Posts

Showing posts from November, 2025

அகங்கார யுத்தத்தின் முடிவு எட்டு உயிர்கள்

Image
  தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில் நடைபெற்ற இரு தனியார் பேருந்துகளின் விபத்து காணொளி தற்போது வெளியாகி உள்ளது.  அந்தக் காணொளியை பார்க்கும் பொழுது அரசு விரைவு போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த பேருந்து ஒன்று முன்னாள் சென்று கொண்டிருக்கிறது. அதனை தனியார் பேருந்து ஓட்டுநர் முந்த முயற்சிக்கிறார். பலமுறை முயன்றும் அந்த விரைவு போக்குவரத்து கழக பேருந்தின் ஓட்டுநர் வழி கொடுக்காத நிலையில் எப்படியாவது முந்தி விட வேண்டும் என்று தனியார் பேருந்து ஓட்டுனர் அகங்காரமும் (Ego) அவரை முந்தவிடக் கூடாது என்று விரைவு போக்குவரத்து கழக பேருந்து ஓட்டினரின் அகங்காரமும்(ego) இன்று எட்டு உயிர்களை பலி வாங்கியுள்ளது.  நமது இந்தியர்களுக்கு பொதுவாகவே சகிப்புத்தன்மை மிக குறைவாக உள்ளது. சாலைகளிலும் பொது இடங்களிலும் முன் பின் தெரியாத நபர்களிடம் போட்டி பொறாமை மனப்பான்மையுடன் அகங்காரத்துடனும் பலரும் நடந்து கொண்டிருக்கின்றனர்.இது மாற வேண்டும்.  நாம் விட்டுக் கொடுத்து செல்வதால் எந்த விதத்திலும் கெட்டுப் போகப் போவதில்லை. மேலும் மனிதத் தன்மையுடனும் சகிப்புத்தன்மையுடன் நடப்பதால் நமது மதிப்பு உயரும். தற்போதைய ...

பாண்டிச்சேரியை குறி வைக்கிறாரா விஜய்

Image
தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமிழகத்தில் அனுமதி கிடைக்காத நிலையில் பாண்டிச்சேரியில் தனது பிரசாரத்தை பயன்படுத்தி நடிகர் திலகம் எம்ஜிஆர் போன்று அவர் பாணியில் முதலில் பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு நடிகர் விஜய் செயல்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  நடிகர் விஜய் அவர்களோடு இருக்கும் திரு புஸ்ஸி ஆனந்த் அவர்கள் ஏற்கனவே பாண்டிச்சேரி எம்எல்ஏவாக இருந்தவர். பாண்டிச்சேரி அரசியல் குறித்து சில தகவல்களை அறிந்து வைத்திருப்பதோடு அங்குள்ள அரசியல் தலைவர்களின் வட்டாரத்தில் அவருக்கு பழக்கம் உள்ளது.  இதனால் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளை பயன்படுத்தி அங்கு ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி வரும் சட்டமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரியில் ஆட்சியைப் பிடிப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் எண்ணமாக உள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் பின்னால் ஓடும் அரசியல்வாதிகள்

Image
  தமிழக அரசியல் எப்போதுமே திரை பிரபலங்களை தூக்கி வைத்துக் கொண்டாடும் என்பதில் சந்தேகமில்லை. நமது தமிழக வாக்காளர்களின் மனநிலையை சினிமாவில் ஒரு நடிகர் நல்லது செய்வது போல் நடித்தால் அதை நம்பி ஏமாறும் சுபாவம் படைத்தவர்கள் தான்.  தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் தொடங்கியுள்ள கட்சியை நம்பி அதிமுகவில் உள்ள பல பெரிய அரசியல் அனுபவம் உள்ள  தலைவர்களும் மற்றும் சில தொண்டர்களும் தாவியுள்ளனர்.  இது அதிமுக மட்டுமல்லாமல் மற்றுமுள்ள அனைத்து கட்சிகளிலிருந்தும் சிலர் தமிழக மக்கள் நடுநிலை கொண்டாடுவார்கள் என்ற சிந்தனையோடு கட்சி மாற வாய்ப்பு உள்ளது.  ஆனால் அரசியலில் நடிகருக்குள்ள ஒரு ஈர்ப்பும் புகழும் மட்டுமே போதாது. ஒரு நல்ல தலைவருக்கு முக்கியமான அம்சங்கள் என்னவென்றால்  தொலைநோக்குப் பார்வை   ஒரு அரசியல் தலைவர் இன்று வரும் பிரச்சினைகளை மட்டும் தீர்ப்பதோடு மட்டுமல்லாமல் பின்னாளில் பல ஆண்டுகளுக்குப் பிறகும் அது போன்ற பிரச்சினைகள் திரும்ப எழும்ப வண்ணம் முடிவுகளை எடுக்க வேண்டும்.  முன்னேற்றத் திட்டங்கள்   இப்போது நமது பகுதியில் உள்ள பிரச்சனைகள...

சொந்தக்காசில் சூனியம் வைத்த உதயநிதி

Image
  திமுக அறிஞர் அண்ணா ஆரம்பித்த கட்சி என்றாலும் அக்கட்சி தற்போது கருணாநிதி குடும்பம் மொத்தம் தான் ஆண்டு அனுபவித்து வருகிறது.  அந்த வகையில் தற்போது கருணாநிதி தொலைந்து ஸ்டாலின் ஸ்டாலினை தொடர்ந்து உதயநிதி தலைமை பதவிக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறார்.  அதற்கு முன்னோட்டமாக வாழும் சட்டமன்றத் தேர்தலில் அவரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும் வகையில் ஒரு புதிய பாடலை தயார் செய்து திமுக வெளியிட்டுள்ளது.  அது தற்போது எதிர்மறை பாதிப்பை அதிகமாக திமுகவிற்கு வழங்கி வருகிறது. அந்தப் பாடலை வைத்து தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் ரசிகர்கள், அதிமுக தொண்டர்கள், பாஜக தொண்டர்கள் மற்றும் திமுக எதிர்ப்பாளர்கள் அனைவரும் உதயநிதியையும் அந்தப் பாடலையும் வைத்து சிறப்பான முறையில் ட்ரோல்  செய்து வருகிறார்கள். இது திமுகவுக்கு பலத்த பின்னாடைவாகவே பார்க்கப்படுகிறது.  தமிழக வெற்றி கழக விஜய் மற்றும் பாஜக அண்ணாமலை போன்ற இளம் தலைவர்களுக்கு எதிராக உதயநிதியை பெரிய தலைவராக ஒரு பிம்பத்தை உருவாக்க நினைத்து தனது சொந்த காசி சூனியம் வைத்தது போல் கொஞ்சநஞ்சம் திமுகவினரிடம் இருந்த தலைவர் இமேஜையும் டோட்டல் ட...

தமிழ்நாட்டில் 2026 இல் தொங்கு சட்டசபை அமைந்தால்

Image
  தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான்கு முறை போட்டியாக நடைபெற வாய்ப்புகள் பெருமளவில் உள்ளன.  தற்போது வரையில் அதிமுக பாஜக தனிமையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமை ஒரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும், தமிழக வெற்றி கழகம் ஓர் அணியாகவும் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  அவ்வாறு நடந்து சட்டமன்றத் தேர்தலில் விஜய் குறிப்பிடத்தக்க வாக்குகளை எடுத்து சில எம்எல்ஏக்களை தமிழக வெற்றி கழகம் பெற்றிடும் நிலையில் ஒருவேளை அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் கிட்டத்தட்ட ஒரே அளவு எம்எல்ஏக்களை பெற்றிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் யாருக்கு ஆதரவளிக்கிறதோ அவர்களை ஆட்சி அமைக்க முடியும் என்கிற ஒரு சூழ்நிலை வந்தால் என்ன நடக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து ஓர் அரசியல் ஆய்வாளரின் கருத்து இது.  தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு எந்த ஒரு கூட்டணியும் தனிப்பெரும்பான்மை பெறாமல் தொங்கு சட்டமன்றம் அமையும் சூழ்நிலை வந்தால் தமிழகத்தின் புதுவரமான தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்கிற ஒரு சூழ்நிலை வரும் பொழுது இரு...

மதவெறி உணர்வுடன் அலெக்சாண்டர் பாபு

Image
  மேடை நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒற்றை மனிதனாக ஒரு இசை கச்சேரி நடத்தி மக்களைக் கவர்ந்த வரும் முக்கியமான நபர் அலெக்சாண்டர் பாபு. இவரை அலெக்ஸ் என்று அன்புடன் அழைக்கின்றனர்.  இவர் தனது மேடை நிகழ்ச்சிகளிலும் சரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சரி பெரும்பாலான நேரங்களில் தமிழ் பக்தி பாடல்களை பாடியவர்களையும் இசையமைத்தவர்களையும் மற்றும் இந்து தெய்வங்களையும் நக்கல் நையாண்டியாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.  அடிப்படையில் கிறிஸ்தவரான இவர் இதுவரை மேடைகளில் ஒரு நாள் கூட கிறிஸ்தவ தெய்வங்களையோ அல்லது கிறிஸ்தவ பாடல்களையோ பாடி அவர் நையாண்டி செய்வதில்லை. அதேபோல் இஸ்லாமிய பாடல்களையும் ஒரு நாளும் அவர் தொட்டதில்லை. ஏனெனில் அவற்றைத் தொட்டால் பிரச்சனை வரும் என்பது அவருக்கே நன்கு தெரியும்.  நமது இந்து மக்கள் ஏமாளியாக இருக்கும் வரை இவரைப் போன்றவர்கள் நாம் கொடுக்கும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் பணத்தை பெற்றுக்கொண்டு கொச்சைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டுதான் இருப்பார்கள். இவரைப் போன்றவர்களை இந்து மக்கள் அனைவரும் புறக்கணித்தால் மட்டுமே இவர்கள் திருந்தவும் தங்கள...

விபத்துகள் அதிகரிக்க காரணம் என்ன? விபத்துக்கு யார் பொறுப்பு?

Image
    தமிழ்நாட்டில் தற்போது தனியார் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது. தொலைதூரம் செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆரம்பித்து நகருக்குள் ஓடும் உள்ளூர் பேருந்து வரை பெரும்பாலான தனியார் பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாக செய்திகள் வருகின்றன.  இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அதிவேகம் மற்றும் சாலை விதிகளை ஒழுங்காக கடைபிடிப்பதில்லை என்பதுதான். இது போன்ற விபத்துக்கள் நடக்க முக்கிய காரணமாக இருப்பவர்கள் யார் யார்?  முதல் பொறுப்பு தனியார் பேருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் தான்.  பெரும் பொருட்செலவில் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட பல பேருந்துகளையும் முதலீடு செய்து தொழில் நடத்தும் இவர்கள் அதனை ஓட்ட வரும் ஓட்டுநர்கள் தகுதியானவர்களா அவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இதுவரை அவர்கள் ஓட்டியதில் எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளன. அவருடைய தனிமனித ஒழுக்கம் எப்படி உள்ளது என்பது போன்ற பல விஷயங்களை போதுமான அளவிற்கு கருத்தில் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. இதற்கு உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படும் காரணமானது சில சமயங்களில் குறிப்பாக பண்டிகை காலம் ...

தமிழகமெங்கும் சாலைகளின் அவலநிலை

Image
  தமிழகத்தில் தற்போது எல்லா இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் தங்கள் அன்றாட வேலைகள் மற்றும் பள்ளி செல்லுதல் போன்ற பல காரணங்களுக்காக தினசரி வெளியே சென்று வரும் நிலையில் நமது தமிழ்நாட்டின் பெரும்பாலான சாலைகள் வயல்வெளிகளைப் போல் சேரும் சகதியும் ஆக மழை நீரோடு சேர்ந்து கழிவு நீரும்  சாலைகளில் தேங்கியுள்ளது.  இதில் பயணிப்பதால் பலருக்கும் பலவிதமான நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் சாலைகளில் உள்ள பள்ளமேடுகள் நீர் நிரம்பியுள்ளதால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பலரும் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகளும் அன்றாடம் நடைபெற்று வருகிறது.  திராவிட மாடல் ஆட்சி என்று பெருமை பேசும் இந்த ஆட்சியாளர்கள் கடந்த நான்கரை வருடங்களாக தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்கள் எதிலும் சாலைகளை சிறப்பாக சீரமைத்ததாக ஒரு தமிழக சாமான் என் கூட தெரிவிக்கவில்லை. சில சாலைகள் போடப்பட்டாலும் கூட அவை தரத்தில் மிக மோசமாகவும் ஒரு மலைக்கு கூட தாங்காத அளவிற்கு தகுதியற்றதாக உள்ளது.  இதற்கு நாம் ஆட்சியாளர்களை குறை சொல்லி ஒன்றும் பிரயோஜனம் இல்லை. இலவசத்திற்காகவும் காசுக்...

தென்காசி கொட்டா குளத்தின் பரிதாப நிலை

Image
 தென்காசி மாவட்டம் சுமந்துபுரம் ஊராட்சி கொட்டாக்குளம் பஞ்சாயத்து உட்பட்ட கொட்டா குளம் நீர்நிலை தற்போது சுகாதார சீர்கேடுக்கு வழிவகுக்கும் வகையில் மிக மோசமாக உள்ளது.  குளக்கரை பகுதியில் குப்பை குளங்களும் மது பாட்டில்களும் கொட்டிக் கிடக்கின்றன. சில சமயங்களில் துர்நாற்றமும் வருகிறது. மேலும் குளத்தில் நீர்நிலை என் மீது பெருமளவில் அமளிச் செடிகள் சூழ்ந்துள்ளது. நீர்நிலை முழுவதுமே கழிவுநீர் போல் காட்சி அளிக்கிறது.   அது மட்டுமல்லாது குளக்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பது தென்காசி பகுதியில் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் நமது பகுதியில் பெய்யும் பெருமழைகளில் சில ஆண்டுகளில் சென்னை போல் இங்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் வர வாய்ப்புள்ளது.  தற்போது நடு பல்க் சந்திப்பு பகுதியில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதற்கு அங்குள்ள குளத்தின் கரை மேல் உள்ள ஆக்கிரமிப்புகளை காரணம்.   இனியும் தென்காசி மக்கள் விழித்துக் கொண்டு இந்த ஆக்கிரமிப்புகளை பற்றிய கேள்வி எழுப்பாமல் நீர்...

இட ஒதுக்கீடு சமூகத்தை சம நிலைக்கு கொண்டு வந்து விட்டதா?

Image
நமது இந்திய திருநாட்டில் அரசியலமைப்புச் சட்டம் ஆரம்ப காலத்தில் இருந்தே இட ஒதுக்கீடு சட்டம் அமலில் உள்ளது. இது நமது இந்திய நாட்டின் சமூக அமைப்புகளை சமநிலைக்கு கொண்டு வரும் நோக்கோடு உருவாக்கப்பட்டது.  தற்போது சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகாலம் ஆன பின்னரும் ஆரம்ப காலத்தில் இருந்த அதே இட ஒதுக்கீடு முறை இன்றும் தொடர்ந்து பிரிந்து வருகிறது.  எப்போதுமே ஒரு சட்டம் காலம் மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே அது மக்களுக்கு பயனளிக்கும் என்பது நிதர்சனம்.  சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு முறையில் தற்போது பலன் பெற்று வரும் மக்களை யார் என்று கணக்கெடுத்தால் கடந்த இரண்டு மூன்று தலைமுறைகளாக முதன்முறை பலன் பெற்றவர்களே அவர்களது வாரிசுகளுக்கு அப்பலன்களை கொண்டு சேர்ப்பது தெரியவரும்.  ஒரு விளிம்பு நிலை சமூகம் சமநிலை பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின் மூலமாக ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மட்டும் பலன் பெற்று வருகிறார்கள் என்பது நமது குற்றச்சாட்டு.  அதே விளிம்பு நிலை பகுதியில் உள்ள மக்கள் இன்னமும் தங்...

கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் தடுக்க முடியாத அறநிலையத்துறை

Image
 தமிழகத்தில் உள்ள பாரம்பரிய இந்து திருத்தலங்கள் அனைத்தும் தற்போது நிர்வாகித்து வருவது இந்து சமய அறநிலையத்துறை ஆகும்.  தமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்களில் பெரிய இந்து ஆலயங்கள் திருத்தலங்கள் அனைத்தையும் தரிசிக்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.  அவ்வாறு தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலம், திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோயில், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் பல இந்து கோயில்களில் தரிசிக்க வரும் பக்தர்களிடம் வாகனம் நிறுத்த பார்க்கிங் கட்டணம் முதல் தரிசனம் செய்ய சிறப்பு கட்டணம் தொடங்கி பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதோடு கோவில் நிர்வாகத்திற்கு உண்டியல் மூலமாகவும் மற்றும் பல காணிக்கைகளும் வருகின்றன.  இதுபோக பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முடி காணிக்கை அளிக்க காது குத்த மற்றும் கட்டளைதாரர்களாக அபிஷேக ஆராதனைகள் நடத்த பல வழிகளிலும் பக்தர்களிடமிருந்து பணம் பெறப்படுகிறது. அவற்றிலும் பல...

காங்கிரஸின் நடவடிக்கைகள் சரிதானா?

Image
இவரை அடையாளம் காண்க. இவர் டெல்லி குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக இருந்தவரும், காங்கிரசின் சிறுபான்மை பிரிவின் பொறுப்பாளரும், அல் ஃபலா பல்கலைக்கழகத்தின் உரிமையாளருமான ஜவாத் சித்திக். கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒரு போன்சி திட்டத்திலிருந்து ஒரு பல்கலைக்கழகம் வரை. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கியது யார் தெரியுமா? 2014 இல் பூபேந்திர ஹூடாவின் காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதா? ஹரியானாவின் காங்கிரஸ் அரசு, விதிகள், சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பைத் திருத்துவதன் மூலம், மத்தியப் பிரதேசத்தில் மோசடி செய்து தப்பி ஓடிய ஒரு மோசடிக்காரரும் மோசடி செய்பவருமான ஜவாத் அகமது சித்திக் என்பவருக்கு ஃபரிதாபாத்தில் 60 ஏக்கர் மதிப்புள்ள நிலத்தை வெறும் ₹100க்கு வழங்கியது. இது மட்டுமல்லாமல், ஹரியானாவின் காங்கிரஸ் அரசு சிறுபான்மை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இங்கு ஒரு இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைக் கட்ட ₹60 கோடியை ஒதுக்கியது. அதானிக்கு நிலம் கொடுத்ததில் பெருமை கொள்ளும் காங்கிரஸ் கட்சி, பயங்கரவாத தளங்களை உருவாக்க ஒன்று அல்லது இரண்டு ஏக்கர் மட்டுமல்ல, 60 ஏக்கர் நிலத்தையும் எவ்வாறு வழங்குகிறது என...

உங்கள் பகுதியின் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும்?

Image
 தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உங்கள் பகுதியில் நல்ல வேட்பாளரை எப்படி தேர்வு செய்யலாம் என்பது குறித்து சில கருத்துக்கள் கொடுத்துள்ளோம். இதை பயன்படுத்தி சிறந்த வேட்பாளரை தேர்வு செய்து வாக்களித்து வெற்றி பெற வைத்து உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வழி செய்யுங்கள்.  முதலில் உங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். அதில் ஏற்கனவே பலமுறை போட்டியிட்ட வேட்பாளர்களின் விவரங்களை வைத்து ஆர் போட்டியிட்ட ஒவ்வொரு முறையும் என்னென்ன வாக்குறுதிகள் எல்லாம் அளித்துள்ளார். அதில் எத்தனை சதவீதத்தை நிறைவேற்றி உள்ளார். அவர் சார்ந்த அரசியல் கட்சி என்னென்ன வாக்குறுதிகளை அளித்தது அதில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளது என்பது குறித்து ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். இதை வைத்து அவர்கள் எத்தனை சதவீதம் நம்பகத்திற்குரியவர்கள் என்பதை முடிவு செய்யுங்கள்.  உங்கள் பகுதியில் அரசியல் கட்சிகளையும் தாண்டி உங்கள் தனிப்பட்ட அரசியல் சார்பையும் விட்டு தனிப்பட்ட முறையில் எந்த வேட்பாளர் சிறந்தவர் என்பதை கண்டறிய உங்கள் பகுதியி...

தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் சரியா?

Image
  தமிழகத்தில் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்பும் மனநிலையில் உள்ளனர் என்று பரவலான கருத்து நிலவி வரும் நிலையில் நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.  தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பும் உள்ளது. கரூரில் நடைபெற்ற சம்பவத்திற்கு பின் அமைதி காத்து வந்த தமிழக வெற்றி கழகத்தினர் தற்போது லேசாக வெளிவந்து மீண்டும் தங்கள் அரசியலை தொடங்கியுள்ளனர்.   தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய தலைவர்கள் நடிகர் விஜய் புஸ்சி ஆனந்த் உட்பட பலரும் கரூர் சம்பவத்திற்கு பின் ஒளிந்து கொண்டனர். தற்போது அதன் தாக்கம் குறைந்து சகஜ நிலைக்கு திரும்பிய பின் தங்களின் அரசியலை தொடர ஆரம்பித்துள்ளனர்.  இந்நிலையில் அவர்கள் செய்யும் அரசியல் என்பது திமுகவின் காப்பியாகவே உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். திமுக தங்கள் அரசியலில் எப்படி முன்னெடுத்துச் செல்கிறதோ அதேபோன்று  தமிழக வெற்றி கழகத்தின் அரசியலும் செயல்படுகிறது.  குறிப்பாக மத்திய அரசை காரணம் இல்லாமல் எதிர்ப்பதிலும், நீட் தேர்வு விவகாரத்திலும், சிறப்பு வாக்க...

திமுகவின் தவறான அணுகுமுறையால் முதலீடுகளை இழக்கும் தமிழகம்

Image
  திமுக ஆட்சிக்கு வந்த பின் வருடம் ஒருமுறை முதலீடுகளை ஈர்ப்பதற்காக நமது முதலமைச்சராக அவர்கள் பல நாடுகளுக்கு சென்று வருகிறார். அவர் ஒவ்வொரு முறை வெளிநாடுகளில் இருந்து வந்த பிறகு சில ஆயிரம் கோடிகளுக்கு முதலீடு வந்துள்ளது என்று அறிக்கைகளை அளிப்பார்கள்.  ஆனால் உண்மையில் அதில் பாதி நிறுவனங்கள் கூட புதியதாக தொழிலை தொடங்கியதாக தெரியவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இவர்கள் அளிக்கும் அறிக்கைகளில் உள்ள பாதி நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில்களை நடத்தி வரும் நிறுவனங்களாக உள்ளது.  திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது வேதாந்தா காப்பர் நிறுவனத்திற்கு எதிராக தூத்துக்குடியில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தி தேவையில்லாமல் தன்னை கார்ப்பரேட் விரோதியாக காட்டிக் கொண்டது. இதனால் பல நிறுவனங்கள் தற்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால் பின்வரும் காலங்களில் திமுகவை தங்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்கும் என்ற பயம் ஏற்பட்டுள்ளது.  இதனால் புதிய முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது திமுக ஆட்சியில் புதிதாக த...

தமிழகம் மெல்ல மெல்ல தெலுங்கர்கள் பிடியில் செல்கிறதா?

Image
  தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திமுக ஆட்சி எப்போதும் செய்வது மொழி அரசியல்.  அவர்கள் எப்போதும் இந்தி மொழியை எதிர்த்து போராட்டம் நடத்துவதும் ஏதோ தமிழ் மொழிக்கு அவர்கள் தான் பாதுகாப்பு அதிகாரம் பெற்றவர்கள் போலவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்.  ஆனால் உண்மையில் தமிழ் மொழியை திட்டமிட்டு அழிப்பதும் தமிழர்களை பின்னுக்கு தள்ளி தெலுங்கர்களை வாழ வைப்பதும் திமுக தான் என்பதை தமிழ் மக்கள் எப்போது அறிந்து கொள்வார்கள் என்பதே தெரியவில்லை.  மூன்றாவது மொழியாக இந்தி வந்தால் தமிழ் அழிந்துவிடும் என்று கூறுபவர்கள் தங்கள் அமைச்சரவையில் பெரும்பான்மை அமைச்சர்கள் தெலுங்கர்கள் என்பதை மறைத்துக் கொண்டே வருவார்கள்.  இந்தி மொழி எதிர்ப்பது போலவே தெலுங்கர்களின் தெலுங்கு மொழியையும் எதிர்க்க வேண்டும் என்பது தானே நியாயம். இந்தி மொழி வந்தால் தமிழ் அழியும் என்றால் தெலுங்கு மொழி வந்தாலும் தமிழ் அழிய தானே செய்யும்.  இங்கிருக்கும் அமைச்சர்கள் ஊழல் செய்து கொள்ளை அடித்த பணத்தில் பங்கு கொடுக்கும் கடவுள் கூட தெலுங்கு தேசத்தில் தான் இருக்கிறார்.  அதுமட்டுமல்லாது மறைமுகமா...

பங்குச்சந்தை பற்றி சிறப்பான தகவல்களைத் தரும் youtube சேனல்கள்

Image
  இந்திய பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை தினமும் அளிக்கும் பல youtube சேனல்கள் தமிழில் பிரபலமாக உள்ளன.  தினசரி பங்குச்சந்தையில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தரும் தகவல்கள் ஆண்டு அறிக்கைகள் மேலும் பங்குச் சந்தையில் இருந்து கொடுக்கப்படும் சுற்றறிக்கைகள் என எல்லாவற்றையும் தெரிவிக்கும் பல youtube சேனல்கள் தமிழில் உள்ளன.  அவற்றில் பிரபலமான சில சேனல்கள் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் விரும்பிப் பார்க்கும் சேனல்களாக உள்ளன.  குறிப்பாக மணி பேச்சு, ஐபிஎஸ் பைனான்ஸ், ரீயங் டைல் ஆப்ஷன்ஸ், யங் இன்வெஸ்டர், திருப்பூர் புல்ஸ், மெய்ப்பொருள் காண்க மற்றும் சேவிங்ஸ் தமிழ் போன்ற பல youtube சேனல்கள் உள்ளன.  இவற்றில் ஐபிஎல் பைனான்ஸில் திரு நாகப்பன் அவர்கள் அளிக்கும் தகவல்கள் எளிதாக சாமானியர்களுக்கு புரியும் வகையிலும் மேலும் சிறந்த தகவல்கள் அளிப்பதாகவும் உள்ளது என்று பெரும்பாலானவர்களின் கருத்து.  அடுத்ததாக ரீடைல் ஆப்ஷன் சேனலில் அளிக்கப்படும் தகவல்கள் சிறப்பாகவும் சந்தேகம் ஓகே சரியான முறையில் கணிப்பது போலவும் பல நேரங்களில் உள்ளது என்று கருத்துக்கள் நிலவுகின்றன. அதில் அ...

ஓடும் குதிரையில் பயணிக்கிறாரா ரஜினிகாந்த்?

Image
  தமிழ் சினிமா உலகின் முடி சூடா மன்னனாக விளங்கும் திரு ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே மிகப்பெரும் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களை அழைத்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது வழக்கமாகக் கொண்டுள்ளார்.  தற்போது கமலஹாசன் இயக்கத்தில் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் ஒரு படம் உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன. அதை திரு சுந்தர் சி அவர்கள் இயக்குவதாகவும் தகவல்கள் பரவியது. அந்தப் படத்தின் கதை பற்றிய விவாதங்களும் நடந்து வந்ததாக கூறப்பட்டது.  ஆனால் தற்போது திரு சுந்தர் சி அவர்கள் அந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வருகிறது.  கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் அவர்கள் பெரும் வெற்றி படங்களை கொடுத்த இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து வந்தார். காரணம் அவர்கள் இளம் தலைமுறை என்ன ஓட்டங்களை சரியாக புரிந்து வைத்து அதற்கேற்றார் போல் படங்களை உருவாக்குவார்கள் என்ற எண்ணத்தில் அப்படி செயல்பட்டதாக கூறப்படுகிறது.  ஆனாலும் தற்போது வரை அவர் நடித்த படங்களில் சமீபத்திய படங்கள் பலவும் பெரிய வெற்றியை பெற முடியவில்லை. தற்போதைய இளம் தலைமுறை இயக்குனர்களை விட சிறந்த...

தமிழ்நாட்டில் தவறான வியூகங்களால் தடுமாறுகிறதா பாஜக?

Image
தமிழ்நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்து ஆலோசித்து செயல்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடன் கூட்டணி அறிவித்து செயல்பட்டு வரும் நிலையில் கரூரில் நடந்த தமிழக வெற்றி கழக சம்பவத்திற்கு பின் நடிகர் விஜய் அவர்களுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியினர் பேசி எப்படியாவது அவரை கூட்டணியில் கொண்டு வந்து சேர்த்து விட வேண்டும் என்று முயற்சித்தனர். ஆனால் அது இதுவரை கை கூடவில்லை. அது பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ஒரு பிரிவினருக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்தும் நிலவி வந்தது.  மேலும் திரு அண்ணாமலை அவர்களை தலைமைப் பதவியிலிருந்து மாற்றிய பின்பு அவருக்கு சரியான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று அவருடைய ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.   தற்போது பாரதி ஜனதா கட்சியின் தமிழக தலைவராக செயல்பட்டு வரும் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்வதோடு கட்சியினரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகிறார் என்ற போதில...

திருநெல்வேலி அரசு அதிகாரிகள் மற்றும்அரசியல்வாதிகளின் கனிவான கவனத்திற்கு

Image
  திருநெல்வேலி நகரில் வண்ணார்பேட்டை பகுதியில் மாலை நேரங்களில் சென்னை பெங்களூர் கோயம்புத்தூர் போன்ற பல பகுதிகளுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் மற்றும் SETC பேருந்துகள் மற்றும் கோவில்பட்டி சங்கரன்கோவில் வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு அருகில் உள்ள ஆப்பிள் ட்ரீ ஹோட்டலின் அருகில் நின்று செல்கின்றன.  இந்தப் பேருந்துகளில் ஏறுவதற்காக திருநெல்வேலி மாநகரின் பல பகுதிகளில் இருந்து மக்கள் பலரும் வந்து காத்திருக்கின்றனர்.  ஆனால் அப்பகுதியின் சாலைகள் மிகவும் மோசமான தரத்தில் உள்ளது. பேருந்துகளை ஓரமாக ஒதுக்கி நிறுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள் பலவும் தாறுமாறாக சாலைகளில் நிறுத்தி நிறுத்தப்படுகின்றன.  இதனால் அப்பகுதியில் பேருந்துக்கு நிற்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதுமட்டுமல்லாது பாலத்தின் மேலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் சாலை நடுவிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.  அந்த வண்...

தமிழக வாக்காளர்களின் கனிவான கவனத்திற்கு

Image
  தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் திறமையான நேர்மையான சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய என்ன செய்ய கீழே உள்ள கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதில்கள் உங்களுக்கு திருப்தி அளிப்பதாக இருந்தால் நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். அப்படி நீங்கள் இதை பின்பற்றும் பட்சத்தில் உங்கள் தொகுதி வளர்ச்சி அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு.  முதலில் தற்போது வெற்றி பெற்று பதவியில் உள்ள  வேட்பாளர் தங்களிடம் கலந்து தேர்தலின் போது பிரச்சாரத்திற்கு வரும்போது என்னென்ன வசதிகள் செய்து கொடுப்பேன் என்றும் அடிப்படை வசதிகளில் எதை செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார் என்பதை பழைய தேர்தல் அறிக்கையை எடுத்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் வெற்றி பெற்ற  வேட்பாளர் சார்ந்துள்ள கட்சி வெற்றி பெற்ற கட்சியா? அவ்வாறு அவர் வெற்றி பெற்ற கட்சியிலோ அல்லது கூட்டணியோ இருந்திருந்தால் அந்தக் கூட்டணி கொடுத்துள்ள வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றி விட்டனரா? என்று முதலில் பார...

தில்லு முல்லு திமுகவின் தில்லாலங்கடி வேலை

Image
  தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாடு முழுவதும் SIR சிறப்பு வாக்காளர் திருத்த திட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சென்ற தேர்தலில் வாக்களித்த பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டின் பல தொகுதிகளிலும் திமுகவுக்கு எதிராக வாக்களிக்கும் வாக்காளர்களின் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.  குறிப்பாக அதிமுக பிஜேபி போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பும் சாதாரண வாக்காளர்களின் பெயர்களை வெகு சாமர்த்தியமாக நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.  சமீபத்திய தேர்தல்களில்  எந்த அரசியல் கட்சி வெற்றி பெற்றாலும் வெற்றி சதவீதம் மிகவும் குறைவாக உள்ள நிலையில் இதுபோன்று வாக்காளர்கள் நீக்கப்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பை உண்டாக்க அதிக வாய்ப்பு உள்ளது.  எனவே எதிர்க்கட்சியில் உள்ள பூத் கமிட்டி முகவர்கள் தங்கள் ஏரியாவில் உள்ள வாக்குச்சாவடி பூத் லிஸ்ட்டை வைத்து வீடு வீடாக சென்று ...