Posts

Showing posts from October, 2025

இரட்டை வேடம் போடுகிறாரா கனிமொழி?

Image
  திமுகவில் உள்ள தலைமை குடும்பத்தில் நிர்வாக திறனும் ஆளுமையும் அரசியல் தந்திரங்களும் அதிகம் தெரிந்த ஒரே தலைவர் என்றால் திருமதி கனிமொழி அவர்கள் மட்டுமே.  கனிமொழி அவர்கள் அரசியலில் ஓரளவுக்கு குறைந்தபட்ச நாகரிகத்தை கடைபிடிக்கும் திமுக அரசியல்வாதியாக அறியப்பட்டவர்.  ஆனால் அவரும் பல தேர்தல்களில் பல பொய்யான வாக்குறுதிகளை அழிக்க காரணமாக இருந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டின் திமுக அரசின் தேர்தல் அறிக்கை தயாரித்த முக்கிய தலைவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.  திருமதி கனிமொழி அவர்கள் 2016 தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது கட்சி உறுப்பினர்களோ தலைவர்களோ யார் மதுபான ஆலை நடத்தினாலும் அது மூடப்படும் என்றும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த ஆவண செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் அதிமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் அதிக மக்கள் மதுவால் இருந்ததாகவும் இதனால் இளம் விதவைகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.   அதேபோல் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது சுங்க கட்டணம் ரத்து கேஸ் சிலிண்டர் ...

வாக்குத் திருட்டு. எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையா?

Image
  எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து தற்போது ஆளும் கட்சிக்கு எதிராக எடுத்திருக்கும் முக்கிய ஆயுதம் ஓட்டு திருட்டு.  கடந்த 14 வருடங்களுக்கு மேலாக மதில் ஆட்சி செய்து வரும் பிஜேபி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் எதுவும் குற்றம் சொல்ல வாய்ப்பில்லாத போது தற்போது அவர்கள் தேடி கையில் எடுத்திருக்கும் ஆயுதம் வாக்குத் திருட்டு.  இந்தியாவைப் பொறுத்தவரை எப்போதுமே வாக்காளர் பட்டியலில் சில குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதற்கு மாற்றுக் கருத்து இல்லை. தற்போது தொழில்நுட்பங்கள் பலவகையிலும் வளர்ந்து விட்ட பின்பும் நமது வாக்காளர் பட்டியில் சில குளறுபடிகள் இருக்கத்தான் செய்கிறது.அதை தற்போது சரி செய்ய வேண்டிய சூழ்நிலையும் உள்ளது.   அதற்கு தேர்தல் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வரும் பொழுது அந்தக் குளறுபடிகளால் ஆதாயம் அடைந்த கட்சிகள் அதை எதிர்த்து குரல் கொடுக்கின்றன. இவர்கள் சொல்வது போல் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்தால் அவற்றை ஆதாரத்தோடு பொதுவெளியிலும், தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் முறையிடலாம்.  வாக்காளர் பட்டியலில் ஒரே முகவரியில் பல வாக்காளர்க...

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

Image
  அரசியலைப் பொருத்தவரை எல்லா அரசியல்வாதிகளும் பெரும்பாலும் சுயநலவாதிகளாகவே இருப்பார்.  பல அரசியல்வாதிகளும் தாங்கள் இருந்த கட்சியிலிருந்து வேறு ஒரு கட்சிகளுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான்.  அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அவர்களை பொருத்தவரையில் அவர் எம்ஜிஆர் காலம் தொட்டு எம்ஜிஆரின் தீவிர விசுவாசியாகவும் அதன்பின் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் எல்லோராலும் அறியப்பட்டவர். அவரின் விசுவாசத்தை பார்த்து தான் ஜெயலலிதாவுக்கு இக்கட்டான சூழ்நிலையில் அவரின் முதல்வராக்கி அரசையும் கட்சியையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் அதே விசுவாசத்தோடு கண்ணியத்தோடும் மீண்டும் ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.  இதனால் அதிமுகவை பொறுத்தவரை ஓ பன்னீர்செல்வம் சிறந்த விசுவாசி  என்பது அனைவருக்கும் தெரியும்.  ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பின் சசிகலா கட்சியை கைப்பற்ற நினைத்தபோது அதற்கு எதிராக போர் போடி தூக்கிட்டு தர்மயுத்தம் செய்ததிலிருந்து ஆரம்பித்தது அவரது வீழ்ச்சி.  ஓபிஎஸ்ஐ பொறுத்த வரை அவர் ஒரு சிறந்த நிர்வாகி இல்லை என்பது அதிமுக கட்சியின் தொண்டர்களை கணித்தது. அதன...

திமுக அரசு அடிப்படை பிரச்சனைகளையே தீர்க்க முடியாமல் திணறுவது ஏன்?

Image
  திமுக ஆட்சியில் தொடர்ந்து அடிப்படையாக மக்களுக்கு தேவையானவற்றை சரியாக செய்வதில்லை என்று குற்றச்சாட்டு பல மாதங்களாக எழுப்பப்பட்டு வருகிறது.  மற்ற எந்த ஆட்சிகளிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சியில் மட்டும் ஏன் இந்த அளவிற்கு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது என்பதை ஆராய்ந்த போது, திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி விட்டது. தமிழ்நாட்டின் நிதி நிலைமையைப் பற்றி அறியாமல் தங்கள் வசதிக்கேற்ப வாக்குறுதிகளை அளித்ததன் விளைவு தற்போது மிகுந்த அதிருப்தியில் திமுக அரசு உள்ளது.  அது மட்டுமல்லாது திமுகவில் இருக்கும் பல அமைச்சர்கள் வயது மூப்பின் காரணமாக தங்கள் பணிகளை சரியாக செய்ய முடிவதில்லை என்ற கருத்துக்களும் நிலவுகின்றன. மேலும் திமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அனைவரும் தங்களுக்கான நலன்களையும் வருமானத்தையும் பார்ப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.  இந்த திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் பலரும் திமுகவின் தலைமைக்கும் அமைச்சர்களுக்கும் சாதகமாக செயல்படுவ...

காங்கிரஸ் கட்சியின் தொடர் பின்னடைவுகளுக்கு காரணம் என்ன?

Image
  இந்தியாவில் சுதந்திர காலத்திற்கு முன்பே தொடங்கப்பட்ட கட்சி காங்கிரஸ் என்பது அனைவரும் அறிந்தது.   காங்கிரஸ் கட்சியின் பல மூத்த தலைவர்கள் சக்தி வாய்ந்த நபர்கள் இருந்ததால்  ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்து வந்தது.  ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. அதற்குக் காரணம் அக்கா செயின் தலைமையில் ஒரு ஸ்த்திரதன்மை இல்லை. ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு பின் காங்கிரஸில் சரியான ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை. அக்கட்சியை  சரியான வழியில் வழி நடத்த தலைமையில் சரியான ஆள் இல்லாததோடு மட்டுமல்லாமல் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்களும் கட்சியை பலப்படுத்தும் நோக்கோடு செயல்படவில்லை. மேலும் பல ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்ததால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் அடிமட்ட தொண்டர்களுடன் சரியான தொடர்பில் இல்லாததோடு மக்களிடமிருந்தும் அன்னியப்பட்டு விட்டனர்.  அதுமட்டுமல்லாமல் அவர்கள் ஆட்சியில் இருந்த பொழுது இந்தியாவின் முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தது. எ...

உதயநிதிக்கு ஆப்பு அடிப்பது திமுகவினரே தானா?

Image
 தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க கட்சிகளில் ஒன்று திமுக ஆகும். திராவிட சிந்தாந்தத்தை முன்வைத்து அண்ணா அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும்.  அண்ணாவின் மறைவிற்கு பின் அவருடன் பல மூத்த தலைவர்கள் கட்சி ஆரம்பிக்க உதவியவர்கள் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி திரு கருணாநிதி அவர்கள் இந்தக் கட்சியை கைப்பற்றினார். அன்று முதல் இன்று வரை அவரது குடும்பமே திமுக கட்சி என்று ஆகிவிட்டது.  தற்போது திமுகவின் உதயநிதியை முன்னிறுத்தி கட்சியில் பல பணிகள் நடந்து வருகின்றன. அவர் துணை முதலமைச்சர் ஆக இருப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் முதலமைச்சராகவும் வாய்ப்பு வரப்போகிறது  என்கிற செய்திகளும் வந்து கொண்டுள்ளன.  இந்நிலையில் திமுகவில் இருக்கும் சில மூத்த சீனியர் தலைவர்களுக்கும் அக்கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஒரு பகுதியினர் இந்த வாரிசு அரசியலில் சில வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டு அதற்கு உடன் உள்ளனர் என்பது அக்கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் மூலமாக தெரிய வந்தது.  இதனால் திமுகவில் உதயநிதியின் செயல்பாடுகள் பற்றி பின் தொடர்ந்து அவர் செய்யும்...

தமிழகத்தில் மாணவர்களின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது

Image
தமிழ்நாடு எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது.  தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டம்,மத்திய சிபிஎஸ்இ பாடத்திட்டம் மற்றும் இன்டர்நேஷனல் பள்ளிகளின் பாடத்திட்டம் என பல பிரிவுகளில் பள்ளிகள் இயங்கி வருகின்றன.  இதில் மாநில பாடத்திட்ட மொழிகளில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால் சிபிஎஸ்சி மற்ற பாடத்திட்டங்கள் படிக்கும் பள்ளிகளில் தமிழ் ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழியாக ஒன்றை தேர்ந்தெடுக்க படிக்கவும் முடியும்.  தற்போது நம் பொதிகை டைம்ஸ் இதழ் சார்பாக சில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்து உரையாடிய பொழுது அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருந்தது.   தமிழ்நாட்டில் படிக்கும் இன்றைய தலைமுறை மாணவர்கள் பலருக்கும் தமிழை சரியாக எழுத படிக்க கூட தெரியவில்லை என்பது நமக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. தமிழ்நாட்டில் இங்கு சில அரசியல் கட்சிகள் தமிழை வளர்ப்போம், தமிழ் தான் உயிர் மூச்சு என்று வசனம் எல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தமிழ் பயின்று கொண்டு இருக்கும் மாணவர்களுக்...

அமேசான் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலைக்கு ஆபத்தா?

Image
  உலகெங்கும் மக்கள் தற்போது பெரும்பாலான பொருட்களை வீட்டில் உட்கார்ந்து கொண்டே ஆன்லைன் மூலம் வாங்குவது விரும்புகின்றனர்.  இது போன்ற ஆன்லைன் விற்பனைத் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது அமேசான். உலகம் முழுவதிலும் அமேசான் நிறுவனம் ஆன்லைன் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. தற்போது ஆர்டர் செய்யும் பொருட்களை அந்தந்த பகுதிகளில் டெலிவரி அமேசான் நிறுவனம் டெலிவரி பார்ட்னர்களாக பலரையும் வேலைக்கான அமர்த்தி உள்ளது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.  ஆனால் தற்போது அமேசான் நிறுவனம் தனது டெலிவரி வேலைகளை செய்ய செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பத்துடன் கூடிய மென்பொருட்களின் மூலம் ட்ரோன்கள் வழியாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய ஏற்பாடு செய்து வருகிறது.  இதன் மூலம் நிறுவனத்திற்கு டெலிவரி பார்ட்னர்களுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகைகள் மிச்சம் ஆவதோடு டெலிவரி பார்ட்னர்கள் வழியாக வரும் பல பிரச்சனைகளும் தவிர்க்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் பொருட்களை வழங்க முடியும் என்று நிறுவனம் கருதுகிறது.  இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு பரிபோகக் கூடிய ...

திமுகவை கர்மா பின் தொடர்கிறதா?

Image
 திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது செய்தி ஊடகங்கள் அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு பிண அரசியல் பண அரசியல் என எல்லா வகையிலும் ஆளுங்கட்சியை குறை சொல்லி அரசியல் செய்து கொண்டிருந்தனர்.  அப்படி எல்லா விதத்திலும் அரசியல் செய்து அதிமுகவை வில்லன் போல் சித்தரித்து நாங்கள் ஆட்சிக்கு வந்த நாட்டில் பாலாறும் தேன்ஆறும் ஓடும் என்று மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர்.  தமிழில் ஒரு பழமொழி உண்டு முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல தற்போது திமுக எதையெல்லாம் வைத்த அரசியல் செய்கிறதோ அதே போல் பிரச்சனைகள் அவர்கள் ஆட்சியிலும் நடக்கிறது. இதைத்தான் கர்மா பின் தொடர்தல் என்று கூறுவர்.  எடுத்துக்காட்டாக  சாத்தான்குளம் ஜெயராஜ் பெனிக்ஸ் லாக்கப் மரணத்தை வைத்து பெருமளவில் பினார அரசியல் செய்தது திமுக.  அதேபோல் திமுக ஆட்சியில் அஜித்குமார் கொலை நடந்தது. ஆனால் இப்போதும் ஊடகங்களை வைத்து அதை திசை திருப்ப பல வகைகள் என்னும் திமுக அரசின் முயற்சி செய்து வருகிறது.  அடுத்ததாக   அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்து கனிமொழி உள்ளிட்ட...

தமிழகத்தில் இன்றைய இளைய தலைமுறை அரசியல் தலைவர்களில் யார் தகுதியானவர்?

Image
 தமிழக அரசியல் களம் தற்போது இளைஞர்களை சுற்றி நடந்து வருகிறது.  தமிழகத்திலும் முதல் முறை வாக்களிக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ள நிலையில் அவர்களின் மனம் கவர்ந்த தலைவர் யார் என்ற கோணத்தில் நாம் இளைஞர்களுடன் கலந்தாலோசித்த பொழுது அவர்களின் எதிர்பார்ப்பு இளம் தலைவர்கள் பற்றி தான் இருந்தது.  ஒருவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்கள் ஆகவும் அடுத்தவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் திரு அண்ணாமலை அவர்களாகவும் திமுகவின் இளம் தலைமுறை தலைவராக இளைஞர்களின் தேர்வாக உள்ளது.  இன்றைய தமிழக அரசியல் முழுவதும் இவர்கள் மூவரை சுற்றிய நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  நாம் பொதிகை டைம்ஸ் இதழ் நிருபர்கள் இளைஞர்களுடன் கலந்து ஆலோசித்த பொழுது அவர்கள் கூறிய சில கருத்துக்கள் அடிப்படையில் யாருக்கு எப்படி வாய்ப்புகள் உள்ளது என்பதை பற்றி விவரத்தை பார்க்கலாம்.  நடிகர் விஜய் அவர்களைப் பொறுத்தவரை தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியின் மூலம் தமிழக முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்களை தன்வசம் வைத்துள்ளார். ஆனால் அவரது தமிழக வெற்றி கழகத்தில் ஒரு சரியான கட்டமைப்போ, திட்...

இந்தியர்களுக்கு அனுதாபங்கள்( சகிப்புத்தன்மை) இல்லை இளைஞர் வீடியோ வைரல்.

Image
 தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு இளைஞர் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.  அதில் அவர் இந்தியர்களுக்கு மற்றவர்கள் மீது அனுதாபம் இல்லை பெரும்பாலும் இந்தியர்கள் அனைவரும் சுயநலம் சார்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்க்கும்பொழுது அவர் சொல்வது எந்த அளவு உண்மை என்பது மக்களுக்குப் புரியவரும். அடுத்த தலைமுறை சிறப்பாக வாழ நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.   எங்கள் பொதிகை டைம்ஸ் நியூஸ் டிஜிட்டல் இதழை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்கள் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பெட்டியில் தெரிவிக்கவும். .

கலாச்சாரத்தை சீரழிக்கும் தொலைக்காட்சி

Image
  மக்களின் பொழுதுபோக்கு சாதனங்களில் முக்கியமான ஒன்றாக திகழ்வது தொலைக்காட்சி.  தற்போது பல தொலைக்காட்சி தனியார் தொலைக்காட்சியில் நிறுவனங்கள் செயற்கைக்கோள் மூலமாக தங்கள் ஒளிபரப்பை செய்து வருகின்றன.  அப்படி நடத்தப்படும் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் டிஆர்பி ஒன்றையே குறிக்கோளாக வைத்து மக்களுக்கு இதுபோன்ற கருத்துக் களை தெரிவிக்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல் தங்கள் சுயநலத்திற்காக கேவலமான சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.  குறிப்பாக தற்போது பிரபலமாகி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மிகவும் அருவருக்கத்தக்க வகையிலும் மக்களின் எண்ணங்களை வக்கிரமாக்கும் வகையிலும் அமைந்துள்ளது.  தன் வீட்டில் இருந்து கொண்டு அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை ஜன்னல் வழியாக பார்ப்பது போன்ற கேவலமான நிகழ்ச்சி. இதையும் ஒரு கூட்டம் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவர்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்கள் வேண்டும் என்று கருத்து வேறுபாடுகள் வரும் வகையிலும் மோதல்கள் வரும் வகையிலும் தேர்ந்தெடுப்பதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் அதற்கு இவர்களே சாட்சி அமைப்புகளையும் ஏற்படுத்தித் த...

பூமர் அங்கிள்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Image
  தற்போதுள்ள இளைய தலைமுறை தங்களுக்கு முந்தைய தலைமுறைகள் ஏதாவது அவர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்களை பூமர் அங்கிள் என்று அழைக்கின்றனர்.  இவ்வாறு இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு அறிவுரை சொல்லும் பூமர் அங்கிள்களின்  உலகம் எப்படி இருக்கும்?  சென்ற தலைமுறை பூ மரங்கள் பெரும்பாலும் தங்கள் இள வயது பருவத்தில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருப்பார்கள். இதனால் அவர்களுக்கு சிறுவயது பருவத்திலும் சரி அவர்கள் வாலிப வயதானத்திலும் சரி அவர்கள் ஆசைப்பட்ட பல பொருட்கள் அவர்களுக்கு கிடைத்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதுமட்டுமல்லாமல் அன்றைய தலைமுறை பெரியவர்கள் இவர்களுக்கு குடும்பத்தின் நிலைமை மற்றும் பொருளாதார நிலமை ஆகியவற்றை எடுத்துச் சொல்லி உணர்த்தி பொறுப்புடன் வளர்த்தனர்.  இதனால் அவர்கள் வளர்ந்து பொருளாதார ரீதியாகவும் ஒரு நல்ல நிலையை அடைந்த பின்பும் அவர்களுக்கு சிறுவயதில் அவர்கள் பட்ட  கஷ்டங்களும் தாங்கள் கடந்து வந்த பாதைகளையும் மனதில் கொண்டு அதிகம் செலவு செய்யாதவர்களாகவும் குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும் ...

தேசிய ஜனநாயக கூட்டணியில் திரு அண்ணாமலை அவர்களின் நிலை என்ன?

Image
  தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய கூட்டணிகளை வலு சேர்க்கும் விதத்திலும் மக்களிடம் பிரச்சாரங்களிலும் தீவிரமாக ஈடுபட தொடங்கி விட்டனர்.  இந்நிலையில் பெரும்பாலான கட்சிகளில் ஒரு கட்சி அரசியலும் சூடு பிடித்துள்ளது.  தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளாக உள்ள அதிமுக பாஜக இரு கட்சிகளிலும்  உட்கட்சி பிரச்சனைகளும் அதிகார போட்டியும் மேலோங்கி உள்ளது.  அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு வைத்த முதல் நிபந்தனையாக கூறப்படுவது திரு அண்ணாமலை அவர்களை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது.  ஏனெனில் அண்ணாமலை தமிழக பாஜகவை பெருமளவில் வளர்ச்சி இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் தற்போது அரசியலில் பாஜகவின் முகமாக அனைவராலும் அறியப்படுபவர் திரு அண்ணாமலை அவர்கள். இதுபோன்று மாற்றுக் கட்சியில் ஒரு தலைவர் உருவானால் அது பின்னாலே நமக்கு பிரச்சனையாக முடியும் என்று யோசித்ததாலே இது போன்ற ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அதிமுக போன்ற வேறு கட்சியில் இருப்பவர்கள் அண்ணாமலை பார்த்து பயப்படுவது நியாயம். ஆனால் பாஜகவில் இரு...

பொதிகை டைம்ஸ் நேயர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Image
  எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதனை ஆதரித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.  இந்த இனிய நாள் முதல் உங்கள் வாழ்க்கையில் புதிய ஒளியும் சந்தோஷமும் வளர்ச்சியும் பெற்று மென்மேலும் உயர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.  நன்றி.  எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழை சப்ஸ்கிரைப் செய்து வரும் தகவல்களை படித்து உங்கள் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ்களில் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் அறநிலையத்துறை குளறுபடிகள்

Image
  தென்காசி மாவட்டத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோயிலில் சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக செய்யப்பட்டது.  இந்நிலையை தற்போது தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கோவிலின் பிரகாரத்தில் மழைநீர் வடிகால்கள் சரியாக அமைக்காததால் மழைநீர்  தேங்கியுள்ளது. இதனால் பக்தர்கள் பலரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். கும்பாபிஷேகத்தின் போது திருப்பணிகளுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் அவை சரியாக முறையாக செலவிடப்படவில்லை என்று பக்தர்கள் சார்பில் அப்போதே பிரச்சனை எழுப்பப்பட்டது. அது தற்போது அவர்கள் செய்துள்ள வேலைகள் எதுவுமே தரமானதாகவும் நேர்த்தியானதாகவும் இல்லை என்பது தற்போது வெட்ட வெளிச்சம் ஆகி உள்ளது.  அதுமட்டுமல்லாது தற்போது மழை நீர் வடிவ வழியில்லாததால் பக்தர்கள் பிரகாரம் சுற்றிவர போடப்பட்ட சிமெண்ட் பாதையை உடைத்து தற்போது மீண்டும் வேலை செய்து வருகின்றனர். அறநிலையதுறை இவற்றையெல்லாம் முன்பே சரியாக கவனித்திருந்தால் இதுபோன்று பக்தர்களுக்கு தொந்தரவு இல்லாமலும் கோவிலின் நிதி சரியான முறையில் செலவு செய்யப்பட்டிருக்கும்.  தற்போது...

திமுக அரசில் ஏன் இவ்வளவு குளறுபடிகள்?

Image
 நம் தமிழ்நாடு சுதந்திரம் வாங்கியதும் விடுதலை பல நல்ல தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு பொருளாதாரத்திலும் கல்வி அறிவிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது.  குறிப்பாக காமராஜர் காலத்தில் நீர் மேலாண்மை செய்ய பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. பிள்ளைகள் கல்வி கற்க மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாது பல புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டது. கல்லூரிகள் திறக்கப்பட்டது. படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற அரசின் சலுகையுடன்  பல தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டது.   அதன் பின்பு வந்த பல ஆட்சியாளர்களும் தமிழகத்தை தொடர்ந்து வளர்ந்து வரும் மாநிலமாகவே சிறந்த நிர்வாகத்தை செய்து கொண்டிருந்தனர்.  ஆனால் தற்போது சில நாட்களாக திமுக தலைமையின் கீழ் நடைபெற்று வரும் பல நிர்வாக குறைபாடுகள் நடைபெற்று வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  முதலாவதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் அவர்கள் மக்களை தூண்டிவிட்டு கையாண்ட விதத்தால் அந்த நிறுவனம் மூடப்பட்டதோடு அங்கு பல அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றன. ஆனால் தற்பொழுது அப்பகு...

நாம் தமிழர் கட்சியில் நடப்பது என்ன?

Image
 தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே தமிழ் தேசியம், சுயசார்பு பொருளாதாரம் போன்றவற்றில் உறுதியாக நின்று போராடி வரும் அமைப்புகளில் நாம் தமிழர் கட்சி முக்கியமான ஒன்றாகும்.  இதில் சீமான் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து முன்னின்று நடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை ஏராளமான இளைஞர்கள் தன்னார்வத்துடன் களப்பணி  செய்து வருகின்றனர்.  இக்கட்சியின் மூலம் ஏராளமான புதிய இளைஞர்கள் அரசியல் தலைவராக உருவெடுத்து உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.  நாம் தமிழர் கட்சியில் இருந்து களப்பணியாற்றி இரண்டாம் கட்ட தலைவர்களாக முன்னேறிய ராஜீவ் காந்தி கல்யாண சுந்தரம் காளியம்மாள் போன்ற பலரும் தமிழக மக்கள் பலராலும் அறியப்படுபவர்கள்.  ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் இக்கட்சியை விட்டு வெளியேறி வெவ்வேறு புதிய கட்சிகளின் இணைந்துள்ளனர் சிலர் இணைய தயாராக உள்ளனர். நாம் தமிழர் கட்சி நன்றாக வளர்ந்து வரும் நிலையிலும் இது போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களும் பலராலும் அறியப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் நிலையிலும் ஏன் இவர்கள் அக்கட்சியினை விட்டு வெளியேறினார்கள் என்பது அனைவரும் கேள்வியாக உள்...

சிங்கப்பூரின் லீ க்வான் யூ போன்று இந்தியாவிற்கு மோடியா?

Image
 சிங்கப்பூரில் மலேசியா தனி நாடாக அறிவிக்கும் போது அந்த நாட்டில் வறுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஒரு சிறிய நகரத்து அளவே உள்ள சிங்கப்பூர் வறுமையில் இருந்து மீண்டு இன்று உலக நாடுகள் அண்ணாந்து பார்க்கும் வளர்ந்துள்ளது.  இப்படி அந்த நாடு மிகப்பெரும் வளர்ச்சி அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்த அரசியல் தலைவர் லீ க்வான் யூ ஆவார்.  சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த போது அந்நாட்டின் பிரதமராக இருந்த லீ க்வான் யூ அந்நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஒரே எண்ணத்தில் வேலை செய்தார். நாட்டில் ஊழல்கள் இல்லாமல் அறவே ஒழித்தார்.  எந்த ஒரு வளமும் இல்லாத சிங்கப்பூர் நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்காக அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்த்தார்.  சிங்கப்பூர் நாடு 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் தலைமையில் கீழ் சிறப்பாக முன்னேறியது. அவருடைய சிந்தனை செயல் அனைத்தும் நாட்டை முன்னேற்றுவதை பற்றிய இருந்தது.  இதனால் அவர் எதிர்த்து செயல்பட்டு வந்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றரை சதவீதத்திற்கும் கீழான மக்கள் ஆதரவையே பெற முடிந்தது.  இந்தியாவில் தற்போது நரேந்திர மோடி அவர்களும் இது போன்...

அழிவு பாதையில் இருந்து மீண்டு எழுமா தமிழ் சினிமா?

Image
 மக்களின் பொழுது வாக்கு சாதனங்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது சினிமா.  தமிழ் சினிமா என்பது பல வருட பாரம்பரியம் கொண்டதாக இருந்து வருகிறது. தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரும் மிகப்பெரிய நட்சத்திரங்களாக உலா வர தமிழ் சினிமா காரணமாக இருந்துள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த காலங்களில் பக்தி படங்கள் குடும்ப படங்கள் பொழுதுபோக்கு படங்கள் காமெடி படங்கள் சென்டிமென்ட் படங்கள் ஆக்ஷன் படங்கள் என்ன பல வகைப்பட்ட திரைப்படங்கள் வந்துள்ளன.   ஆனால் சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் கற்பனை வறட்சி என்பது தலை விரித்து ஆடுகிறது. சமீப காலங்களில் வந்துள்ள இயக்குனர்கள் அனைவரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தங்கள் திறமைகளை நம்புவதை விட தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் பிரம்மாண்டங்களை காண்பித்து வெற்றி பெற விரும்புகின்றனர். கதையோட்டத்தை பற்றியும் நல்ல திரைக்கதை பற்றியும் சரியான போதிய புரிதல் இல்லாதவர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் வீட்டில் பப்ஜி கேம் விளையாடுவது போன்று திரைப்படங்களை உருவாக்க விரும்புகின்றனர்.  ...

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

Image
 தமிழகத்தில் பங்கு சந்தை முதலீட்டில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் தெரிந்த ஒரு முக்கிய நபர் என்றால் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் தான்.  இவர் யூடியூப் வலைத்தளங்களில் மணி பேச்சு என்ற  பங்குச்சந்தை சம்பந்தமான வலையொலி மூலம் தனது கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.  இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் பலரும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பங்குச்சந்ததி மூவி எத்தனை சம்பந்தமான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதோடு முதலீடு சம்பந்தப்பட்ட அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.   இவர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகறது. இதனால் பங்குச்சந்தையோடு சேர்த்து தனது அரசியல் கருத்துக்களையும் இதில் புகுத்தி வருவார்.  இதனால் தற்போது மக்களிடையே திருப்தி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் பரிந்துரை செய்த பல பங்குகள் மிகுந்த வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் அதைப்பற்றி அவர் எந்த கருத்துக்களும் தெரிவிக்காமல் அவருக்கு சாதகமாக எந்த பங்குகள் செயல்பட்டு இருக்கிறதோ அதை பற்றி மட்டுமே பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போது தங்கம் உச்சத்தில...

சமூக அக்கறை இல்லாதவரா? நடிகர் ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த்

Image
தமிழ் சினிமாவில் பலரும் கதாநாயகனாக நடித்து வந்தாலும் வெகு சிலரே மக்களின் அபிமான கதாநாயகர்களாக அறியப்படுகின்றனர்.  அவ்வாறு தமிழ் சினிமாவில் பெரிதாக ரசிகர் கூட்டத்தைக் கொண்ட பலர் இருந்தாலும் அவர்களில் முக்கியமானவராக கருதப்படுபவர் திரு ரஜினிகாந்த் அவர்கள்.  இவர் கடந்த பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் தலைமுறைகளை தாண்டி சூப்பர் ஸ்டாராக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். தமிழகத்தில் இவர் கூறிய கருத்துகளால் கடந்த காலங்களில் அரசியல் மாற்றமே உருவாகியுள்ளது. இவர் அரசியலில் வந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று ஒரு தரப்பு மக்களால் நம்பப்பட்டது. அவர் மீது மக்களுக்கு அப்படி ஒரு அபிமானம் இருந்து வருகிறது.   ஆனால் அவர் தனக்கு அரசியல் சரிவராது என்பதும் அரசியலில் பல நேர்மை மற்ற வேலைகளும் குள்ளநரித்தனங்களும் செய்ய வேண்டியது இருக்கும் என்பதும் அதுமட்டுமல்லாது தன்னை கவிழ்க்க மிகப்பெரிய சாதிகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்து பல அரசியல் கட்சிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்தார். அதில் பலரும் ரஜினி பயந்துவிட்டதாகவும் கோழை ...

தமிழகத்தில் தனித்தன்மையை இழக்கிறதா? பாஜக

Image
 தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் நிகழ்வுகளை வேகமாக நகர்த்தி வருகின்றன.  இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூரில் தமிழக வெற்றி கழகம் நடத்திய கூட்டத்தில் நடைபெற்ற தெரியாத சம்பவத்தை அடுத்து அனைத்து அரசியல் கட்சிகளிலும் அரசியலும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் கரூர் சம்பவத்தை வைத்து எப்படி எல்லாம் அரசியல் செய்ய வேண்டும் என்று கட்டம் கட்டி வருகின்றனர்.  இதில் தமிழக பாஜக விஜய்க்கு ஆதரவாக களமாடி வருகிறது. இச்சம்பவத்திற்கு பொறுப்பாக வேண்டியவர்களில் விஜய்யும் ஒரு முக்கிய பொறுப்பாளியாவார். அரசு எந்த அளவுக்கு இந்த சம்பவத்திற்கு பொறுப்போ அதே அளவிற்கு விஜய்க்கும் பொறுப்புண்டு என்பது மக்களின் கருத்தாக உள்ளது.  ஆனால் பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை எப்படியாவது விஜயை தங்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அவருக்கு ஆதரவாக செயல்பட்டு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் சாமானிய மக்களுக்கும் சில பாஜக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கு...