும் மரங்களில் ஏறுவதும் அங்கிருக்கும் கடைகள் மற்றும் வீடுகளின் மீது ஏறி தொங்குவதும் ப...

இன்றைய 18/09/2025 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 இன்றைய 18/09/2025 வியாழக்கிழமை தங்கம் வெள்ளி விலை நிலவரம் இன்று 18/09/2025 வியாழக்கிழமை தங்கம் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ராமுக்கு ரூபாய் 50 குறைந்து உள்ளது. தங்கம் விலை ₹10220/கிராம் வெள்ளி விலை ₹133/கிராம்

இன்றைய 03/09/2025 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 இன்றைய 03/09/2025 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் இன்று 03/09/2025 புதன்கிழமை தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு உள்ளது. தங்கம் விலை ₹9805/கிராம் வெள்ளி விலை ₹129/கிராம்

கே என் ஆர் கட்டுமான நிறுவனத்தின் பங்குகள் விலை குறைய வாய்ப்பு உள்ளதா?

Image
  பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கே என் ஆர் கன்ஸ்டிரக்ஷன் என்ற கட்டுமான நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளில் பெரிய கட்டுமான வேலைகளை செய்து வருகிறது.  இந்நிறுவனம் கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை 66 என்ற நெடுஞ்சாலை பணிகளை செய்து வந்தது. அந்தக் கட்டுமானத்தில் மலப்புரம் அருகில் உள்ள கூரியாட் என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சில வாகனங்கள் விபத்தில் சிக்கன. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் வாகனங்கள் சேதமடைந்ததோடு சிலர் காயம் அடைந்தனர். இதுகுறித்து அரசு அதிகாரிகள் மற்றும் ஐஐடி பொறியாளர்கள் உதவியுடன் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஆய்வு செய்து அப்பகுதியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப கட்டுமானங்கள் செய்யப்படவில்லை என்பதும் மேலும் அதிக வலுவின் காரணமாக அப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை கே ஆர் கட்டுமான நிறுவனம் சரி செய்து தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டதோடு மேலும் அவர்கள் அரசு சார்பாக தற்போது செய்து வரும் கட்டுமானங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களுக்கு புதிய டெண்டர்கள் எதுவும் அளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டு...

இன்றைய 01/09/2025 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 இன்றைய 01/09/2025 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் இன்று 01/09/2025 திங்கட்கிழமை தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு உள்ளது. தங்கம் விலை ₹9705/கிராம் வெள்ளி விலை ₹128/கிராம்

பங்கு சந்தை நிபுணர்கள் ஒரு ஒப்பீடு. -------------- பங்குச் சந்தை நிபுணர்கள் திரு நாகப்பன் அவர்களுக்கும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பீடு.

Image
 பங்கு சந்தை நிபுணர்கள் ஒரு ஒப்பீடு.  --------------              பங்குச் சந்தை நிபுணர்கள் திரு நாகப்பன் அவர்களுக்கும் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பீடு. தற்போது பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது டிமேட் கணக்குகள் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் பங்குச்சந்தை பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகின்றது. இதனால் பலரும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர்.  அவர்கள் தங்கள் முதலீடுகள் செய்ய பங்குகளை தேர்ந்தெடுக்க சமூக வலைத்தளங்களான யூடியூப்,  இன்ஸ்டாகிராம்  போன்றவற்றில் பங்குச் சந்தைகளை பற்றி தகவல்களை வெளியிடுபவர்களை நாடுகின்றனர்.  அவ்வாறு பங்குச்சந்தை பற்றி தமிழில் தினந்தோறும் தகவல்களை வழங்குவதில் விகடன் குழுமம் நடத்தும் ஐபிஎஸ் பைனான்ஸ் என்ற சேனலில் திருநாகப்பன் அவர்களும் மணி பேச்சு என்ற சேனலில் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்களும் தங்கள் கருத்துக்களை தினந்தோறும் பகிர்ந்து வருகின்றன.  இவ்வாறு அவர்கள் பகிர்ந்து வருவதில் பல நல்ல தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு சென்று ...

தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?

Image
 தொழில்நுட்ப வளர்ச்சியால் பறிபோகும் வேலை வாய்ப்புகள். தீர்வு என்ன?  இன்றைய கால சூழ்நிலையில் எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் வளர்ச்சி அடைந்து வருகின்றன.  அந்த வகையில் தற்போது கணினி தொழில்நுட்பத்தில் ஏ ஐ (ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்) தொழில்நுட்பம் ஒரு புதிய தொழில் புரட்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் கணினி துறையில் பல வேலைகள் நுட்பத்தின் மூலம் எளிதாக செய்ய முடிகிறது. பல வேலை ஆட்கள் மூலம் பல மணி நேரம் செய்ய வேண்டிய வேலைகளை இந்த ஏஐ தொழில்நுட்பம் எளிதாக செய்து விடுகிறது.  இதுபோல் மற்ற துறைகளிலும் பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. எடுத்துக்காட்டாக தானியங்கி மோட்டார் வாகனங்கள் டிரைவர்(ஓட்டுநர்) இல்லாமலே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுமான துறைகளிலும் பூச்சு வேலை, டைல்ஸ் பதிக்கும் வேலை மற்றும் பொருட்களை ஒரு தளத்திலிருந்து மற்றொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் வேலை போன்ற பல வேலைகளுக்கு புதிதாக பல மிஷின்கள் வந்துவிட்டன.  இதனால் கணினி துறையில் வேலை பார்க்கும் பலருக்கும் வேலை இழக்கும் வாய்ப்ப...